செய்திகள் :

America: 'கொலம்பியா மக்களை போலவா?!' - 200-க்கும் மேற்பட்ட இந்தியர்களை வெளியேற்றிய அமெரிக்கா

post image

'சட்டத்திற்கு புறம்பாக அமெரிக்காவில் குடியேறி இருப்பவர்களை வெளியேற்றுவேன்' என்று ட்ரம்ப் தனது தேர்தல் பிரசாரத்தில் கூறிய உறுதிமொழியை தீவிரமாக செயல்படுத்தி வருகிறார்.

கொலம்பியா, மெக்சிகோ, கனடா என்று நீண்டுக்கொண்டிருக்கும் பட்டியலில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது. சட்டத்திற்கு புறம்பாக குடியேறிய வெளிநாட்டு மக்களை கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றி வருகிறது அமெரிக்கா.

தற்போது 200-க்கும் மேற்பட்ட அமெரிக்காவில் சட்டத்திற்கு புறம்பாக குடியேறிய இந்தியர்களை ட்ரம்பின் அரசு சி17 என்னும் ராணுவ விமானம் மூலம் இந்தியாவிற்கு அனுப்பியுள்ளது. இது பிரச்னை அல்ல... ஆனால், இதைப்பற்றி இந்திய அதிகாரிகளுக்கு அதிகாரபூர்வமாக எந்தத் தகவலுமே தராமல் அனுப்பியுள்ளது தான் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

உறுதி மொழியை நிறைவேற்றும் ட்ரம்ப்!

'அமெரிக்க அரசு கடுமையாக தங்களது குடியேற்ற சட்டங்களை பின்பற்றி வருகிறது. அதனால் சட்டத்திற்கு புறம்பாக குடியேறியவர்களை வெளியேற்றுகிறது' என்று இந்தியர்களை அனுப்பியது தொடர்பாக எதுவும் சொல்லாமல், அமெரிக்க தூதரகம் இப்படி மட்டும் குறிப்பிட்டுள்ளது.

'அமெரிக்கா அனுப்புபவர்களை 'இந்தியர் தானா?' என்று அடையாளப்படுத்தியப் பின், அவர்களை ஏற்றுகொள்வதில் இந்தியா தயாராக இருக்கிறது' என்று இந்திய அரசு தரப்பு கூறுகிறது.

அமெரிக்கா அனுப்பி இருக்கும் இந்தியர்கள் இன்று காலைக்குள் பஞ்சாப் விமான நிலையத்திற்கு வந்தடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மாதம், கொலம்பியாவிற்கு அனுப்பப்பட்ட அந்நாட்டு மக்கள் ராணுவ விமானத்தில் ஏ.சி, தண்ணீர் எதுவும் இல்லாமல், கைவிலங்கிட்டு அனுப்பப்பட்டிருந்தனர். இதற்கு கொலம்பியா அரசு கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்திருந்தது.

தற்போது, இந்தியர்களையும் ராணுவ விமானத்தில் தான் வெளியேற்றியுள்ளது அமெரிக்க அரசு. ஆனால், இந்தியர்களை எப்படி அவர்கள் அனுப்பியிருக்கிறார்கள், கண்ணியமாக நடத்தி இருக்கிறார்களா என்பதை தெரிந்துகொள்ள, இந்த சம்பவத்தை இந்திய அரசு உற்றுநோக்கி வருகிறது.

'அயோத்தியில் கலவரத்தை முடிச்சிட்டு, திருப்பரங்குன்றத்தில ஆரம்பிச்சுருக்காங்க'- செல்வப்பெருந்தகை

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.இது தொடர்பாகப் பேசிய அவர், “மத நல்லிணக்கத்தை கெடுப்பதற்காக ஒரு கும்பல்... மேலும் பார்க்க

``கிளாம்பாக்கத்தில் 18 வயது பெண்ணுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை..." - அண்ணாமலை கண்டனம்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கிளம்பாக்கத்தில் பேருந்துக்காகக் காத்திருந்த பெண் ஆட்டோவில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து, தமிழ்நாட்டில் பாலியல் ... மேலும் பார்க்க

Kumbh Mela: மகா கும்பமேளாவில் பிரதமர் மோடி... திரிவேனி சங்கமத்தில் புனித நீராடல்!

கும்ப மேளா நிகழ்வில் பிரதமர் மோடி!கும்ப மேளா நிகழ்வில் பிரதமர் மோடி!கும்ப மேளா நிகழ்வில் பிரதமர் மோடி!கும்ப மேளா நிகழ்வில் பிரதமர் மோடி!கும்ப மேளா நிகழ்வில் பிரதமர் மோடி!கும்ப மேளா நிகழ்வில் பிரதமர் ம... மேலும் பார்க்க

‘இந்து தேசியமும் காலிஸ்தானியமும்..!’ - லீக்கான சீக்ரெட் ரிப்போர்ட்; பிரிட்டன் அரசுக்கு அச்சுறுத்தலா?

‘இந்து தேசியமும் காலிஸ்தானியமும் இங்கிலாந்தின் புதிய அச்சுறுத்தல்’‘இந்து தேசியமும் காலிஸ்தானியமும் இங்கிலாந்தின் புதிய அச்சுறுத்தல்’ என்ற மையத் தகவலுடன், பொதுவெளியில் லீக் ஆன பிரிட்டன் உள்துறை அலுவலக ... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: 'திமுக ஆட்சிக்கு அபாயத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி செய்கிறது...'- சேகர் பாபு

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.“வட மாநிலங்களைப் போல் இங்கும் கலவரங்களை ஏற்படுத்த வேண்டும் என்று பாஜக நினைக்கிறது. ஆனால் இங்கு இ... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி: `என் துப்பட்டாவை இழுத்து, சாணி அடிச்சு..!’ – கதறிய பெண் VAO... உதவியாளர் கைது!

Lகள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள வடக்கனந்தல் மேற்கு கிராமத்தில் தமிழரசி என்பவர், கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். அதே அலுவலகத்தில் சங்கீதா என்பவர் கிராம உதவியாளராக பணிபுரிந... மேலும் பார்க்க