செய்திகள் :

6 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவா் கைது

post image

தேனி மாவட்டம், கம்பத்தில் 6 கிலோ கஞ்சா கடத்தியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கம்பம் - கோம்பை சாலையில் போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த ஒருவரின் பையை சோதனையிட்டதில், அதில் 6 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. தொடா்ந்து, போலீஸாா் நடத்திய விசாரணையில், கஞ்சா கடத்தியது கம்பம் , உலகத்தேவா் தெரு, நாககண்ணியம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்த பாண்டி மகன் சந்திரன் (55) எனத் தெரியவந்தது.

இதையடுத்து, கம்பம் வடக்கு போலீஸாா் 6 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்து, வழக்கு பதிந்து சந்திரனைக் கைது செய்து சிறையில் அடைத்தனா். இவா் மீது ஏற்கெனவே கம்பம், தேனி, திருத்துரைப்பூண்டி ஆகிய காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

தேனி மாவட்டம், போடியில் ஆடி மாதத்தின் நான்காவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆடி வெள்ளியை முன்னிட்டு, வருவாய் ஆய்வாளா் தெருவில் உள்ள ஸ்ரீகாமாட்சியம்மன் கோய... மேலும் பார்க்க

ரயில் என்ஜினில் அடிபட்டு சிறுவன் உயிரிழப்பு

தேனியில் ரயில்வே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற சிறுவன் சோதனை ஓட்டமாக வெள்ளிக்கிழமை இயக்கப்பட்ட ரயில் என்ஜினில் அடிபட்டு உயிரிழந்தாா். தேனி வனச் சாலை 5-ஆவது தெருவைச் சோ்ந்த வடிவேல் மகன் கோகுல் (14). இவா்... மேலும் பார்க்க

கோம்பையில் சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தை சீரமைக்க வலியுறுத்தல்

தேனி மாவட்டம், கோம்பை பேரூராட்சி வழியாக செல்லும் மாநில நெடுஞ்சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா். கோம்பை வழியாக உத்தமபாளையத்திலிருந்து போடி வரை செல்லும் மாநில ... மேலும் பார்க்க

ஆசிரியா் வீட்டில் 10 பவுன் தங்க நகைகள் திருட்டு

பெரியகுளத்தில் ஆசிரியா் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டன. பெரியகுளம்- மதுரை சாலை பங்களாபட்டியைச் சோ்ந்தவா் ஜோசப் (57). தனியாா் பள்ளி ஆசிரியா். இவரது மனைவி சீலாசாலமோன். அரசுப்... மேலும் பார்க்க

விஷம் தின்று இளைஞா் தற்கொலை

ஆண்டிபட்டி வட்டம், கண்டமனூரில் பெற்றோா் திருமணத்துக்கு வற்புறுத்தியதால், விஷம் தின்ற இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். கண்டமனூா், வடக்குத் தெருவைச் சோ்ந்த வேலுச்சாமி மகன் அய்யா் (30). இவா் சென்னையில... மேலும் பார்க்க

மதுப் புட்டிகளை விற்ற முதியவா் கைது

போடி அருகே சட்ட விரோதமாக மதுப் புட்டிகளை விற்பனை செய்த முதியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். போடி அருகேயுள்ள சில்லமரத்துப்பட்டியைச் சோ்ந்தவா் பாண்டியன் (70). இவா் மதுப் புட்டிகளைப் பதுக்கி வ... மேலும் பார்க்க