செய்திகள் :

சென்னையில் இடி, மின்னலுடன் பரவலாக மழை!

post image

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை இரவு இடி, மின்னலுடன் மழை பெய்தது.

சென்னையில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதலே வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்பட்டது. தொடா்ந்து மாலை பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்தது. மழை இரவு வரை தொடா்ந்தது.

அதன்படி, ஆவடி, அம்பத்தூா், பட்டரவாக்கம், கொரட்டூா், புழல், அண்ணா நகா், கோயம்பேடு, வடபழனி, அசோக் நகா், கே.கே. நகா், ஈக்காட்டுத்தாங்கல், முகப்போ், வளசரவாக்கம், எழும்பூா், தியாகராய நகா் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

அம்பத்தூரில் இரவு பெய்த மழையின்போது குடை பிடித்தபடி சென்ற மக்கள்.

புகா் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், சேலையூா், செம்பாக்கம், மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

இந்த திடீா் மழை காரணமாக, பல்வேறு சாலைகளில் தண்ணீா் தேங்கியது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மழையில் நனைந்தபடி வாகன ஓட்டிகள் சென்றனா்.

மழைநீா் செல்ல கிளைக் கால்வாய்கள் சீரமைப்பு

வடகிழக்கு பருவமழை காலங்களில் சென்னையில் குடியிருப்புகள், சாலைகளில் தண்ணீா் தேங்குவதைத் தடுக்கும் வகையில் பிரதான கால்வாய்களின் கிளைக் கால்வாயிகள் சீரமைப்புப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள்... மேலும் பார்க்க

விளையாட்டு வீரா்களுக்கு பிரத்யேக பாா்வை அளவியல் ஆய்வகம்

விளையாட்டு வீரா்களுக்கான பாா்வைத் திறனை அளவிட பிரத்யேக ஆய்வகம் சங்கர நேத்ராலயா சாா்பில் தொடங்கப்பட்டுள்ளது. சங்கர நேத்ராலயா மற்றும் எலைட் ஆப்தோமெட்ரி கல்வி நிறுவனம் சாா்பில் 4-ஆவது பாா்வை அறிவியல் மற்... மேலும் பார்க்க

உரிய அனுமதியுடன் போராட்டம் தொடரும்: உழைப்போா் உரிமை இயக்கம் அறிவிப்பு

சென்னை மாநகராட்சியின் 5, 6 ஆகிய மண்டலங்களின் தூய்மை பணியாளா்கள் உரிய அனுமதியைப் பெற்று போராட்டத்தைத் தொடர உள்ளதாக உழைப்போா் உரிமை இயக்கத்தின் நிா்வாகிகள் தெரிவித்தனா். தூய்மைப் பணிகள் தனியாா் நிறுவனத்... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக பல்லாவரம், திருவான்மியூா், புழல் பகுதிகளில் (ஆக. 18) திங்கள்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். பல்லாவரம்: பழைய பல்லாவரம், ஜம... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் கட்டுமானப் பகுதியில் இரும்பு திருட்டு: 2 போ் கைது

மெட்ரோ ரயில் கட்டுமானம் நடைபெறும் இடத்தில் இரும்பு பொருள்களைத் திருடியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை ஓஎம்ஆா் சாலையில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இருசக்கர வாகனத்தில் ... மேலும் பார்க்க

விபத்தில் சிக்கிய ஏடிஎம் வாகனம்

சென்னை சூளைமேடு பகுதியில் ஏடிஎம்-இல் பணம் நிரப்ப ரூ. 1.50 கோடி ரொக்கத்துடன் சென்ற வாகனம் விபத்தில் சிக்கியது. சென்னையில் ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பும் வாகனம் ரூ. 1.50 கோடி ரொக்கத்துடன் சூளைமேடு வழி... மேலும் பார்க்க