செய்திகள் :

Kanimozhi: `தமிழன் கங்கையை வெல்வான்’ - மக்களவையில் அமித் ஷா முன் கர்ஜித்த கனிமொழி

post image

பஹல்காம் தீவிரவாத தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் பற்றி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்ற மக்களவையில் இன்று உரையாற்றினார்.

தனது உரையில் அமித் ஷா, "இன்று, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இருப்பது ஜவஹர்லால் நேருவினால் மட்டுமே.

1971-ல், சிம்லா ஒப்பந்தத்தின் போது, காங்கிரஸ் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைப் பற்றி மறந்துவிட்டனர்.

அப்போது அவர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை எடுத்திருந்தால், இப்போது அங்குள்ள முகாம்களில் தாக்குதல்களை நடத்த வேண்டியிருந்திருக்காது.” என்று காங்கிரஸையும், நேருவையும் குற்றம்சாட்டினார்.

அமித் ஷா
அமித் ஷா

அவரைத்தொடர்ந்து திமுக எம்.பி கனிமொழி உரையாற்றத் தொடங்கினர். அப்போது கனிமொழி, "வரலாற்றை நீங்கள் மாற்றி எழுதுகிறீர்கள். உங்களால் தமிழ்நாட்டில் பல இளைஞர்கள் மீண்டும் பெரியார், அம்பேத்கரைப் படிக்கிறார்கள்.

உலகெங்கிலும் இருந்து இளைஞர்கள் நேருவைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள்.

நீங்கள் என்ன தவறு செய்தாலும் அதற்கு காரணம் நேரு என்கிறீர்கள். அதனால், மாணவர்கள் அவரைப் பற்றி தெரிந்துள்ள விரும்புகிறார்கள்.

நம்முடைய அமைதி சீர்குலைந்துவிட்டது. இந்திய மக்களை நீங்கள் தோற்கடித்துவிட்டீர்கள்.

மத்திய உள்துறை அமைச்சர், எதிர்க்கட்சிகள் மீது பழிபோடுவதிலேயே குறியாக இருக்கிறார்.

அடுத்த 20 ஆண்டுகளுக்கும் நீங்கள் அதே இடத்தில் இருக்கப்போகிறீர்கள் என்று குறிப்பிட்டார்.

ஆனால், அதைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை. ஜனநாயக நாட்டில் மக்கள்தான் உச்சபட்ச அதிகாரம் கொண்டவர்கள்.

கனிமொழி - திமுக
கனிமொழி - திமுக

ஜனநாயகத்தையும், தேர்தல் முறையையும் நாம் பாதுகாக்க வேண்டும்.

எல்லா தேர்தலுக்கும் முன்பு செய்வதைப்போலவே சமீபத்தில் தமிழ்நாட்டின் பெருமையையும், கலாசாரத்தையும் பிரதமர் புகழ்ந்தார்.

ஆனால், கீழடி கண்டுபிடிப்புகளை ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ்நாட்டின் பெருமையைப் பற்றிப் பேச அவர்களுக்கு விருப்பமில்லை.

கங்கைகொண்ட சோழபுரம்... பெயரை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். கங்கையை வென்றவன் அவன்.

தமிழன் கங்கையை வெல்வான். அதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்" என்று கூறினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல்; "விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாத கோழைகளைக் கைது செய்க" - கமல்

கடந்த ஜூலை 28ம் தேதி மக்களவையில் பஹல்காம் தாக்குதல் சம்பவம் குறித்த விவாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை எம்.பி சு.வெங்கடேசன், "இந்தத் தாக்குதல் நடந்தபோது சவுதி அரேபியாவிலே இரு... மேலும் பார்க்க

'அண்ணா வழியில் 'ஆப்' மூலம் மக்களை சந்திக்கப்போகிறோம்!' - தவெக-வின் பலே ஐடியா!

My TVKதமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான 'My TVK' என்கிற ஆப்பை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிமுகப்படுத்தி வைக்கும் நிகழ்வு பனையூர் அலுவலகத்தில் நடந்திருந்தது. நிகழ்வில் நிர்வாகிகள் மத்தி... மேலும் பார்க்க

சந்திக்க மறுத்த மோடி! - ஆதங்க ஓபிஎஸ்-ன் அடுத்த நகர்வு என்ன?

மதுரை - போடிநாயக்கனூர் ரயில் பாதையின் மின்மயமாக்கல் உள்ளிட்ட திட்டங்களைத் தொடங்கி வைக்க தூத்துக்குடிக்கு வருகை தந்த பிரதமருக்கு, ஓ.பி.எஸ் வரவேற்பு அளிக்க விரும்பி கடிதம் எழுதியிருந்தார். "தூத்துக்குடி... மேலும் பார்க்க

`இந்தியாவின் மீது 20 - 25 சதவிகித பரஸ்பர வரியா?' - ட்ரம்பின் பதில் என்ன?

ஏப்ரல் 9-ம் தேதி அமலுக்கு வரவிருந்த அமெரிக்காவின் பரஸ்பர வரியை, 'ஒப்பந்தம் பேசலாம்' என்று 90 நாள்களுக்கு ஒத்தி வைத்திருந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இந்தப் பரஸ்பர வரி வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அம... மேலும் பார்க்க

Pahalgam: இந்திய பணம் டு பாகிஸ்தான் சாக்லேட்; தீவிரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்டவை - வெளியான லிஸ்ட்

ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய மூன்று பயங்கரவாதிகள் நேற்று ஜம்மு காஷ்மீரில் ஆபரேஷன் மகாதேவ் என்ற நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக மத்திய உள்து... மேலும் பார்க்க

நெல்லை ஆணவக் கொலை: `அலட்சியம்; தனிச்சட்ட கோரிக்கை புறக்கணிப்பு...' - திமுக-வைச் சாடும் பா.ரஞ்சித்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஐடி ஊழியர் கவின், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தமிழ்நாட்டின் பேசுபொருளாகியிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் பிரமுகர்களும், இய... மேலும் பார்க்க