செய்திகள் :

ENG vs IND: "கேப்டனின் கனவு வீரர் சிராஜ்; நாங்கள் கற்றுக்கொண்டது..." - தொடர் நாயகன் சுப்மன் கில்

post image

இங்கிலாந்து ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 5-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இப்போட்டியில் சிராஜ் 9 விக்கெட்டுகளும், பிரசித் கிருஷ்ணா 8 விக்கெட்டுகளும் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர்.

இப்போட்டியின் வெற்றியின் மூலம் இந்திய அணி 2 - 2 என தொடரை சமன் செய்திருக்கிறது.

ஆட்ட நாயகன் விருதை சிராஜ் வென்றார். இத்தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 23 விக்கெட்டுகளுடன் இவரே முதலிடத்தில் இருக்கிறார்.

இந்திய அணி வெற்றி
இந்திய அணி வெற்றி

அதேபோல், இரண்டு அணிகளின் தலைமைப் பயிற்சியாளர்கள் எதிரெதிர் அணியிலிருந்து தலா ஒருவரை தொடர் நாயகனாகத் தேர்வு செய்தனர்.

அதன்படி, இத்தொடரில் 754 ரன்கள் அடித்த இந்திய கேப்டன் சுப்மன் கில்லை பிரெண்டன் மெக்கலம்மும், 481 ரன்கள் அடித்த இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக்கை கவுதம் கம்பீரும் தொடர் நாயகர்களாகத் தேர்வு செய்தனர்.

தொடர்நாயகன் விருது வென்ற பின்னர் பேசிய சுப்மன் கில், "இரண்டு அணிகளும் விளையாடிய விதம் மிகச் சிறப்பாக இருந்தது.

போட்டியின் கடைசி நாள்களில் இரண்டு அணிகளும் முடிவு என்னவென்று தெரியாமல் களமிறங்கின.

சிராஜ், பிரசித் போன்ற பவுலர்கள் உங்களிடம் இருக்கும்போது கேப்டன்சி எளிதாகத் தெரிகிறது.

சுப்மன் கில்
சுப்மன் கில்

இன்று நாங்கள் எதிர்வினையாற்றிய விதம் அற்புதமாக இருந்தது. நாங்கள் உறுதியுடன் இருந்தோம்.

கேப்டனின் கனவு வீரர் சிராஜ். ஒவ்வொரு பந்திலும், ஒவ்வொரு ஓவரிலும் தன்னால் முடிந்த அனைத்தையும் கொடுத்தார்.

சிராஜ்
சிராஜ்

2 - 2 என்பது நியாயமான பிரதிபலிப்புதான். இரு அணிகளும் எப்படி விளையாடியது என்பதை இது வெளிப்படுத்துகிறது.

இந்தத் தொடரில் சிறந்த பேட்டராக இருப்பதே எனது நோக்கமாக இருந்தது. இப்போது திருப்தியாக இருக்கிறது.

இந்த ஆறு வரங்களிலிருந்து கற்றுக்கொண்டது, `இறுதிவரைப் போராட வேண்டும்' என்பதுதான்." என்று கூறினார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Eng vs Ind: "ஒவ்வொரு போட்டியிலும் போராடினோம்; சண்டை செய்தோம்" - வெற்றியில் நெகிழும் கே.எல்.ராகுல்!

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியை இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இந்த வெற்றியின் மூலம் தொடரையும் 2-2 என இந்திய அணி டிரா செய்திருக்கிறது. இந்த ஓவல் போட்டியைப் பரபரப்... மேலும் பார்க்க

'அவரைப் போன்ற வீரர் நமது அணியிலும் இருக்க வேண்டும் என நினைக்க வைப்பவர்' - சிராஜை பாராட்டிய ஜோ ரூட்

இங்கிலாந்து வீரர் ஜோ ரூட், முகமது சிராஜை `உண்மையான போராளி’ என்று பாராட்டி பேசியிருக்கிறார்.இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டி பரபரப்பாக முடிந்திருக்கும் நிலையில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட், இந்... மேலும் பார்க்க

ENG vs IND: `ப்ரூக் கேட்சை பிடித்தபோது பவுண்டரி லைனில்..!’ - வெற்றிக்குப் பின்னர் சிராஜ்

இங்கிலாந்து ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 5-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்றது.இப்போட்டியில் சிராஜ் 9 விக்கெட்டுகளும், பிரசித் கிருஷ்ணா 8 விக்கெட்டுகளும் வீழ்த... மேலும் பார்க்க

Shashi Thaoor: ``விராட் கோலியை இந்த போட்டியில்தான் அதிகமாக மிஸ் செய்கிறேன்'' - சசி தரூர் விமர்சனம்

இந்தியா இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இங்கிலாந்து அணி இதுவரை இரண்டு போட்டிகள் வென்று முன்னிலையில் உள்ளது. ஒரு போட்டி சமன் செய்யப்பட்ட நிலையில், ஒரு போட்டியில் மட்டுமே ... மேலும் பார்க்க

Chahal: `சில சமயங்களில் சில விஷயங்கள் காயப்படுத்துகின்றன' -ரோஹித் மனைவியின் கருத்து குறித்து சாஹல்

இந்திய கிரிக்கெட் வீரரான சாஹல் சமீபத்தில் கலந்துகொண்ட பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் தன்னுடைய கிரிக்கெட் வாழ்கை, மனைவியுடனான விவாகரத்து, மன அழுத்தம் என பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார். இந்நிலையி... மேலும் பார்க்க

Dhoni: "மகள்கள்தான் பெற்றோரை நன்றாகப் பார்த்துக் கொள்வார்கள்" - தோனி எமோஷனல்!

சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றின் திறப்பு விழாவில் தோனி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டிருந்தார். மருத்துவமனையைத் திறந்து வைத்து விட்டு சில முக்கியமான விஷயங்களை தோனி பேசியிருந்தார்.தோனிரேபிட்... மேலும் பார்க்க