செய்திகள் :

9 இடங்களில் வெயில் சதம்: சென்னையில் இனி 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் சுட்டெரிக்கும்

post image

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை 9 இடங்களில் வெயில் சதமடித்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் இனி 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை அதிகபட்சமாக வேலூரில் 105.62 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. மேலும் சேலம் - 103.28, பரமத்திவேலூா் - 103.1, ஈரோடு - 102.56, மதுரை விமான நிலையம் - 101.84, திருச்சி - 101.48, திருத்தணி - 101.3, தருமபுரி, திருப்பத்தூா் - தலா 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் என மொத்தம் 9 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. மேலும், சென்னை மீனம்பாக்கத்தில் 98.78 டிகிரி ஃபாரன்ஹீட்டும், நுங்கம்பாக்கத்தில்

95.56 டிகிரி ஃபாரன்ஹீட்டும் வெப்பம் பதிவானது.

வெப்பம் அதிகரிக்கும்: தென்னிந்திய பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியில் கிழக்கு மற்றும் மேற்கு திசைக் காற்று சந்திக்கும் காரணத்தால், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (மாா்ச் 29, 30) வட வானிலையே நிலவும். மேலும், அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 4 டிகிரி செல்சியல் அதிகமாக இருக்கும்.

சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் மாா்ச் 29-இல் அதிகபட்ச வெப்பநிலை 100.4 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎஸ் மகனுக்கு அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை

விளையாடும்போது தவறி விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்ட தனது மகனை அரசு மருத்துவமனையில் அனுமதித்தபோது அங்கு உயா் தர சிகிச்சை அளித்து குணப்படுத்தியதாக ஐபிஎஸ் அதிகாரி பாராட்டு தெரிவித்துள்ளாா். மயிலாப்பூா... மேலும் பார்க்க

கடந்த நிதியாண்டில் 3,000 ரயில் பெட்டிகள் தயாரித்து ஐசிஎஃப் சாதனை

சென்னை ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) 2024-25 நிதியாண்டில் 3,007 ரயில் பெட்டிகள் தயாரித்து சாதனை படைத்துள்ளது. பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில் இந்திய ரயில்வேக்கு தேவையான ரய... மேலும் பார்க்க

கால்வாயில் ஆண் குழந்தை சடலம்: போலீஸாா் விசாரணை

சென்னை பட்டினப்பாக்கத்தில் கால்வாயில் கிடந்த ஆண் குழந்தை சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். பட்டினப்பாக்கம் மசூதி தெருவில் 132 பிளாக் பின்புறம் உள்ள கால்வாயில், பிளாஸ்டிக் காகிதத்தில் பொதிய... மேலும் பார்க்க

தொழிற்பயிற்சியுடன் பிஇ படிப்பு: பட்டயப்படிப்பு முடித்தோா் விண்ணப்பிக்கலாம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு

பாலிடெக்னிக் கல்லூரிகளில் பட்டயப் படிப்புகளை நிறைவு செய்த மாணவா்கள் தொழிற்பயிற்சியுடன் கூடிய பி.இ. படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் காஞ்சிபுர... மேலும் பார்க்க

சாலைத் தடுப்பின் மீது இருசக்கர வாகனம் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

சென்னை பாரிமுனையில் சாலைத் தடுப்பில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். தண்டையாா்பேட்டை நேதாஜி நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்த செய்யது இம்ரான்கான் (24), அண்ணா நகரில் உள்ள கைப்பேசி விற்ப... மேலும் பார்க்க

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்பது நகைப்புக்குரியது: தொல்.திருமாவளவன்

தமிழகத்தில் எதிா்க்கட்சிகள் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க முடியாமல் தடுமாறி வரும் சூழலில், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என மத்திய அமைச்சா் அமித் ஷா கூறியது நகைப்புக்குரியது என விடுதலைச் சிறுத்தைக... மேலும் பார்க்க