செய்திகள் :

CPI: புதிய மாநிலச் செயலாளர் தேர்வு? முத்தரசன் மாற்றப்படுவாரா? - பரபரக்கும் சேலம் மாநாடு!

post image

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், இப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு புதிய மாநிலச் செயலாளரை கட்சித் தலைமை தேர்வு செய்யவுள்ளதாக தகவல்கள் உலா வருகின்றன. இவ்விவகாரம் குறித்து விரிவாக விசாரித்தோம்.

முத்தரசன் - ஸ்டாலின்

நம்மிடம் பேசிய விவரமறிந்தவர்கள், "மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை சி.பி.ஐ மாநில மாநாடு நடைபெறுவது வழக்கம், அந்த வரிசையில் கட்சியின் 26-வது மாநில மாநாடு சேலம் மாநகரில் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி மாலை தொடங்கி நடைபெற்றுவருகிறது. ஒவ்வொரு மாநில மாநாட்டின் இறுதியிலும் புதிய மாநிலச் செயலாளரையோ... பொறுப்பில் தொடர்வோரை மீண்டும் தேர்ந்தெடுப்பது வழக்கம். ஆனால் தற்போதைய மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அப்பொறுப்பில் தொடர்வதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. 2015-ல் கோயம்புத்தூரில் நடைபெற்ற கட்சியின் மாநில மாநாட்டில் மாநிலச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், 2019, 2022 ஆகிய மாநில மாநாடுகளில் மீண்டும் தேர்வாகி மாநிலச் செயலாளராக 9 ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டார்.

கட்சி விதிகளின்படி 75 வயதை கடந்தவர்களையும், மூன்று முறை பொறுப்பு வகித்தவர்களை மாற்ற வேண்டும் என்பது விதி. 75 வயதையும் முத்தரசன் கடந்துவிட்டதால் அவரை மாற்றும் வாய்ப்புகள் இருக்கின்றன" என்றனர்.

மு.வீரபாண்டியன்

நம்மிடம் பேசிய மாநிலக் குழு நிர்வாகிகள், "வயதுவரம்பை முத்தரசன் கடந்தாலும் மாநிலக் குழுவுக்கு மீண்டும் அவரையே தேர்வு செய்யும் அதிகாரமும் உண்டு. மூன்றில் இரு பங்கு நிர்வாகிகள் மீண்டும் முத்தரசனை ஆதரித்தால் மீண்டும் மாநிலச் செயலாளராக ஆக முடியும். அதை முத்தரசன் விரும்புகிறாரா.. கட்சி முத்தரசனை மீண்டும் தேர்ந்தெடுக்க விரும்புகிறதா என்பது ஆகஸ்ட் 18-ம் தேதி தெரியவரும். மாநிலச் செயலாளர்களுக்கான உத்தேச பட்டியலில் முன்னணி நிர்வாகிகளான மு.வீரபாண்டியன், நா.பெரியசாமி பெயர்கள் அடிபடுகின்றன" என்றனர்.

சி.பி.ராதாகிருஷ்ணன்: NDA கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிப்பு!

வரும் செப்டம்பர் 9ம் தேதி துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் தேசிய ஜனநாயக கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.பாரதிய ஜனதா கட்சியின்நாட... மேலும் பார்க்க

"7 நாட்களில் ஆதாரங்களைக் கொடுக்காவிட்டால் மன்னிப்பு கேட்கணும்" - ECI கெடு; காங்கிரஸ் எதிர்வினை

ராகுல் காந்தி வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள நிலையில், இன்று பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியது தேர்தல் ஆணையம்.ராகுல் காந்திக்கு கெடு விதித்த ECIஅதில், இன்னும் 7 நாட்களுக்குள் ராகுல்... மேலும் பார்க்க

மேடையில் காந்திமதி டு ராமதாஸ் - ராமதாஸ் தலைமையிலான சிறப்புப் பொதுக்குழு கூட்டம்|Photo Album

பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம்ராமதாஸ் | பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம்பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம்பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம்ராமதாஸ் | பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம்ராமதாஸ் | பாமக சிறப்பு பொ... மேலும் பார்க்க

Rahul Gandhi: "இனியும் தேர்தல்களை திருட விடமாட்டோம்" - வாக்காளர் அதிகார யாத்திரையில் சபதம்!

பீகார் மாநிலம், சாசரம் மாவட்டத்தில் தனது வாக்காளர் அதிகார யாத்திரையை இன்று தொடங்கியுள்ளார் ராகுல் காந்தி. பீகார், மகாராஷ்டிரா என நாட்டில் எங்கு வாக்கு திருடப்பட்டாலும் அதை அம்பலப்படுத்துவேன் என சபதமேற... மேலும் பார்க்க

'இந்த' சூழலில் எப்படி ஓட்டு திருட்டுகள் நடக்கும்? - தலைமைத் தேர்தல் ஆணையர் கேள்வி!

பீகாரின் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட சிறப்புத் தீவிர திருத்தத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பையும், குற்றச்சாட்டுகளையும் முன்வைத்திருக்கிறது. இந்தத் திருத்தத்தை எதிர்த்து பீகாரில் இன்று முதல் 16 நா... மேலும் பார்க்க