செய்திகள் :

Dhoni: ``உன் ஓவரை தோனி நொறுக்க வேண்டும்'' - இளம் வீரரின் கையில் பந்தைக் கொடுத்த ரோஹித்

post image

ஐபிஎல் திருவிழா நடப்பு சாம்பியன் கொல்கத்தா vs பெங்களூரு ஆட்டத்துடன் மார்ச் 22-ம் தேதி தொடங்கியது. முதல் போட்டியில் பெங்களூரு அணியும், இரண்டாவது போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் அணியும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மூன்றாவது போட்டியில் மும்பை அணியும், சென்னை அணியும் சேப்பாக்கத்தில் மார்ச் 23-ம் தேதி மோதின. இதில், சென்னை அணி 4 வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

Dhoni - csk vs mi
Dhoni - csk vs mi

அதற்கு மேலாக, எப்போதும் போல தன்னைக் காணக் குவிந்த ரசிகர்களுக்கு, மும்பை கேப்டன் சூர்யகுமார் யாதவை மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்து விருந்தளித்தார் தோனி. இந்த நிலையில், தற்போது கொல்கத்தா அணியில் முக்கிய வீரராக விளையாடிவரும் ரமன்தீப் சிங், 2022-ல் மும்பை அணியில் விளையாடிக்கொண்டிருந்தபோது அப்போதைய கேப்டன் ரோஹித் சர்மா, தோனிக்கெதிராகத் தன்னை பந்துவீசச் சொன்ன அனுபவத்தைப் பகிர்ந்திருக்கிறார்.

ரமன்தீப் சிங்
ரமன்தீப் சிங்

பாட்காஸ்ட் நிகழ்ச்சியையொன்றில் அதை விவரித்த ரமன்தீப் சிங், ``தோனி பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது, ரோஹித் என்னிடம் பந்தைக் கொடுத்து, `ரோஹித் உன் ஓவரை நொறுக்க வேண்டும்' என்று கூறினார். ஏனெனில், அந்த சமயத்தில் அவர்களை ஏழு விக்கெட்டுகளை இழந்திருந்தனர். எனவே, அவர் என் ஓவரை அடித்தாலும் பரவாயில்லை, ஒருவேளை அடிக்க முயன்று விக்கெட்டை இழந்தால் நாங்கள் வெற்றிபெறுவோம்" என்று கூறினார்.

மேலும், ரோஹித்தின் தலைமைப் பண்பு குறித்து பேசுகையில், ``ஒரு அணியில் நீங்கள் இடம்பிடிக்கும்போது, அந்த அணியின் கேப்டனால் மட்டும்தான் உங்களுக்கு சுதந்திர உணர்வைத் தர முடியும். ரோஹித் உண்மையான தலைவர்" என்று ரமன்தீப் சிங் கூறினார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

LSG: லக்னோவுக்கு கேப்டன் ஆனாலே டக் அவுட் ஆவார்களா... அன்று கே.எல்.ராகுல் இன்று ரிஷப் பன்ட்!

ஐபிஎல்லில் கடந்த ஆண்டு ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் லக்னோ அணி தோல்வியடைந்ததையடுத்து, லக்னோ கேப்டன் கே.எல்.ராகுலிடம் அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா மைதானத்திலேயே ஆக்ரோஷமாகப் பேசும் வீடியோ... மேலும் பார்க்க

ஸ்ரேயாஷ் ஐயர்: பஞ்சாப் அணியின் புது வரலாற்றை எழுதப்போகும் ஸ்ரேயாஷ்; எப்படித் தெரியுமா?

பஞ்சாப் அணி இந்த சீசனை வெற்றியோடு தொடங்கியிருக்கிறது. 11 ரன்கள் வித்தியாசத்திலான வெற்றிதான். பொதுவாகப் பார்த்தால் அத்தனை முக்கியமான வெற்றியெல்லாம் இல்லை. இன்னும் சீசன் இருக்கிறது. இன்னும் போட்டிகள் இர... மேலும் பார்க்க

'கோலியும், நானும் இப்போ கேப்டன் இல்ல, அதனால...' - விராட் கோலி குறித்து தோனி ஷேரிங்ஸ்

ஐபிஎல் 18-வது சீசன் மார்ச் 22-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தோனி ஜியோ ஹாட்ஸ்டாருக்கு அளித்த பேட்டி ஒன்றில் விராட் கோலி குறித்து பகிர்ந்திருக்கிறார். தோனி"விராட் கோலியை பொறுத்தவரை அவர... மேலும் பார்க்க

DRS எடுக்காததால் பறிபோன வாய்ப்பு... இரண்டே நாளில் ரோஹித்தை முந்தி மோசமான சாதனை படைத்த மேக்ஸ்வெல்

ஐபிஎல் நேற்றைய (மார்ச் 25) போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணியும், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் அணியும் அகமதாபாத்தில் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செ... மேலும் பார்க்க

Shreyas Iyer : `சாய் சுதர்சனின் விக்கெட்டை எடுத்த ரகசியம் இதுதான்' - ஆட்டநாயகன் ஸ்ரேயாஸ் ஐயர்

பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகளுக்கிடையேயான போட்டியில் பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. பஞ்சாப் அணி சார்பில் டெத் ஓவரில் வைஷாக் விஜயகுமார், மார்கோ யான்சென், அர்ஷ்தீப் குமார் ஆகியோர... மேலும் பார்க்க

GT vs PBKS : தியாகம் செய்த ஸ்ரேயாஸ்; வைசாக்கின் வைட் யார்க்கர் மந்திரம் - பஞ்சாப் வென்றது எப்படி?

பீல்டிங்கைத் தேர்வு செய்த கில்!ஐ.பி.எல் 18வது சீசனின் 5வது போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியலில் தங்கள் முதல் கணக்கைத் தொடங்க அகமதாபாத்தில் பலப்பரீட்சை நடத்தின... மேலும் பார்க்க