செய்திகள் :

India - Pakistan:``தேசத்தைக் காக்க எப்போதும் தயாராக இருக்கிறோம்"- Ceasefire குறித்து இந்திய ராணுவம்!

post image

இந்தியா பாகிஸ்தான் இடையே தொடர்ந்த மோதல் போக்கை கைவிடுமாறு அமெரிக்கா இரண்டு நாட்டிடமும் கோரிக்கை வைத்துவந்தது. இது தொடர்பாக இரு நாட்டின் தலைவர்களிடமும் சமாதானப்பேச்சு வார்த்தை நடத்தியது. இந்த நிலையில், இரு நாடுகளும் இந்த மோதல் போக்கை நிறுத்துவதாக ஒப்புக்கொண்டன என அமெரிக்க அதிபர் அறிவித்தார். அதைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் அதிகாரிகள் இரு நாடுகளும் வான், கடல், தரை வழித் தாக்குதல்களை நிறுத்துவதாக அறிவித்தனர்.

Commodore Raghu R Nair
Commodore Raghu R Nair

இந்த நிலையில், இந்தியா போர் நிறுத்த முடிவை அறிவித்த சிறிது நேரத்திலேயே அரசு மாநாட்டில் பேசிய கமாண்டர் ரகு ஆர் நாயர், ``இன்று எட்டப்பட்ட புரிதலை நாங்கள் கடைப்பிடிப்போம். அதே நேரத்தில் தாய்நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க நாங்கள் முழுமையாகத் தயாராகவும், எப்போதும் விழிப்புடனும், உறுதியுடனும் இருக்கிறோம். பாகிஸ்தானின் ஒவ்வொரு தவறான முயற்சியும் பலத்துடன் எதிர்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் எதிர்காலத்தில் ஏற்படும் ஒவ்வொரு தீவிரத் தாக்குதலுக்கும் ஒரு தீர்க்கமான பதிலை கொடுப்போம். தேசத்தைப் பாதுகாப்பதற்காகத் தேவைப்படும் எந்த நடவடிக்கைகளையும் தொடங்க நாங்கள் முழுமையாக செயல்பாட்டு ரீதியாக தயாராக இருக்கிறோம்" என்றார்.

'கொலை மிரட்டல் விடுத்தவரை கண்டறியாமல் விளம்பரப்படுத்துவதா?' - வேலுமணி வருத்தம்!

கோவை அதிமுக அலுவலகத்தில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, அதிமுக எம்எல்ஏ-க்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது வேலுமணி செய்தியாளர்களுக்கு... மேலும் பார்க்க

’மத்திய வரிகளில் மாநிலத்திற்கு 50% வேண்டும்’- நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியது என்ன?

நிதி ஆயோக்கின் 10வது நிர்வாகக் குழு கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில முதலமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள் கலந்து கொண்டனர்... மேலும் பார்க்க

புதுச்சேரி: `பாண்லே நஷ்டத்தில் இயங்குகிறது… பாதி ஊழியர்களை காணவில்லை’ – அப்செட்டான முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி குருமாம்பேட்டில் இயங்கி வரும் அரசின் பாண்லே நிறுவனத்தில், 20,000 லிட்டர் ஐஸ்கிரீம் உற்பத்திக் கூடம் அமைக்கும் பணியை முதல்வர் ரங்கசாமி அடிக்கல் நாட்டி நேற்று துவக்கி வைத்தார். அப்போது பேசிய ... மேலும் பார்க்க

நிதி ஆயோக்: முதல்வர் ரங்கசாமி புறக்கணிப்பும்… திமுக-வின் குற்றச்சாட்டுகளும்!

நாட்டின் நிதி நிர்வாகம் தொடர்பாக ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு நிதி ஆயோக் கூட்டத்தை நடத்தி வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான நிதி ஆயோக் ஆட்சிக் குழு கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை தொடங்கியிர... மேலும் பார்க்க

Trump: 'இதை செய்யவில்லை என்றால், ஆப்பிள் நிறுவனத்துக்கு 25% வரி விதிக்கப்படும்' - மிரட்டும் ட்ரம்ப்

ஆப்பிள் (Apple) நிறுவனம் தனது ஐபோன்களை அமெரிக்காவில் தயாரிக்கவில்லை என்றால், இறக்குமதி செய்யப்படும் ஐபோன்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருக்கி... மேலும் பார்க்க

'விரைவில் கூட்டணி குறித்து அறிவிப்பு' - பிரேமலதாவின் கணக்கு என்ன?

தே.மு.தி.க மீது மாறி, மாறி கூட்டணி பேரம் பேசும் கட்சி என்கிற விமர்சனம் இருக்கிறது. இதை உடைக்க வேண்டும் என்பதற்காகவே கடந்த தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் உறுதியாக இருந்தார், பிரேமலதா. தே.மு.தி.க தலைவர... மேலும் பார்க்க