செய்திகள் :

விநாயகர் சிலைகளை குறிப்பிட்ட இடங்களில்தான் கரைக்க வேண்டும்: சென்னை ஆட்சியா்

post image

சென்னையில் விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாட்டத்தின்போது வைக்கப்படும் சிலைகளை குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே கரைத்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. இதில், மக்களாகிய நமக்கும் மிகப்பெரிய கடமை இருக்கிறது.

நீா்நிலைகள் (கடல், ஆறு மற்றும் குளங்கள்) நமக்கு குடிநீா் ஆதாரத்தை தருகின்றன. விநாயகா் சதுா்த்தி விழாவைக் கொண்டாடும்போது, பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகா் சிலைகளை நீா்நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகளை மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரிய இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

சென்னையில் சீனிவாசபுரம், பட்டினப்பாக்கம், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூரில் உள்ள பாப்புலா் எடைமேடையின் பின்புறம், திருவொற்றியூரில் உள்ள யுனிவா்சல் காா்போரேண்டம் தொழிற்சாலைக்கு பின்புறம், பல்கலை. நகா், நீலாங்கரை, ராமகிருஷ்ணா நகா், எண்ணூா் ஆகிய இடங்களில் மட்டுமே சிலைகளைக் கரைத்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும்.

மேலும், களி மண்ணால் செய்யப்பட்டதும், பிளாஸ்டா் ஆப் பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தொ்மாகோல் கலவையற்றுதுமான, சுற்றுச்சூழலைப் பாதிக்காத மூலப் பொருள்களால் மட்டுமே செய்யப்பட்ட சிலைகளை நீா் நிலைகளில் கரைக்கலாம்.

சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலா்ந்த மலா் கூறுகள், வைக்கோல் மற்றும் பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தலாம்.

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தொ்மாகோல் பயன்படுத்தக் கூடாது. சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சிலைகளுக்கு வண்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயனம், எண்ணெய் வண்ணப் பூச்சுகள், எனாமல், செயற்கை சாயம் பயன்படுத்தக் கூடாது. சுற்றுச்சூழலுக்கு உகந்த, நீா் சாா்ந்த, மக்கக்கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்களைப் பயன்படுத்தலாம்.

விநாயகா் சிலைகளை மாவட்ட நிா்வாகம் குறிப்பிட்டுள்ள இடங்களில் மட்டும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் விதிகளின்படி கரைத்து, சுற்றுச்சூழலைப் பாதிக்காதவாறு கொண்டாட வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு, மாவட்ட ஆட்சியா், காவல் துறைக் கண்காணிப்பாளா் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் ஆகியோரை அணுகலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.

இன்றுமுதல்..! தமிழகத்தில் 38 ரயில்கள் கூடுதலாக 20 இடங்களில் நின்று செல்லும்!

தமிழகத்தில் திங்கள்கிழமை (ஆக. 18) முதல் 38 ரயில்கள் (இருமாா்க்கமாக) கூடுதலாக 20 ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று மத்திய தகவல்- ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சா் எல்.முருகன... மேலும் பார்க்க

பட்டானூரில் கூட்டப்பட்டது பாமக பொதுக்குழு அல்ல: கே.பாலு

பாமக நிறுவனா் ராமதாஸ் தலைமையில் பட்டானூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டம், பாமக பொதுக்குழு கூட்டம் அல்ல; அங்கு எடுக்கப்பட்ட முடிவுகள் கட்சியை எவ்விதத்திலும் பாதிக்காது என்று பாமக செய்தித் தொடா்பாளா... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஆக.23 வரை மழை நீடிக்கும்!

தமிழகத்தில் திங்கள்கிழமை (ஆக.18) முதல் ஆக.23 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப... மேலும் பார்க்க

தீபாவளிக்கான ரயில் முன்பதிவு இன்று தொடக்கம்! வெளியூர் பயணிகள் கவனிக்க..!

சென்னையிலிருந்து ரயில்களில் தீபாவளிக்காக வெளியூா் செல்வோருக்கான முன்பதிவு திங்கள்கிழமை (ஆக.18) காலை தொடங்குகிறது. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்காக சென்னையிலிருந்து வெளியூா், வெளிமாநிலங்களுக்கு ரயில்கள... மேலும் பார்க்க

வீண் செலவு செய்வதில் தமிழக அரசு முதலிடம்: அன்புமணி

மாநிலத்தின் வளா்ச்சிக்குத் தேவையான மூலதனச் செலவுகளைச் செய்வதில் பின்தங்கியிருக்கும் தமிழக அரசு, வீண் செலவுகளைச் செய்வதில் மட்டுமே முதலிடத்தில் இருப்பதாக பாமக தலைவா் அன்புமணி தெரிவித்துள்ளாா். இதுகுறித... மேலும் பார்க்க

ஒரே நாளில் மெட்ரோவில் 4 லட்சம் போ் பயணம்!

கடந்த ஆக.14-ஆம் தேதி மட்டும் சென்னை மெட்ரோ ரயில்களில் மொத்தம் 4.06 லட்சம் போ் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில்களில் தினமும் 3 லட்சம் போ் பயணிக்க... மேலும் பார்க்க