செய்திகள் :

CPIM: புதிய பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி; அகில இந்திய மாநாட்டில் அறிவிப்பு

post image

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளராக கேரளாவைச் சேர்ந்த எம்.ஏ.பேபி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பிரகாஷ் காரத், எம்.ஏ.பேபி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24-ஆவது மாநாடு மதுரையில் கடந்த 2 ஆம் தேதி தொடங்கி இன்றுவரை நடைபெற்று வருகிறது. தினமும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், மூத்த தலைவர்களுடன், திரைப்படத்துறை படைப்பாளிகளும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

மாநில உரிமை குறித்த கருத்தரங்கில் கேரள முதலமைச்சருடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கலந்துகொண்டார்.

மாநாட்டின் நிறைவு நாளான இன்று மாலை மதுரை சுற்றுச்சாலையில் மாபெரும் செந்தொண்டர் அணிவகுப்பும், பாண்டி கோயில் அருகே பொதுக்கூட்டமும் நடைபெறுகிறது.

அதற்கு முன்பாக கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்கள், பொலிட் பீரோ உறுப்பினர்கள் கலந்தாலோசித்து புதிய பொதுச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளைத் தேர்வு செய்தனர். பொதுச்செயலாளர் பொறுப்புக்கு பொலிட் பீரோவிலுள்ள ஆந்திராவைச் சேர்ந்த ராகவலு, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பெயர்கள் பரிசீலனையில் இருந்த நிலையில் கேரளாவைச் சேர்ந்த எம்.ஏ.பேபி தேர்வு செய்யப்பட்டார். இது குறித்த அறிவிப்பை கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்தார்.

எம்.ஏ.பேபி

கேரள அரசில் கல்வி அமைச்சராக முன்பு பணியாற்றிய எம்.ஏ.பேபியின் பெயரை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் பரிந்துரைத்ததாகவும் அதை மற்ற நிர்வாகிகள் ஏகமனதாக ஆதரித்ததாகவும் சொல்லப்படுகிறது.

LPG: சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 50 உயர்வு; மோடி அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை, மத்திய அரசு ரூ. 50 உயர்த்தியிருக்கிறது.மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியின் அறிவிப்பின்படி, நாளை (ஏப்ரல் 8) முதல் இது நடைமுறைக்கு வரு... மேலும் பார்க்க

'அதிமுகவினர் அண்ணன், தம்பி போல உள்ளோம்; இதனால்தான் செங்கோட்டையன் உள்ளே இருந்தார்' - ஓ.எஸ்.மணியன்

அதிமுகவினர் இன்று அவையில் இருந்து வெளிநடப்பு செய்தபோது, செங்கோட்டையன் மட்டும் அவையில் இருந்தது குறித்து முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விளக்கம் அளித்திருக்கிறார். அந்த தியாகி யார்? என்ற பேட்ஜ் அணிந்த ... மேலும் பார்க்க

யார் அந்த தியாகி: "அவருக்கு பட்டம் கொடுத்த நீங்கதான் சொல்லணும்" - TASMAC வழக்கில் CM-க்கு EPS பதிலடி

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று (ஏப்ரல் 7) நடைபெற்ற கூட்டத்தில், டாஸ்மாக் வழக்கு தொடர்பாக `யார் அந்த தியாகி?' என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பினார்.ஆனால், சட்டமன்றத்தில் தொடர... மேலும் பார்க்க

Congress : `அன்று’ விழுத் தொடங்கிய காங்கிரஸ் இன்னும் எழ முடியாமல் திணறுவது ஏன்? - விரிவான அலசல்!

`முன்னொரு காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் என்ற ஒரு கட்சி இருந்ததாகவும், அதைப் பல முக்கிய அரசியல் தலைவர்கள் வழிநடத்தியதாகவும் கேள்விப்பட்டிருக்கிறோம்' என மக்கள் பே... மேலும் பார்க்க

இபிஎஸ் OUT; செங்கோட்டையன் IN; `காலில் விழுந்த EPS' - `பொம்மை முதல்வர்' - சட்டசபையில் நடந்தது என்ன?

தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று (ஏப்ரல் 7) கூடியது. அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் குறித்து கவன ஈர்ப்பு நேரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச எழுந்ததும், சட்டப்பேரவை நேரலை ஒளிபரப... மேலும் பார்க்க

`அந்த தியாகி யார்?' - சட்டப்பேரவைக்கு பேட்ஜ் அணிந்து வந்த அதிமுக எம்.எல்.ஏ-க்கள்; காரணம் என்ன?

தமிழக அரசின் 2025-2026ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை கடந்த மாதம் 14-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். 15-ம் தேதி வேளாண்மை பட்ஜெட்டை வேளாண்மை துறை அமைச்சர் ... மேலும் பார்க்க