செய்திகள் :

Area 51: மர்ம பகுதியில் தென்பட்ட கறுப்பு கோபுரம் - Google மேப்பில் விசித்திரமாக தெரிந்தது என்ன?

post image

பல ஆண்டுகளாக மர்மம் நீடித்துவரும் ஒரு பகுதியாக இருப்பதுதான் ஏரியா 51.. தெற்கு நெவாடாவில் உள்ள லாஸ் வேகாஸிலிருந்து வடமேற்கே சுமார் 120 மைல் தொலைவில் அமைந்துள்ள ஒரு அமெரிக்க ராணுவ தளமாகும்.

இந்தப் பகுதி நீண்ட ஆண்டுகளாக மர்மம் ஆகவே உள்ளது. கிட்டத்தட்ட 200 கிலோ மீட்டருக்கு நீளும் இந்த நெடுஞ்சாலை பாதையில் எந்த ஒரு கடைகளோ, பெட்ரோல் பங்கோ அல்லது வாகனங்கள் நிறுத்துவதற்கோ எந்த ஒரு இடமும் இல்லை.

சங்கிலிகளால் சுற்றி வளைத்து மூடப்பட்டிருக்கும் இந்த இடத்திற்குள் யாருமே உள்ளே நுழைய முடியாது. சுற்றுவட்டார பகுதியில் மட்டுமல்லாது வான்வெளி பரப்பிலும் அனுமதி கிடையாது. விமானம் கூட இந்த பகுதிக்கு மேல் பறக்க தடை செய்யப்பட்டுள்ளது.

Area 51

ஒரு பறவையின் நிழல் தெரிந்தால் கூட அங்கு இருக்கும் கேமராக்களில் அலர்ட் செய்யப்படுகிறது.

இந்த ஏரியா 51 லிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு முன்பே பொதுமக்கள் நடமாட்டம் நிறுத்தப்படுகிறது. அதைத் தாண்டி எந்த ஒரு வாகனமும் வர முடியாது. அப்படி அந்த பகுதியில் என்னதான் இருக்கிறது என்பது பலருக்கும் தெரியாத புதிராக இருக்கிறது.

அத்துமீறி இந்த பகுதிக்குள் நுழைபவர்கள் கேள்வி இன்றி கைது செய்யப்படுகிறார்கள். 1955 களில் உளவு விமான ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்பட்ட இந்த ஏரியா 51 தற்போது பல அதிநவீன விமானங்களையும், போர் ஆயுதங்களை உருவாக்க அமெரிக்க ராணுவம் இந்த இடத்தை பயன்படுத்துவதாக நம்பப்படுகிறது. ஆனால் அங்கு என்னதான் நடக்கிறது என்பது அமெரிக்க ராணுவத்திற்கு மட்டுமே வெளிச்சம்!

இப்படி மர்மமாக இருக்கும் ஏரியா 51 இல் ஒரு விசித்திர காட்சி தென்பட்டுள்ளது.

கூகுள் மேப்பில் ஏரியா 51 இல் ஒரு கறுப்பு முக்கோண கோபுரம் இருப்பது போல் தெரிந்துள்ளது. இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில், வைரலாகி வருகிறது. இந்த கோபுரம் என்னவாக இருக்கும் என்பது பலரின் கேள்வியாக உள்ளது? அந்த கோபுரம் போன்ற அமைப்பு ஒரு விமானத்தை காட்சிப்படுத்துகிறதா அல்லது போலியானதா? என்பது குறித்த தெளிவான தகவல்கள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

`ஓசன்னா... தேவனே எம்மைக் கைவிடாதிரும்' - இயேசுவின் சிலுவைப் பாடுகளை ஏன் நினைவுக்கூற வேண்டும்?

மனித குல வரலாற்றில் மோசமான இரவுகளில் ஒன்று. அவரை அவர்கள் அறிவார்கள். அவர் ஆலயங்களிலும் பொது இடங்களிலும் பிரசங்கம் செய்பவர். மதம் வணிகமானபோது அதற்கு எதிராகக் குரல் எழுப்பி, 'கடவுளின் வீட்டை மீட்க வேண்ட... மேலும் பார்க்க

Infant trafficking: மகப்பேறு மருத்துவமனைகளில் குழந்தை கடத்தலை எப்படித் தடுக்கிறார்கள்?!

நாடு முழுவதும் மருத்துவமனைகளில் இருந்து பிறந்த குழந்தைகள் கடத்தப்படுவது தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இதைத் தடுப்பதற்காக, மருத்துவமனையில் புதிதாகப் பிறந்த குழந்தைகள் திருடப்பட்டால், சம்பந்தப்பட்ட மருத்த... மேலும் பார்க்க

"தந்தை யார் என்று சொல்லக் கூடாது...” - வாடகை தாயின் வாயை அடைக்க பணம் கொடுக்கிறாரா எலான் மஸ்க்?

உலக பணக்காரரான எலான் மஸ்க், வாடகை தாய் மூலம் பல குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு, அதனை ரகசியமாக நிர்வகிக்க ஊக்கத்தொகைகள் கொடுப்பதாக சில அறிக்கைகள் கூறுகின்றன.டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்கின் தனி... மேலும் பார்க்க

UP : `வருங்கால மருமகனுடன் வீட்டைவிட்டு வெளியேறியது ஏன்?’ - விசாரணையில் பெண் சொன்னதென்ன?

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகரை சேர்ந்த சப்னா என்ற பெண்ணின் மகளுக்கு ராகுல் என்பவருடன் திருமணம் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு இருந்தது. திருமணத்திற்கு 10 நாட்கள் மட்டுமே இருந்த நிலையில், சப்னா தனது வருங்க... மேலும் பார்க்க

Scuba Diving: ``நீருக்குள் சந்தித்தோம், அதனால்..'' - நீருக்கடியில் திருமணம் செய்த காதல் தம்பதி!

வித்தியாசமான முறையில் திருமணத்தை நடத்த வேண்டும் என்று விரும்பும் சில மணமக்கள், தங்களது திருமணங்களை தனித்துவமாக நடத்த முற்படுகின்றனர். அப்படி ஒரு காதல் ஜோடி நீருக்கடியில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.ப... மேலும் பார்க்க

தாராவி: `ஆவணங்களை தாக்கல் செய்யாதவர்கள், சட்டவிரோத குடியிருப்பாளர்கள்' - NMDPL அறிவிப்பால் அதிர்ச்சி

தாராவி குடிசை மேம்பாட்டு ஆணையம்ஆசியாவில் அதிக குடிசையுள்ள பகுதியாக பார்க்கப்படும் மும்பை தாராவியில் உள்ள குடியிருப்புகளை இடித்து விட்டு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை மாநில அரசு அதானி ந... மேலும் பார்க்க