செய்திகள் :

Anil Ambani: ரூ.3000 கோடி வங்கிக் கடன் வாங்கி மோசடி; அனில் அம்பானியை விசாரிக்கும் ED; பின்னணி என்ன?

post image

யெஸ் வங்கியில் ரூ.3000 கோடி கடன் வாங்கி அதனைத் திரும்பக் கொடுக்காமல் மோசடி செய்ததாக தொழிலதிபர் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குரூப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2017-19ம் ஆண்டுகளில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனம் இக்கடனை வாங்கியது. கடன் வாங்குவதற்காக வங்கி அதிகாரிகளுக்கு ரிலையன்ஸ் அதிகாரிகள் லஞ்சம் கொடுத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இம்மோசடி தொடர்பாக சி.பி.ஐ. இரண்டு வழக்குகளைப் பதிவு செய்தது. இதையடுத்து கடந்த வாரம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் இம்மோசடி தொடர்பாக நாடு முழுவதும் ரெய்டு நடத்தியது.

மும்பை, டெல்லி போன்ற இடங்களில் நடத்தப்பட்ட இந்த ரெய்டு 3 நாட்கள் நீடித்தது. இதில் அனில் அம்பானிக்கு வேண்டப்பட்ட 25 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த ரெய்டில் அனில் அம்பானிக்கு எதிராகப் பல முக்கிய ஆவணங்கள் கிடைத்து இருப்பதாக அமலாக்கப்பிரிவு தெரிவித்துள்ளது. விசாரணையில் யெஸ் வங்கி அதிகாரிகள், ரிலையன்ஸ் குரூப் நிர்வாகம் கடனுக்காகக் கொடுத்த ஆவணங்களை முழுமையாக ஆய்வு செய்யாமல், ஏற்கனவே கடன் இருக்கும் நிலையில் புதிய கடன் கொடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இக்கடன் கொடுக்கும் முன்பே வங்கி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

anil ambani - அனில் அம்பானி
anil ambani - அனில் அம்பானி

தற்போது ரெய்டு நடந்து முடிந்துள்ள நிலையில் அடுத்த கட்டமாக அனில் அம்பானியை விசாரணைக்கு வரும் 5ம் தேதி நேரில் ஆஜராகும்படி அமலாக்கப்பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது. அன்றைய தினம் அனில் அம்பானியைக் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கிடையே அனில் அம்பானி நிறுவனம் ரூ.68 கோடி அளவுக்கு சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவிற்குப் போலி வங்கி உத்தரவாதம் கொடுத்தது தொடர்பாக புபனேஷ்வர் மற்றும் கொல்கத்தாவில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ரெய்டு நடத்தியுள்ளனர். இதனால் அனில் அம்பானிக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

ஜூஸில் பூச்சிமருந்து கலந்து ஆண் நண்பனைக் கொன்று நாடகம்; கிரீஷ்மா பாணியில் அதிரவைத்த இளம்பெண்!

கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், பிண்டிமன பகுதியைச் சேர்ந்தவர் அதீனா(30). இவர் கடந்த புதன்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் போலீஸுக்கு போன்செய்து, தனது வீட்டுக்கு அருகே விஷம் குடித்த நிலையில் ஒருவர் மயங்... மேலும் பார்க்க

கூட்டநெரிசலைப் பயன்படுத்தி `பிக்-பாக்கெட்' முயற்சி; மடக்கி பிடித்த மக்களால் சிக்கிய வடமாநில பெண்கள்!

சென்னை, சைதாப்பேட்டை, அப்பாவு நகர் பகுதியில் வசித்து வரும் சரவணன், 48 என்பவர் இரும்பு கடை நடத்தி வருகிறார். இவர் (31.07.2025) நேற்று முன்தினம் மதியம் தி.நகர், போத்திஸ் துணி கடை முன்பு நடந்து சென்று கொ... மேலும் பார்க்க

திருநங்கை என்பதால் ஆத்திரம்; சொந்த தம்பியே கொலை செய்ய துணிந்த கொடூரம்!

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் காந்திநகர் பகுதியைச் சேரந்தவர் ஆறுமுகம் - கீதா தம்பதி. இவர்களுக்கு மணிகண்டன் , அமர்நாத் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். மணிகண்டனுக்கு சிறு வயதிலேயே ஏற்பட்ட உடல் மாற்றம் காரணம... மேலும் பார்க்க

15 ஆண்டுகளில் 8 பேருடன் திருமணம்; பணம்பறிப்பு - 9வது திருமணத்தின் போது சிக்கிய ஆசிரியை

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த பணக்காரர்கள் சிலரை திருமணம் செய்து அவர்களிடமிருந்து ஒரு பெண் பணம் பறிப்பதாக போலீஸாருக்கு புகார் வந்தது. அப்புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசார... மேலும் பார்க்க

MP: காணாமல் போன 23,000 பெண்கள்; 1,500 குற்றவாளிகள் தலைமறைவு - அதிர்ச்சி தகவல்கள்!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் கடந்த 2024 ஜூலை முதல் 2025 ஜுன் வரையிலான காலகட்டத்தில் 23000க்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போனதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.ம.பி சட்டமன்றம் விதன சபாவில் மழைக்கால கூட... மேலும் பார்க்க

கர்நாடகா: அரசு சம்பளம் ரூ.15,000... ஆனால் 24 வீடுகள், ரூ.30 கோடி சொத்து! - சிக்கிய முன்னாள் ஊழியர்!

கர்நாடகாவின் லஞ்ச ஒழிப்பு மற்றும் அரசு கண்காணிப்பு அமைப்பான லோக்தாயுக்தா அதிகாரிகள், கர்நாடகா கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தின் (KRIDL) முன்னாள் எழுத்தர் வீட்டை சோதனை செய்தபோது கணக்கில்... மேலும் பார்க்க