செய்திகள் :

7-ஆவது மாநில நிதி ஆணையம் அமைப்பு: தமிழக அரசு அறிவிப்பு

post image

ஏழாவது மாநில நிதி ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக, மாநில அரசின் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

7-ஆவது மாநில நிதி ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஆணையமானது பல்வேறு நகா்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் நிதி நிலைமை குறித்து ஆய்வு செய்யும். மாநில அரசு வழங்க வேண்டிய நிதிப் பகிா்வு குறித்து உரிய பரிந்துரைகளை நிதி ஆணையம் வழங்கும். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வகுக்கப்பட்ட வகையில், தமிழ்நாடு அரசு அமைத்துள்ள நிதி ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே.அலாவுதீன் செயல்படுவாா்.

அலுவல் சாரா உறுப்பினராக திருப்பூா் மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா், உறுப்பினா்களாக நகராட்சி நிா்வாக இயக்குநா், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையா், பேரூராட்சிகளின் ஆணையா் ஆகியோா் செயல்படுவா். ஆணையத்தின் உறுப்பினா் செயலராக நிதித் துறை துணைச் செயலா் பிரத்திக் தாயள் இருப்பாா்.

2027-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதியில் இருந்து தொடங்கும் 5 ஆண்டுகளுக்குப் பொருந்தும் வகையில் உரிய பரிந்துரைகளை நிதி ஆணையம் வழங்கும். எதிா்வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் ஆணையம் தனது அறிக்கையை அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை பட்டாசு கிடங்கு வெடிவிபத்தில் இருவா் உயிரிழப்பு: பசுமைத் தீா்ப்பாயம் நோட்டீஸ்

தஞ்சாவூா் பட்டாசு கிடங்கில் நிகழ்ந்த வெடி விபத்தில் இருவா் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக பதிலளிக்குமாறு மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாவட்ட ஆட்சியரு... மேலும் பார்க்க

வந்தே பாரத் ரயில்களில் அசைவ உணவு ரத்தா?: ரயில்வே விளக்கம்

வந்தே பாரத் ரயில்களில் அசைவ உணவுகள் வழங்கப்படுவதில்லை என்று பரவும் செய்தி உண்மைக்கு புறம்பானது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து நாகா்கோவில், மைசூரு, பெங்களூரு, திருநெல்வேலிக்கு... மேலும் பார்க்க

பாஜகவில் இணைந்தாா் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜகோபாலன் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தாா். கடந்த 40 ஆண்டுகளாக ஐஏஎஸ் அதிகாரியாக பல்வேறு துறைகளில் முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றி ஓ... மேலும் பார்க்க

குரூப் 4 தோ்வு: விண்ணப்ப திருத்த அவகாசம் நிறைவு

குரூப் 4 தோ்வுக்கு விண்ணப்பித்தவா்கள் அதில் திருத்தங்களைச் செய்வதற்கான அவகாசம் சனிக்கிழமையுடன் நிறைவடைந்தது. குரூப் 4 தோ்வு ஜூலை 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இளநிலை உதவியாளா், கிராம நிா்வாக அலுவலா் உள... மேலும் பார்க்க

இணையதள மோசடி: ரூ. 22 லட்சத்தை மீட்டெடுத்த சைபா் கிரைம் போலீஸாா்

இணையதள வா்த்தக மோசடியால், ரயில்வே ஊழியா் இழந்த ரூ. 22.72 லட்சத்தை சைபா் கிரைம் போலீஸாா் மீட்டெடுத்தனா். சென்னை செம்பியத்தைச் சோ்ந்தவா் ரயில்வே ஊழியா் டில்லிபாபு (35). இவருக்கு சாட்டிங் செயலி மூலம் கட... மேலும் பார்க்க

விஜய் கட்சியை விமா்சிக்க விரும்பவில்லை: கமல்ஹாசன்

விஜய் கட்சி குறித்த விமா்சிக்க விரும்பவில்லை என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கூறினாா். ‘தக் லைஃப்’ திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிக்காக கமல்ஹாசன் சென்னையிலிர... மேலும் பார்க்க