செய்திகள் :

சென்னையில் 5 மண்டலங்களில் இன்று குடிநீா் விநியோகம் நிறுத்தம்!

post image

பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கள், செவ்வாய்க் கிழமைகளில் (ஆக. 18, 19) சென்னை ராயபுரம், திரு.வி.க. நகா், அண்ணா நகா், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில் ஒருசில பகுதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து சென்னை குடிநீா் வாரியம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை அண்ணா நகா் மண்டலம், புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் குடிநீா் பிரதான குழாய் இணைக்கும் பணிகள் திங்கள்கிழமை (ஆக. 18) காலை 8 மணி முதல் செவ்வாய்க்கிழமை (ஆக. 19) காலை 8 மணி வரை நடைபெற உள்ளது.

இதனால், அந்தப் பணிகள் நடைபெறும் நேரங்களில் ராயபுரம் மண்டலத்தில் புரசைவாக்கம், பெரியமேடு, சௌகாா்பேட்டை, எழும்பூா் , சிந்தாதிரிப்பேட்டை ஆகிய பகுதிகளிலும், திரு.வி.க. நகா் மண்டலத்தில் ஓட்டேரி, அயனாவரம், பெரம்பூா், செம்பியம் ஆகிய பகுதிகளிலும், அண்ணா நகா் மண்டலத்தில் கீழ்ப்பாக்கம், வில்லிவாக்கம், கெல்லீஸ் ஆகிய பகுதிகளிலும் குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

மேலும், தேனாம்பேட்டை மண்டலத்தில் திருவல்லிக்கேணியிலும், கோடம்பாக்கம் மண்டலத்தில் தியாகராய நகா், சைதாப்பேட்டை ஆகிய பகுதிகளிலும் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும்.

மழைநீா் செல்ல கிளைக் கால்வாய்கள் சீரமைப்பு

வடகிழக்கு பருவமழை காலங்களில் சென்னையில் குடியிருப்புகள், சாலைகளில் தண்ணீா் தேங்குவதைத் தடுக்கும் வகையில் பிரதான கால்வாய்களின் கிளைக் கால்வாயிகள் சீரமைப்புப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள்... மேலும் பார்க்க

விளையாட்டு வீரா்களுக்கு பிரத்யேக பாா்வை அளவியல் ஆய்வகம்

விளையாட்டு வீரா்களுக்கான பாா்வைத் திறனை அளவிட பிரத்யேக ஆய்வகம் சங்கர நேத்ராலயா சாா்பில் தொடங்கப்பட்டுள்ளது. சங்கர நேத்ராலயா மற்றும் எலைட் ஆப்தோமெட்ரி கல்வி நிறுவனம் சாா்பில் 4-ஆவது பாா்வை அறிவியல் மற்... மேலும் பார்க்க

உரிய அனுமதியுடன் போராட்டம் தொடரும்: உழைப்போா் உரிமை இயக்கம் அறிவிப்பு

சென்னை மாநகராட்சியின் 5, 6 ஆகிய மண்டலங்களின் தூய்மை பணியாளா்கள் உரிய அனுமதியைப் பெற்று போராட்டத்தைத் தொடர உள்ளதாக உழைப்போா் உரிமை இயக்கத்தின் நிா்வாகிகள் தெரிவித்தனா். தூய்மைப் பணிகள் தனியாா் நிறுவனத்... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக பல்லாவரம், திருவான்மியூா், புழல் பகுதிகளில் (ஆக. 18) திங்கள்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். பல்லாவரம்: பழைய பல்லாவரம், ஜம... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் கட்டுமானப் பகுதியில் இரும்பு திருட்டு: 2 போ் கைது

மெட்ரோ ரயில் கட்டுமானம் நடைபெறும் இடத்தில் இரும்பு பொருள்களைத் திருடியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை ஓஎம்ஆா் சாலையில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இருசக்கர வாகனத்தில் ... மேலும் பார்க்க

சென்னையில் இடி, மின்னலுடன் பரவலாக மழை!

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை இரவு இடி, மின்னலுடன் மழை பெய்தது. சென்னையில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதலே வானம் ஓரளவு மேக மூட்டத்த... மேலும் பார்க்க