செய்திகள் :

8-வது இடத்துடன் ஐபிஎல் தொடரை நிறைவு செய்த நடப்பு சாம்பியன்; பேட்ஸ்மேன்களை குறைகூறும் ரஹானே!

post image

நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட முடியாததற்கு பேட்ஸ்மேன்களின் மோசமான ஃபார்மே காரணம் என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் தில்லியில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 110 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதையும் படிக்க: தோனியிடம் எப்போதும் கேட்கப்படும் கேள்வி; பதிலால் ஆர்ப்பரித்த ரசிகர்கள்!

நடப்பு ஐபிஎல் தொடரில் மொத்தமுள்ள 14 போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 5 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இரண்டு போட்டிகளுக்கு முடிவு எட்டப்படவில்லை. இதன் மூலம், 12 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 8-வது இடம் பிடித்து நடப்பு ஐபிஎல் தொடரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிறைவு செய்துள்ளது.

சிறப்பாக அமையாததன் காரணம் என்ன?

நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இந்த ஐபிஎல் தொடர் சிறப்பாக அமையாததற்கான காரணத்தை அந்த அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: எங்கள் அணியில் 3-4 பேட்ஸ்மேன்கள் ஃபார்மில் இல்லை. பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட போதிலும், எங்களால் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட முடியவில்லை. ஒரு அணியாக நாங்கள் பேட்டிங்கில் நன்றாக செயல்படவில்லை. ஆனால், இந்த சூழ்நிலையை கையாளும் அனுபவம் எங்களுக்கு இருக்கிறது. அடுத்த சீசனில் வலுவாக திரும்பி வருவோம் என்றார்.

இதையும் படிக்க: அபார வெற்றியுடன் நடப்பு ஐபிஎல் தொடரை நிறைவு செய்த சிஎஸ்கே!

கடந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சாம்பியன் பட்டம் வெல்ல முக்கியக் காரணமாக அமைந்த ரிங்கு சிங், ரமன்தீப் சிங், வெங்கடேஷ் ஐயர், ஆண்ட்ரே ரஸல் போன்ற வீரர்கள், நடப்பு ஐபிஎல் தொடரில் பெரிதாக சோபிக்காதது குறிப்பிடத்தக்கது.

கோப்பை கனவு: கால்பந்து உலகில் நடக்கும் அதிசயம் ஆர்சிபிக்கும் நடக்குமா?

கோப்பையே வெல்லாத கால்பந்து அணிகள் எல்லாம் இந்த சீசனில் வெல்லும்போது ஆர்சியாலும் வெல்ல முடியுமென அதன் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த சீசனில் கால்பந்து உலகில் பல அணிகள்... மேலும் பார்க்க

ஆக்ரோஷமாக கொண்டாடி, கோமாளியாக விரும்பவில்லை..! யாரைச் சொல்கிறார் பும்ரா?

ஜஸ்பிரீத் பும்ராவின் சமீபத்திய பேட்டி விராட் கோலி ரசிகர்களை சீண்டும் விதமாக அமைந்துள்ளது கிரிக்கெட் உலகில் பேசுபொருளாகியுள்ளது. கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச்சாளர்கள் விக்கெட் எடுத்தால் மகிழ்ச்சியில... மேலும் பார்க்க

சிறந்த தலைவன், தலைசிறந்த மனிதன்..! தோனி குறித்து உர்வில் படேல்!

இளம் சிஎஸ்கே வீரர் உர்வில் படேல் எம்.எஸ்.தோனி குறித்து நெகிழ்ச்சியானப் பதிவினை எழுதியுள்ளார். அதில் பல விஷயங்கள் கற்றுக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். 2025 ஐபிஎல் சீசன் சிஎஸ்கே அணிக்கு மோசமாக அமைந்தாலும... மேலும் பார்க்க

ரோஹித் சர்மாவுடன் இணைந்து களமிறங்கியதில் மகிழ்ச்சி: ஜானி பேர்ஸ்டோ

ரோஹித் சர்மாவுடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கியது மிகுந்த மகிழ்ச்சியளித்தாக இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ தெரிவித்துள்ளார்.ஐபிஎல் தொடரில் சண்டீகரில் நேற்று (மே 30) நடைபெற்ற எலிமினேட்டர் போட... மேலும் பார்க்க

ஹார்திக் பாண்டியாவுடன் மோதலா? என்ன சொல்கிறார் ஷுப்மன் கில்?!

மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹார்திக் பாண்டியா மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி வந்தன. இதற்கு ஷுப்மல் கில்... மேலும் பார்க்க

சக்கர நாற்காலியில் அமர்ந்து கிரிக்கெட் விளையாடிய ஏபிடி! வைரல் விடியோ!

ஆர்சிபி அணியின் முன்னாள் வீரர் ஏபிடி வில்லியர்ஸ் சக்கர நாற்காலியில் அமர்ந்து மாற்றுத் திறன் கொண்ட கிரிக்கெட் விளையாடி விடியோக்கள் இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.நடப்பு ஐபில் தொடர் இந்தியாவின்... மேலும் பார்க்க