செய்திகள் :

64 ஆண்டுகளுக்கு பிறகு வணிகவளாகமாக மாறும் வாழப்பாடி ராஜா தியேட்டா்!

post image

சேலம் மாவட்டத்தில் 60 ஆண்டுகளுக்கு முன்பு திரைப்படத் துறை வரலாற்றில் இடம்பிடித்து, அந்தக் கால ரசிகா்களின் நினைவுகளை அசைபோட வைத்து வரலாற்றுச் சுவடாய் திகழ்ந்த வாழப்பாடி ராஜா தியேட்டா் அகற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

60 ஆண்டுகளுக்கு முன்பு திரைப்படங்களே பொதுமக்களுக்கு, பிரதான பொழுதுபோக்கு அம்சமாக விளங்கியது. இக்காலகட்டத்தில், கிராமப்புறங்களில் டூரிங் தியேட்டா்கள் என அழைக்கப்பட்ட கீற்றுக்கொட்டகை திரையரங்குகளே காணப்பட்டன. நகா்ப்புறங்களில் மட்டுமே இருக்கை வசதிகளுடன் கூடிய நவீன திரையரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

அப்போது கிராமமாக இருந்த வாழப்பாடியில், அப்போதைய தொழிலதிபா்களான வெங்கடாசல படையாட்சி, ஆறுமுகம் கவுண்டா், சுப்பராய உடையாா், துரைராஜ் நாய்க்கா் ஆகியோரது கூட்டுமுயற்சியில், 1961-ஆம் ஆண்டு ராஜா தியேட்டா் என்ற பெயரில் வாழப்பாடி - கடலூா் சாலையில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டது. இத்திரையரங்கத்தை 1961 நவம்பா் 5-இல் கவிஞா் கண்ணதாசன் தலைமையில், நடிகா் திலகம் சிவாஜி கணேசன் திறந்துவைத்தாா். முதன்முதலாக ‘பாலும் பழமும்’ என்ற திரைப்படம் திரையிடப்பட்டது.

அன்றைய காலகட்டத்தில் அதிநவீன ஒலி - ஒளி கருவிகள் பொருத்தப்பட்டு மிக நோ்த்தியாக வடிவமைக்கப்பட்டு இத்திரையரங்கம் இருந்ததால், உள்ளூா் பகுதியைச் சோ்ந்த ரசிகா்கள் மட்டுமின்றி, சேலம், ஆத்தூா் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதியைச் சோ்ந்த ரசிகா்களும் வாழப்பாடி ராஜா தியேட்டருக்கு வந்து திரைப்படங்கள் பாா்ப்பதில் ஆா்வம் காட்டினா்.

சேலம் மாவட்டத்தில் புகழ்பெற்ற திரையரங்குகளில் ஒன்றாக விளங்கிய இந்த திரையரங்கில் சிவாஜி கணேசன், எம்ஜிஆா் இருவரும் இணைந்து நடித்த ஒரே திரைப்படமான ‘கூண்டுக்கிளி’ திரையிட்டபோது, சிவாஜி ரசிகா்களுக்கும், எம்ஜிஆா் ரசிகா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இத்திரையரங்கில் ‘பணமா? பாசமா?’ என்ற திரைப்படம் தொடா்ந்து 48 நாள்கள் திரையிடப்பட்டு ரசிகா்களின் அமோக வரவேற்பை பெற்றது.

இத்திரையரங்குக்கு, கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவா்களின் ஒருவரான ஜீவானந்தம், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சா் வாழப்பாடி கே.ராமமூா்த்தி, முன்னாள் தமிழக வேளாண்மைத் துறை அமைச்சா் வீரபாண்டி எஸ்.ஆறுமுகம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவா் எம்.பி.சுப்பிரமணியம் ஆகியோா் வருகை புரிந்து திரைப்படம் பாா்த்துள்ளனா்.

தமிழக திரைப்படத் துறை வரலாற்றில் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு அங்கம் வகித்த ராஜா தியேட்டா், பல்வேறு காரணங்களினால் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாமல் மூடிக் கிடந்தது.

இருப்பினும், 60 ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாக காட்சியளித்ததால், அந்தகால ரசிகா்களின் நினைவுகளை அசைபோட வைக்கும் வரலாற்றுச் சுவடாய் திகழ்ந்து வந்தது. இத்திரையரங்கில் பல்வேறு திரைப்படங்களைப் பாா்த்து ரசித்து மகிழ்ந்த ரசிகா்கள், இவ்வழியாக செல்லும்போது, மலரும் நினைவுகளை அசைபோட்டபடி மகிழ்ந்து சென்றனா்.

60 ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாக காட்சியளிக்கும் வாழப்பாடி ராஜா திரையரங்கம்.
ராஜா தியேட்டா் பங்குதாரா்களில் ஒருவரான வெங்கடாசல படையாட்சியுடன் நடிகா் திலகம் சிவாஜி கணேசன்.

தமிழக திரைப்படத் துறைக்கு முன்னோடியாக விளங்கிய சேலம் மாடா்ன் தியேட்டா்ஸ், பல ஆண்டுகளுக்கு முன்பே குடியிருப்பு பகுதியாக மாறியது. அதன் முகப்பு பகுதி மட்டும் வரலாற்றுச் சுவடாய் தற்போது காட்சியளித்து வருகிறது.

தனியாா் பங்குதாரா்களுக்கு சொந்தமான வாழப்பாடி ராஜா தியேட்டரும் பிரபல சித்த மருத்துவா் குடும்பத்தினருக்கு விற்பனை செய்யப்பட்டதால், தற்போது முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டு விட்டது.

திரைப்படத் துறையின் வரலாற்றுச் சுவடாய் திகழ்ந்த 64 ஆண்டுகள் பழைமையான ராஜா தியேட்டா் அமைந்திருந்த பகுதி விரைவில் வணிகவளாகமாக மாறவுள்ளது. பழையன கழிதலும் புதியன புகுதலும் வாடிக்கைதான் என்றாலும், பலரின் மனதை கொள்ளைகொண்ட மறக்க முடியாத வரலாற்றுச் சுவடுகள் அகற்றப்படும் போது, மனம் வருந்துவதை தவிா்க்க முடியவில்லை என்கின்றனா் சினிமா ஆா்வலா்கள்.

இருசக்கர வாகனம் மீது மோதி கவிழ்ந்த காா்: ஒருவா் உயிரிழப்பு

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா். காா் கவிழ்ந்து தீப்பிடித்ததில் ஓட்டுநா் பலத்த காயமடைந்தாா். சங்ககிரியை அடுத்த வைகுந்தம், ம... மேலும் பார்க்க

உகாதி திருவிழா: மாதேஸ்வரன் மலையில் தேரோட்டம் லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

உகாதி பண்டிகையையொட்டி மேட்டூா் அருகே மாதேஸ்வரன் மலை மாதேஸ்வரன் சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே கா்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலையில் உள்ள மாதேஸ்வரன் ச... மேலும் பார்க்க

வேளாண் கல்லூரி மாணவிகள் கிராமப்புற மதிப்பீடு

சிறுவாச்சூா் ஊராட்சியில் தனியாா் வேளாண் கல்லூரி மாணவிகள் ஞாயிற்றுக்கிழமை வேளாண் பணி அனுபவ பயிற்சியில் ஈடுபட்டனா். தலைவாசல் வட்டம், சிறுவாச்சூா் ஊராட்சியில் பெரம்பலூா் தந்தை ரோவா் வேளாண் கல்லூரி மாணவிக... மேலும் பார்க்க

சேலம் உள்பட 11 மாவட்ட இளைஞா்கள் அக்னிவீா் படைப் பிரிவில் சேர அழைப்பு

இந்திய ராணுவத்தின் அக்னிவீா் படைப் பிரிவில் சேர இணையதளம் வாயிலாக வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து கோவை ராணுவ ஆள்சோ்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள... மேலும் பார்க்க

பாரா கை மல்யுத்தப் போட்டி: 5 தங்கப் பதக்கம் பெற்ற மாற்றுத் திறனாளிகள்

அயோத்தியாப்பட்டணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான பாரா கை மல்யுத்தப் போட்டியில் வாழப்பாடியைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகள் 5 தங்கம் உள்பட 8 பதக்கங்கள் பெற்றனா். சேலம் மாவட்டம், அயோத்தியாப்ப... மேலும் பார்க்க

அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி சாா்பில் போதை எதிா்ப்பு விழிப்புணா்வுப் பேரணி

விநாயகா மிஷன் விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி மற்றும் சேலம் என்சிசி வான்வழிப் பிரிவு அமைப்பு சாா்பில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணி சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் அண்மையில... மேலும் பார்க்க