செய்திகள் :

Digvesh Rathi: `5 பந்துகளில் 5 விக்கெட்'- IPLல் 3 முறை அபராதத்துக்குள்ளான மிஸ்ட்ரி ஸ்பின்னர் அசத்தல்

post image

இந்த ஆண்டு நடந்து முடிந்த ஐ.பி.எல்லில் கவனம் ஈர்த்தவர்களில் குறிப்பிடத்தக்கவர், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் 25 வயது அறிமுக சுழற்பந்துவீச்சாளர் திக்வேஷ் ரதி.

மொத்தம் 13 போட்டிகளில் 8 எக்கனாமியில் 14 விக்கெட்டுகள் வீழ்த்தி, இந்த சீசனில் லக்னோ அணியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவராக கவனம் ஈர்த்தார்.

அதேசமயம், விக்கெட் எடுத்த பிறகு இவர் செய்யும் நோட்புக் செலிபிரேஷனால் பிசிசிஐ-யால் மூன்று முறை அபராதம் விதிக்கப்பட்டு, ஒரு போட்டியில் விளையாடத் தடையும் விதிக்கப்பட்டார்.

Digvesh Rathi & Abhishek Sharma
Digvesh Rathi & Abhishek Sharma

ஏலத்தில் ஆரம்ப விலையான ரூ. 30 லட்சத்துக்கு வாங்கப்பட்ட திக்வேஷ் ரதி, அதில் அபராதமாக மட்டும் ரூ. 9.37 லட்சம் செலுத்தினர்.

இதனால், பலரும் திக்வேஷ் ரதிக்கு ஆதரவாக முன்வந்து, கோலி போன்ற வீரர்கள் இவ்வாறு ஆக்ரோஷமாக செலிபிரேஷன் செய்யும்போதும் பிசிசிஐ இதேபோல அபராதம் விதிக்குமா என்று கேள்வியெழுப்பினார்.

ஆனால், இதற்கெல்லாம் தனது பந்துவீச்சு மூலமாகவே திக்வேஷ் ரதி பதிலளித்து வந்தார்.

இந்த நிலையில், உள்ளூர் டி20 போட்டியொன்றில் 5 பந்துகளில் 5 விக்கெட் எடுத்து மீண்டும் தன்னை நிரூபித்திருக்கிறார் திக்வேஷ் ரதி.

இதில், முதலில் பேட்டிங் செய்த திக்வேஷ் ரதியின் சஹகல் கிரிக்கெட் கிளப் (SCC) அணி, 20 ஓவர்களில் 263 ரன்கள் குவித்தது.

அதையடுத்து, 264 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஏபி ரைசிங் அணி, 14 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் அடித்து தோல்விக்கு மிக அருகில் நின்றுகொண்டிருந்தது.

அப்போது, 15-வது ஓவரை வீசவந்த திக்வேஷ் ரதி முதல் ஐந்து பந்துகளிலேயே ஏபி ரைசிங் அணியின் மீதமிருந்த 5 விக்கெட்டுகளை வீழ்த்தி, 112 ரன்கள் வித்தியாசத்தில் தனது அணியை வெற்றிபெறவைத்தார்.

இந்தப் போட்டியில் மொத்தமாக 3.5 ஓவர்களில் 28 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகள் வீழ்த்திய திக்வேஷ் ரதிக்கு பலரும் வாழ்த்து தெரிவிப்பதோடு, அவர் விக்கெட் எடுத்த வீடியோவையும் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

அந்த வரிசையில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி அந்த வீடியோவைத் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் ஷேர் செய்து, "திக்வேஷ் ரதி 5 ஸ்டார்ஸ்" என ட்வீட் செய்து பாராட்டியிருக்கிறது.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி உரிமையாளரான சஞ்சீவ் கோயன்காவும் எக்ஸ் தளத்தில் இந்த வீடியோவை ஷேர் செய்து வாழ்த்தியிருக்கிறார்.

Kohli: ``சச்சினை விட கோலி சற்று வித்தியாசமான குணமுடையவர்..'' - விவரிக்கும் லெஜண்ட் ஆண்டர்சன்

இங்கிலாந்து vs இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20-ம் முதல் இங்கிலாந்தில் நடைபெறவிருக்கிறது.கடந்த மாதம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து கோலி ஓய்வை அறிவித்ததால், 2014-க்கு பிறகு முதல்முற... மேலும் பார்க்க

"டெஸ்ட் ஓய்வை திரும்பப் பெறுங்கள்" - கோலிக்கு மகனின் குறிப்பு... இன்ஸ்டா பதிவை நீக்கிய அனுஷ்கா

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட் அணிக்காக 2011 முதல் 14 ஆண்டுகளாக ரன் மெஷினாக விளையாடிவந்த விராட் கோலி, ஐபிஎல் தொடர் பாதியிலேயே மே 12-ம் தேதி, சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறி... மேலும் பார்க்க

Bihar: "வைபவ் அண்ணாவை பின்பற்றுகிறேன்..." - 134 பந்துகளில் 327 ரன்கள் அடித்த சூர்யவன்ஷியின் நண்பன்!

IPL 2025ல் கலக்கிய சிறுவன் சூர்யவன்ஷியின் நண்பன் அயன் ராஜ், மாவட்ட அளவிலான போட்டியில் அதேபாணியில் விளையாடி அசத்தியுள்ளார். பீகார் மாநிலம் முசாபர்பூரில் நடந்த 30 ஓவர் போட்டியில், 134 பந்துகளில் 22 சிக்... மேலும் பார்க்க

Mathews : 'கேப்டனா இருக்கும்போதுதான் என் முடியெல்லாம் கொட்டுச்சு!' - மேத்யூஸ் கலகல

தற்போது நடந்து வரும் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியோடு இலங்கை அணியின் சீனியர் வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவிருக்கிறார். ஓய்வு முடிவைப் பற்றிப் பேசுகையில் மேத்யூஸ் சி... மேலும் பார்க்க

TNPL: அண்ணன் - தம்பி அதிரடி அரைசதம்... போராடி தோற்ற அஸ்வினின் திண்டுக்கல் அணி!

டிஎன்பிஎல் 14 -வது லீக் போட்டி சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியை திண்டுக்கல் டிராகன்ஸ் அணி எதிர்கொண்டது. டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந... மேலும் பார்க்க

ENG vs IND: "இந்தியாவின் முன்னணி வீரர் என்னை ஓய்வுபெறச் சொன்னார்; காரணம்..." - பகிரும் கருண் நாயர்

டெஸ்ட் கிரிக்கெட்டில் 2016-ல் அறிமுகமாகி, முதல் தொடரிலேயே முச்சதம் அடித்த கருண் நாயர் அடுத்த 6 மாதங்களிலேயே அணியிலிருந்து கழற்றிவிடப்பட்டார்.அதன்பிறகு அணியில் இடம்பிடிக்க கடுமையாகப் போராடிய கருண் நாயர... மேலும் பார்க்க