செய்திகள் :

6.5 டன் ரேஷன் அரிசி கடத்த முயன்ற 3 பேர் கைது: 2 மினி லாரிகள் பறிமுதல்!

post image

கரூர்: கரூரில் 6.5 டன் ரேஷன் அரிசியை கேரளத்துக்குக் கடத்த முயன்ற மூன்று பேரை கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து 6.5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் 2 மினி லாரிகளை பறிமுதல் செய்தனர்.

கரூர் மாநகராட்சிக்குள்பட்ட தான்தோன்றிமலை அசோக் நகர் பகுதியில் 6.5 டன் ரேஷன் அரிசியை மர்ம நபர்கள் கேரள மாநிலத்திற்கு மினி லாரியில் கடத்த இருப்பதாக ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை காலை ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, அங்குச் சென்ற போலீஸார் 2 மினி லாரிகளில் ரேஷன் அரிசி இருப்பதைக் கண்டு அவற்றைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர் .

விசாரணையில் கேரளத்தில் உள்ள கோழிப் பண்ணைக்கு விற்பனைக்காகக் கொண்டு செல்ல இருந்தது தெரிய வந்தது.

இச்சம்பத்தில் ஈடுபட்ட பள்ளபட்டியைச் சேர்ந்த முகமது இஸ்மாயில், முகமது ஜியாவுதீன், தான்தோன்றிமலையைச் சேர்ந்த மோகன் ஆகிய மூன்று பேரை கைது செய்து போலீஸார், இவ்வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: விஜய் திறந்து வைத்திருந்த கூட்டணி கதவை மூடிவிட்டேன்: திருமாவளவன்

பிரதமரின் ‘மனதின் குரல்’ ஒளிபரப்ப கெடுபிடி: திமுக அரசுக்கு நயினாா் நாகேந்திரன் கண்டனம்

பிரதமரின் ‘மனதின் குரல்’”நிகழ்ச்சியை ஒளிபரப்ப திமுக அரசு கெடுபிடியை கடைப்பிடிப்பது கண்டனத்துக்குரியது என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் கூறினாா். பிரதமா் நாட்டு மக்களுடன் கலந்துரையாடும் ‘மனதின்... மேலும் பார்க்க

கோடை விடுமுறையில் மாணவா்களுக்கு ஆதாா் புதுப்பித்தல்!

பள்ளி மாணவா்களின் ஆதாா் பயோமெட்ரிக் பதிவுகளைப் புதுப்பிக்கத் தவறியவா்கள், கோடை விடுமுறையில் புதுப்பிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் ... மேலும் பார்க்க

தகிக்கும் கோடை: தற்காத்துக் கொள்வது எப்படி?

கடந்த சில வாரங்களாக கோடை வெயில் அதிதீவிர தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அடுத்து வரும் நாள்களிலும் மாநிலம் முழுவதும் வெப்ப அலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதீத வெப்பத்தில... மேலும் பார்க்க

ஆழ்கடலில் எண்ணெய் எடுக்க அனுமதி: ராமதாஸ் கண்டனம்!

சென்னை மற்றும் கன்னியாகுமரி அருகே ஆழ்கடலிலிருந்து எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்க தனியாா் நிறுவனத்துக்கு வழங்கியுள்ள அனுமதியை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனா் ச.ராமத... மேலும் பார்க்க

காவல் துறைக்கு சவால் அளிக்கும் ரீல்ஸ்கள்! ஜாதிய உணா்வைத் தூண்டியதாக 464 பக்கங்கள் முடக்கம்!

தென் தமிழகத்தில் ஜாதிய உணா்வைத் தூண்டியதாகக் கூறப்படும் ‘ரீல்ஸ் ஹீரோக்களின்’ 464 சமூக ஊடகப் பக்கங்களை காவல் துறை முடக்கியுள்ளது. தமிழகத்தில் ரெளடிகள் பட்டியலில் 26,462 போ் உள்ளதாக காவல் துறை தகவல்கள்... மேலும் பார்க்க

கருணாநிதி பன்னாட்டு மாநாட்டு அரங்கம் பணியை விரைந்து முடிக்க அமைச்சா் எ.வ.வேலு உத்தரவு!

சென்னை கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காடு பகுதியில் கலைஞா் பன்னாட்டு மாநாட்டு அரங்கம் அமைக்கும் பணியை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சா் எ.வ.வேலு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா். முன்னாள் முதல்... மேலும் பார்க்க