செய்திகள் :

70 ஆண்டுகளாக மின்சாரம் இல்லை - இருள் நீங்க போராடும் ஆனைமலை பழங்குடி மக்கள்!

post image

கோவை மாவட்டம், ஆனைமலையை சுற்றி 38 கிராமங்கள் உள்ளன. அதில் நெடுங்குன்றம் என்கிற ஒரு கிராமத்தை தவிர மற்ற கிராமங்களில் மின்சார வசதி இல்லை. இவர்கள் பலரும் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு, அப்பர் ஆழியார் போன்ற அணை கட்டுமானங்களுக்காக தங்களின்  இருப்பிடங்களை இழந்தவர்கள்.

ஆனைமலை பழங்குடி கிராமம்

அதேநேரத்தில் அவர்கள் கிராமங்களின் அருகில் உள்ள நீர்மின் நிலையங்கள், வனத்துறை அலுவலகங்கள்,  விருந்தினர் இல்லம், சுற்றுலா பகுதிகளுக்கு மின்சார வசதி வழங்கப்பட்டுள்ளது. இது அந்த மக்களின் வேதனையை மேலும் அதிகரிக்கிறது.

இதுகுறித்து பழங்குடி மக்களின் உரிமைகளுக்கான செயற்பாட்டாளர் தனராஜிடம் பேசியபோது, “கோழிக்கமுத்தி என்கிற கிராமத்தில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். அந்த வழியில் உள்ள விருந்தினர் இல்லங்களுக்கு மின்சார வசதி தரப்பட்டும், கோழிக்கமுத்தி கிராமத்தில் மின்சார வசதி தரப்படவில்லை.

தனராஜ்

கீழ்பூனாட்சி கிராமத்தில் உள்ள ஒரு பகுதி மக்கள் மின்சார வசதிக்காக கோரிக்கை வைக்கிறபோது, அங்குள்ள அதிகாரிகள் இது புலிகள் சரணாலயம் என்பதால் மின்சாரம் கொடுக்க முடியாது என்று அலட்சியமாக பதில் அளிக்கின்றனர். சமீபத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் அந்த கிராமத்திற்கு சென்று மக்கள் கோரிக்கைகளை விசாரித்து, அப்பகுதிக்கு மின்சாரம் வழங்கப்படும் என கூறினார்.

எருமைப்பாறை கிராமத்தில் அந்த மக்கள் மின்சாரம் அமைப்பதற்கான கட்டணத்தை (28 குடும்பங்கள் தலா ரூ.3,800) செலுத்தியும், நடைமுறையில் இல்லாத செயல்முறைகளை கூறி காலம் தாழ்த்தி வருகிறார்கள். 2006 வன உரிமைச் சட்டப்படி, பழங்குடி கிராமத்தில் வசிக்கும் இடத்திற்கு பட்டா வாங்கப்பட்ட பிறகு அது வருவாய் கிராமமாக கருதப்பட்டு சாலை, மின்சாரம், குடிநீர், கல்வி நிலையங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்ய இடமுள்ளது.

ஆனைமலை பழங்குடி கிராமம்
ஆனைமலை பழங்குடி கிராமம்

 ஆனால் சட்டத்தை சரியாக பின்பற்றாமல் பழங்குடியின மக்களின் அடிப்படை வசதிகளை மறுத்து வருகிறார்கள். அரசு உடனடியாக ஆனைமலை பழங்குடி கிராமங்களுக்கு மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.” என்றார்.

சொத்துக் குவிப்பு வழக்கு; அமைச்சர் துரைமுருகனுக்கு பிடிவாரன்ட்; செப்., 15-க்குள் அமல்படுத்த உத்தரவு!

திமுக மூத்த அமைச்சர் துரைமுருகன், 2006 - 2011 ஆட்சிக் காலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது, 2007 - 2009 காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக 1.40 கோடி சொத்து சேர்த்ததாக அவர் மீதும், அவரின் ம... மேலும் பார்க்க

பிரதமர் தாய் அவமதிப்பு விவகாரம்: "வெளிநாட்டில் சிரிக்கிறார், இங்கு அழுகிறார்" - தேஜஸ்வி விமர்சனம்

ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், பிரதமர் மோடி அவரது தாய் காங்கிரஸ், ஆர்.ஜே.டி பேரணியில் அவமதிக்கப்படதாகப் பேசியது ஒரு நாடகம் எனப் பேசியுள்ளார்.மோடியை விமர்சித்துப் பேசிய தேஜஸ்வி, "நம் எல்லோரு... மேலும் பார்க்க

NIRF அறிக்கை: "நாட்டின் தலைசிறந்த 17 கல்வி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ளது" - ஸ்டாலின் பெருமிதம்!

தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (NIRF) வெளியிட்டுள்ள 2025ம் ஆண்டுக்கான தரவரிசையில் தமிழக கல்வி நிறுவனங்கள் முதலிடம் பிடித்திருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம். கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வ... மேலும் பார்க்க

அதிமுக-வின் சூப்பர் சீனியர்; எம்.ஜி.ஆர் - ஜெ காலத்து ரத்தத்தின் ரத்தம் - யார் இந்த செங்கோட்டையன்?!

முன்னாள் அமைச்சரான செங்கோட்டையன்அதிமுக-வுக்குள் மீண்டும் ஒரு வெடியை கொளுத்திப் போட்டிருக்கிறார். நாளை காலை 9 மணிக்கு மனம் விட்டுப் பேசப் போகிறேன் என தேதி நேரமெல்லாம் குறித்திருக்கிறார். எடப்பாடிக்கும்... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: "வெளிய போங்க; அதான் உத்தரவு" - பத்திரிகையாளர்களை மிரட்டிய போலீஸ்

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராடி நள்ளிரவில் கைதான தூய்மைப் பணியாளர்கள், சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவில் இன்று கூடியிருந்தனர். அவர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாகக் கைது செய்தனர். அப்போது... மேலும் பார்க்க