செய்திகள் :

Air India Violations: "3 அதிகாரிகளை நீக்க வேண்டும்; இனி இதுபோல நடந்தால்..." - DGCA எச்சரிக்கை!

post image

விமான பாதுகாப்பைக் கண்காணிக்கும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (Directorate General of Civil Aviation - DGCA) டாடா குழுமத்தின் ஏர் இந்தியா நிறுவனம் அதன் 3 அதிகாரிகளை அனைத்து பதவிகள் மற்றும் பொறுப்புகளிலிருந்தும் முற்றிலுமாக நீக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

DGCA
DGCA

கடந்த ஜூலை 20ம் தேதி DGCA பிறப்பித்த ஆணயில், தேதி ஒரு டிவிஷனல் துணைத் தலைவர் (Divisional VP) உள்ளிட்ட இந்த மூன்று அதிகாரிகளும் தங்களது பொறுப்புகளை நிறைவேற்றுவதில் முற்றிலுமாக தோற்றுள்ளனர் எனக் குற்றம்சாட்டியதோடு, இவர்கள் மீது தாமதமில்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளது.

DGCA உத்தரவில், விமானக் குழுவினர் பணிநேரங்களைத் திட்டமிடுவதிலும், உரிமங்களில் உள்ள குறைபாடுகளைக் கருத்தில் கொள்ளாமல் செயல்பட்டது, ஓய்வு அளிப்பது மற்றும் உடனடி தேவைகளைப் பூர்த்தி செய்வது போன்றவற்றிலும் கடுமையான விதிமீறல்களை ஏர் இந்தியா நிறுவனம் தானாக முன்வந்து அறிவித்ததாக சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

Air india

குழுவினரை பணியமர்த்துதல் மற்றும் விமானங்களை திட்டமிடுதல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளுக்கு ஏர்லைன்கள் பயன்படுத்தும் ARMS என்ற மென்பொருளிலிருந்து, CAE Flight-க்கு மாற்றியப் பிறகு செய்யப்பட்ட மதிப்பாய்வில் இந்த விதிமீறல்கள் கண்டறியப்பட்டதாக ஏர் இந்தியா நிறுவனம் கூறியுள்ளது.

இந்த விதிமீறல்களுக்கு காரணமான, தங்களது பொறுப்பை சரியாகச் செய்யாத அதிகாரிகளுக்கு எதிராக Air India நிறுவனம் முறையான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ளது DGCA.

மேலும் எதிர்காலத்தில் இதேப்போன்ற விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் விமானம் இயக்குவதற்கான உரிமத்தை இடைநீக்கம் செய்வது, செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடு விதிப்பது போன்ற கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

கடந்த 12ம் தேதி ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான நிலையில், தற்போது வெளிவந்துள்ள நிறுவனத்தின் நீண்ட கால அலட்சியப்போக்கு கவனம் பெறுகிறது.

ஊட்டி இந்தி பதாகை சர்ச்சை: சுட்டிக்காட்டிய விகடன்; கிழித்தெறிந்த ரயில்வே நிர்வாகம்; பின்னணி என்ன?

சர்வதேச அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் நூற்றாண்டு பழைமை வாய்ந்த ரயில் நிலையங்களில் ஊட்டி ரயில் நிலையம் ஒன்றாகும்.பாரதியாரின் பாடல் வரிகளை இந்து மகாசபையை உருவாக்கியவர்களில் ஒருவரான மதன் மோகன்... மேலும் பார்க்க

Yoga Day: "யோகா வெறும் உடற்பயிற்சி அல்ல; அது ஒரு வாழ்க்கை முறை" - பிரதமர் மோடி பேச்சு

'ஒரே பூமி, ஒரே ஆரோக்கியத்துக்கான யோகா' என 11 ஆவது சர்வதேச யோகா தினம் இன்று (ஜூன் 21) கொண்டாடப்படுகிறது.இதையொட்டி, ஆந்திர மாநிலம், விசாகப்பட்டிணத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பிரமாண்ட யோகா நிகழ... மேலும் பார்க்க

கோடியூர்: வாரச்சந்தை நடைபெறும் இடத்துக்கு அருகே கொட்டப்படும் குப்பைகள்; முகம் சுளிக்கும் பொதுமக்கள்!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள கோடியூரில் தேசிய நெடுஞ்சாலை அருகே ஒவ்வொரு புதன்கிழமையும் நடைபெறும் வாரச் சந்தை, காய்கறிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு மக்களுக்கு முக்க... மேலும் பார்க்க

தூத்துக்குடி: சுட்டிக்காட்டிய விகடன்; விறுவிறுவென தொடங்கிய ரவுண்டானா பணிகள்!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 60 அடி சாலை, அழகேசபுரம் சாலை, கிருஷ்ணராஜபுரம் சாலை ஆகிய பிரதான சாலைகளை இணைக்கும் டி.எஸ்.ஃஎப் சாலையில் ரவுண்டானா அமைக்க தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் சில மாதங்களுக்கு ... மேலும் பார்க்க

தமிழக அரசின் ‘நமக்கு நாமே’ திட்டம் ரூ1 கோடியில் லாயிட்ஸ் சாலையை புதுப்பிக்க டிஆர்ஏ நிறுவனம் அடிக்கல்

சென்னை நகரை அழகுபடுத்தும் தமிழக அரசின் தொலைநோக்கு திட்டமான ‘நமக்கு நாமே’ திட்டத்திற்கு உதவிடும் வகையில் சென்னை நகரின் மிகவும் புகழ்பெற்ற ரியல் எஸ்டேட் நிறுவனமான டிஆர்ஏ 1 கோடி ரூபாய் செலவில் சர் வி.பி.... மேலும் பார்க்க

அகமதாபாத் விபத்து எதிரொலி; விமான நிலையங்களைச் சுற்றியுள்ள கட்டடங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்!

ஏர் இந்தியா விபத்துக்குப் பிறகு விமான பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக, விமான நிலையங்களுக்கு அருகில் உள்ள கட்டடங்களை நெறிப்படுத்தும் புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது மத்திய சிவில் விமானப் போக்குவரத்து... மேலும் பார்க்க