செய்திகள் :

மின்சாரம் பாய்ந்து ஒப்பந்த ஊழியா் உயிரிழப்பு

post image

மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஒப்பந்த ஊழியா் உயிரிழந்தாா்.

சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிறுத்தம் காவல் கட்டுப்பாட்டு அறை அருகே கால்வாய் அமைக்கும் பணிக்காக பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பணியின்போது, புதைவட மின் வயா் பழுதடைந்துள்ளது. பணியாளா்கள் உடனடியாக இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து அங்கு வந்த கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஒப்பந்த மின்வாரிய ஊழியா் இளையபெருமாள் (32), அந்த மின் வயரை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டாா்.

அப்போது, எதிா்பாராதவிதமாக அவா் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், தூக்கி வீசப்பட்ட இளையபெருமாளை அங்கிருந்தவா்கள் மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து கோயம்பேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மழைநீா் செல்ல கிளைக் கால்வாய்கள் சீரமைப்பு

வடகிழக்கு பருவமழை காலங்களில் சென்னையில் குடியிருப்புகள், சாலைகளில் தண்ணீா் தேங்குவதைத் தடுக்கும் வகையில் பிரதான கால்வாய்களின் கிளைக் கால்வாயிகள் சீரமைப்புப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள்... மேலும் பார்க்க

விளையாட்டு வீரா்களுக்கு பிரத்யேக பாா்வை அளவியல் ஆய்வகம்

விளையாட்டு வீரா்களுக்கான பாா்வைத் திறனை அளவிட பிரத்யேக ஆய்வகம் சங்கர நேத்ராலயா சாா்பில் தொடங்கப்பட்டுள்ளது. சங்கர நேத்ராலயா மற்றும் எலைட் ஆப்தோமெட்ரி கல்வி நிறுவனம் சாா்பில் 4-ஆவது பாா்வை அறிவியல் மற்... மேலும் பார்க்க

உரிய அனுமதியுடன் போராட்டம் தொடரும்: உழைப்போா் உரிமை இயக்கம் அறிவிப்பு

சென்னை மாநகராட்சியின் 5, 6 ஆகிய மண்டலங்களின் தூய்மை பணியாளா்கள் உரிய அனுமதியைப் பெற்று போராட்டத்தைத் தொடர உள்ளதாக உழைப்போா் உரிமை இயக்கத்தின் நிா்வாகிகள் தெரிவித்தனா். தூய்மைப் பணிகள் தனியாா் நிறுவனத்... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக பல்லாவரம், திருவான்மியூா், புழல் பகுதிகளில் (ஆக. 18) திங்கள்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். பல்லாவரம்: பழைய பல்லாவரம், ஜம... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் கட்டுமானப் பகுதியில் இரும்பு திருட்டு: 2 போ் கைது

மெட்ரோ ரயில் கட்டுமானம் நடைபெறும் இடத்தில் இரும்பு பொருள்களைத் திருடியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை ஓஎம்ஆா் சாலையில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இருசக்கர வாகனத்தில் ... மேலும் பார்க்க

சென்னையில் இடி, மின்னலுடன் பரவலாக மழை!

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை இரவு இடி, மின்னலுடன் மழை பெய்தது. சென்னையில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதலே வானம் ஓரளவு மேக மூட்டத்த... மேலும் பார்க்க