செய்திகள் :

8 ஆண்டுக்கால முன்னேற்றம்: யோகி அரசைப் பாராட்டிய அமைச்சர்!

post image

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசின் எட்டு ஆண்டுக்கால நிறைவைக் குறித்து அந்த மாநில அமைச்சர் ஏ.கே. சர்மா பாராட்டியுள்ளார்.

இதுதொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய சர்மா,

யோகி ஆதித்யநாத் அரசின் கீழ் மாநிலத்தின் எட்டு ஆண்டுக்கால நல்லாட்சிக்காக உத்தரப் பிரதேச மக்களை நான் வாழ்த்துகிறேன். கடந்த எட்டு ஆண்டுகளில் பொதுநலன் மற்றும் பாதுகாப்பில் அரசு கவனம் செலுத்தி வருவதாகவும், சேவைகளை நெறிப்படுத்தவும், பொறுப்புணர்வை உறுதி செய்யவும் நிர்வாகம் மேற்கொண்ட முறைகளையும் அவர் எடுத்துரைத்தார்.

பெண்களின் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு உள்பட ஒவ்வொரு துறையிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இது மாநிலத்தில் தொழில்துறை வளர்ச்சியை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்த எட்டு ஆண்டுகளில், ஒவ்வொரு துறையிலும் மாநிலம் முன்னேறியுள்ளது. அரசின் கீழ் உள்கட்டமைப்பு மேம்பாடும் செய்யப்பட்டுள்ளது. தொழில்துறையின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது .

பிரயாக்ராஜில் சமீபத்தில் நடைபெற்ற, நகர்ப்புற மேம்பாட்டுத் துறையால் நிர்வகிக்கப்பட்ட மகா கும்பமேளாவைப் பற்றி சர்மா பெருமிதம் அடைந்தார். கோடிக்கணக்கான பக்தர்களை ஈர்த்த நிகழ்வால், உத்தரப் பிரதேசத்திற்கு மேலும் பெருமை சேர்த்தது என்று அவர் கூறினார்.

முன்னதாக திங்களன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது அரசின் எட்டு ஆண்டுக்கால பதவிக் காலத்தைக் குறிக்கும் வகையில், நலிந்த மாநிலத்தை நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் வளர்ச்சி இயந்திரமாக மாற்றியுள்ளது. சட்டம் மற்றும் ஒழுங்கு குறித்து உத்தரப் பிரதேசத்தின் மேம்பட்ட பாதுகாப்பு சூழலுக்கு பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவின் வெற்றிகரமான ஏற்பாட்டை அவர் மேற்கோள் காட்டினார்.

நேற்று யோகி ஆதித்யநாத் அரசின் எட்டு ஆண்டுகளை நினைவுகூரும் வகையில் லக்னௌவில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா, அமைச்சர் பிரஜேஷ் பதக், அமைச்சர் சௌத்ரி பூபேந்திர சிங் மற்றும் பல அமைச்சர்கள், பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

குழந்தைக்காக முதியவரின் தலை துண்டித்து கொலை

பிகாரில் குழந்தை பாக்கியம்வேண்டி, முதியவரின் தலையைத் துண்டித்து கொலை செய்த மாந்திரீகரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.பிகாரில் மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத்தில் யுக்வல் யாதவ் (65) என்பவர் காணாமல் போய்வ... மேலும் பார்க்க

மியான்மரில் நிலநடுக்கம்: தாயகம் திரும்பிய இந்திய பயணிகள்!

மியான்மரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பாங்காக்கில் இருந்து இந்திய பயணிகள் தாயகம் திரும்பினர். மியான்மர் மட்டுமல்லாது தாய்லாந்து, வியட்நாம், சீனாவிலும் உணரப்பட்ட நில அதிர்வுகளால் ம... மேலும் பார்க்க

ஐபில்: பந்தயம் கட்டிய மூவர் கைது!

ஐபிஎல் போட்டி மீது பந்தயம் கட்டிய மூவரை மும்பை காவல்துறையினர் கைது செய்தனர். நவி மும்பையில் சன்பாடா பகுதியில் ஒரு குடியிருப்பு வளாகத்தில், ஐபிஎல் கிரிக்கெட் மீது பந்தயம் கட்டி, ஆன்லைன் சூதாட்டம் நடத்த... மேலும் பார்க்க

மறைந்த சுஷாந்த் சிங்கின் தோழியிடம் மன்னிப்பு கேட்ட முன்னாள் எம்.பி.

மறைந்த முன்னாள் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராக்புத் தற்கொலை வழக்கில், அவரது தோழி ரியா சக்ரவர்த்திக்கு தொடர்பிருப்பதாக ஜீ செய்திகள் நிறுவனம் குற்றம் சாட்டியதற்காக மன்னிப்புகோரி, ஜீ செய்திகள் நிறுவனத... மேலும் பார்க்க

ஆயுதங்களால் மாற்றத்தைக் கொண்டுவர இயலாது: அமித் ஷா

ஆயுதங்களை ஏந்தி வன்முறையில் ஈடுபடுபவர்களால் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது என்றும் அமைதி, வளர்ச்சி மட்டுமே நல்ல மாற்றமாக இருக்கும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். சத்தீஸ்கரின் சு... மேலும் பார்க்க

ஆந்திரத்தில் தகிக்கும் வெப்பம்: 223 மண்டலங்களுக்கு எச்சரிக்கை!

ஆந்திரப் பிரதேசத்தில் 35 மண்டலங்களில் கடுமையான வெப்ப அலை வீசி வருவதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது. ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் ஆறு மண்டலங்களில் கடுமையான வெப்ப அலைகள் ஏற்பட வா... மேலும் பார்க்க