செய்திகள் :

ECR: காரில் பெண்களை துரத்தும் இளைஞர்கள்; கண்டிக்கும் கட்சிகள்; என்ன நடந்தது? - காவல் துறை விளக்கம்

post image
சென்னை ஈ.சி.ஆர் சாலையில் காரில் வரும் பெண்களை, மற்றொரு காரில் துரத்தி, சாலையின் குறுக்கே காரை நிறுத்தி அவர்களைச் செல்ல விடாமல் தடுத்து அராஜகத்தில் ஈடுபடும் காணொலி சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

மேலும், அந்தக் காணொலியில் பெண்களின் காரை இடைமறித்து, காரின் கதவைத் திறக்கச் சொல்லி மிரட்டுவது பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் கூடுதலாக, பெண்களைத் துரத்திய அந்த இளைஞர்களின் காரில் தி.மு.க கொடி பறப்பது அரசியல் சர்ச்சையாகக் கிளப்பியிருக்கிறது. இந்தக் காணொலியை அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட பிற கட்சிகள் தங்களின் சமூகவலைதளங்களில் பகிர்ந்து தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, "இந்த வழக்கில், நேர்மையாக FIR பதிந்து, பாதிக்கப்பட்டோர் விவரம் லீக் ஆகாததை உறுதிசெய்து, அரசியல் தலையீடு இல்லாமல் இக்குற்றத்தில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்து, உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்." என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, "ஈ.சி.ஆர் சாலையில் பெண்களை இளைஞர்கள் துரத்தும் வீடியோவைப் பார்க்கும்போது பதறுகிறது. தமிழ்நாட்டில் எந்த அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்க்கெட்டுள்ளது என்பதற்கு இந்த ஈ.சி.ஆர் சம்பவம் ஓர் உதாரணம்" என்று கூறியிருக்கிறார்.

பா.ம.க தலைவர் அன்புமணி, "சமூக விரோதிகளுக்கு துணிச்சல் எவ்வாறு ஏற்பட்டது? சென்னையின் மிக முக்கிய சாலையில் பயணிக்கும் பெண்களை காரைக் கொண்டு தடுத்து நிறுத்தும் துணிச்சல் சமூக விரோதிகளுக்கு எவ்வாறு ஏற்பட்டது? கிழக்குக் கடற்கரை சாலையில் பெண்களை துரத்திச் சென்று தொல்லை கொடுத்த திமுகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

ஈ.சி.ஆர் வைரல் காணொலி காட்சிகள்

இந்நிலையில் "சென்னை ஈ.சி.ஆர் சாலையில் இளைஞர்களின் காரை பெண்களின் கார் இடித்துவிட்டு நிறுத்தாமல் சென்றதால், அந்த இளைஞர்கள் அந்தப் பெண்களின் காரை துரத்திச் சென்றுள்ளனர். பிரச்னையில் ஈடுபட்ட இளைஞர்களைப் பிடிக்க இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர்களைக் கைது செய்வோம்" என்று சென்னை கிழக்குக் கடற்கரை கானாத்தூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

``அம்பேத்கருக்கு பாரத ரத்னா வழங்காத காங்கிரஸ், என்னை ஜெய்பீம் சொல்லச் சொல்கிறது '' -பிரதமர் மோடி

இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31-ம் தேதி நடைபெற்றது.இந்த பட்ஜெட் வரவேற்பையும், விமர்சனங்களையும் பெற்று பெரும் பேசுபொருளாகியிருந்தது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள், பட்ஜெட் ம... மேலும் பார்க்க

இந்தியர்களுக்கு கை விலங்கு: `சட்டப்படிதான் அமெரிக்கா நடந்தது, ஆனால்..' -ஜெய்சங்கர் சொல்வதென்ன?

அமெரிக்காவில் சட்டத்திற்கு புறம்பாக குடியேறிய 104 இந்தியர்களை முதல் கட்டமாக வெளியேற்றியுள்ளது அமெரிக்கா. அவர்கள் அமெரிக்காவின் சி17 ராணுவ விமானம் மூலம் பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் விமான நிலையத்திற்... மேலும் பார்க்க

``சட்டவிரோதமாகக் குடியேறிய ஏலியன்ஸ்..'' -இந்தியர்களின் கை கால்களில் விலங்கிட்டு அனுப்பிய அமெரிக்கா

டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற நாள்முதல், அமெரிக்காவில் ஏற்கெனவே சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை அதிபரின் உத்தரவின்படி அமெரிக்க ராணுவம் வெளியேற்றிவருகிறது. அதன்படி, சட்டவிரோதமாக அமெரிக்க... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: சுட்டிக்காட்டிய ஜூ.வி; கழிவறையை சுத்தம் செய்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!

திருப்பத்தூரில் வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் வந்து பார்வையிட்ட கழிவறை, மூன்றே மாதங்களில் மீண்டும் மோசமான நிலைக்குச் சென்றது.எவ்வித பராமரிப்புமின்றி மிக அசுத்தமான நிலையில் ‌தூய்மையற்று சுகாதார ... மேலும் பார்க்க

WHO: 'அடுத்தடுத்து விலகும் அமெரிக்கா, அர்ஜென்டினா... அதிகரிக்கும் சீனா-வின் ஆதிக்கம்?' | Explained

கடந்த ஜனவரி 20-ம் தேதி அமெரிக்க அதிபராக பதவியேற்ற ட்ரம்ப் போட்ட முதல் கையெழுத்துகளில் ஒன்று, 'உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து அமெரிக்கா விலகுவது' குறித்ததாகும். 'உலக சுகாதார நிறுவனம் கொரோனா பேரிடரை ச... மேலும் பார்க்க

``சீமான் ப்யூர் வலதுசாரி... NTK முன்வைப்பது பாசிசம்!” - VCK ஆளூர் ஷாநவாஸ் பேட்டி

``2002-03 காலகட்டத்தில் பெரியாரை வி.சி.க-வும் கடுமையாக சாடியிருக்கிறதே... எதோ முதன்முதலாக பெரியாரை சீமான்தான் விமர்சிப்பதுபோல பேசுகிறீர்களே!”``பெரியார் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல. ஆனால் நாம் ... மேலும் பார்க்க