செய்திகள் :

Kashmir: ``தீவிரவாத தாக்குதலால் எல்லாம் மாறிவிட்டது..'' - முதலமைச்சர் ஒமர் அப்துல்லா!

post image

ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா, என்.டி.டி.வி தளத்துக்கு அளித்தப் பேட்டியில், பஹல்காம் தாக்குதலால் அடைந்த இழப்பு குறித்து பேசியுள்ளார்.

அந்தத் தீவிரவாத தாக்குதல் ஒரேநாளில், பொருளாதார ரீதியாகவும் ராஜாந்திர ரீதியாகவும் காஷ்மீரின் பல ஆண்டு கால உழைப்பை இல்லாமல் ஆக்கிவிட்டதாகக் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் தாக்கிய பகுதிகளைப் பார்வையிடும் ஒமர் அப்துல்லா
பாகிஸ்தான் தாக்கிய பகுதிகளைப் பார்வையிடும் ஒமர் அப்துல்லா

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சுற்றுலாத்துறைக்கு பேரதிர்ச்சியாக அமைந்துள்ள இந்த சம்பவம், சர்வதேச சமூகத்தில் பாகிஸ்தான் மீண்டும் காஷ்மீரை தூக்கிப்பிடிக்க அனுமதித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

"நாங்கள் இந்த நிலைக்கு வருவோம் என எதிர்பார்க்கவே இல்லை. இரத்தம் சிதறும் இந்த துன்பத்தில் வந்து நிற்கிறோம். எல்லாமும் மாறிவிட்டது. கொந்தளிப்பும் குழப்பமும் அதிகரித்துவிட்டது." எனக் கூறியுள்ளார் ஒமர் அப்துல்லா.

தீவிரவாத தாக்குதல் மற்றும் பாகிஸ்தானுடனான மோதலால் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து பேசுகையில் அவர், "ஆண்டின் இந்த நேரத்தில் எங்கள் மாநிலம் சுற்றுலாப்பயணிகளால் நிறைந்திருக்க வேண்டும். தினமும் 50-60 விமானங்கள் விமான நிலையத்தில் இயக்கப்படும். வருமானம் பெருகும், குழந்தைகள் பள்ளிகளுக்குச் சென்றுகொண்டிருப்பார்கள்.

ஆப்பரேஷன் சிந்தூர்
ஆப்பரேஷன் சிந்தூர்

இப்போது எல்லாமும் காலியாக இருக்கிறது. பள்ளிகளும் விமான நிலையங்களும் மூடியிருக்கின்றன" என்றார்.

"நான் எதுவும் மாறவில்லை எனக் கூறினாலும், பாகிஸ்தான் திட்டமிட்டு மீண்டும் பாகிஸ்தானை சர்வதேச பிரச்னையாக்கியிருக்கிறது. இதில் அமெரிக்கா நடுவராக, உரையாசிரியராக பாத்திரம் வகிக்க ஆர்வமாக இருக்கிறது" என்றும் தெரிவித்துள்ளார்.

"கடந்த சில நாள்களாக நடந்த தீவிர சண்டைக்குப் பிறகு போர் நிறுத்தம் அவற்றை நிறுத்தியிருக்கிறது. ஆனால் முதல் நாளிலேயே அதை மீறியுள்ளனர். வரும் இரவுகளில் என்ன நடக்கப் போகிறது என்பதைக் காண நாங்கள் காத்திருக்கிறோம்" எனப் பேசியுள்ளார்.

அமெரிக்கா, சீனா இடையே வலுக்கும் உறவு; குறைக்கப்பட்ட வரி விகிதங்கள் - எவ்வளவு தெரியுமா?

பிற நாடுகள் அமெரிக்காவின் மீது அதிக வரிகள் விதிக்கின்றன... அமெரிக்காவின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும்... என்று பல காரணங்களைக் கூறி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெரும்பாலான உலக நாடுகளின் மீது பரஸ்பர வ... மேலும் பார்க்க

`மத்திய அரசின் முகமாக இருந்தது தவறா?' - விக்ரம் மிஸ்ரி எதிர்கொள்ளும் ட்ரோல்கள்!

விக்ரம் மிஸ்ரி - கடந்த சில நாள்களாக நாம் அதிகம் கேட்கும் பெயர்... அதிகம் பார்க்கும் முகம்!பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல் நடந்ததில் இருந்து இந்திய அரசின் முகமாக இருந்து வருபவர் வெளியுறவு செயலாளர் விக்ரம... மேலும் பார்க்க

``கூட்டணி பற்றி நான் முடிவுசெய்வேன்; நீங்கள் ஒழுங்காக..'' - பாமக மாநாட்டில் ராமதாஸ் பேசியதென்ன?

பாட்டாளி மக்கள் கட்சியின் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு 12 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று (மே 11) நடைபெற்றது. மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில், சாதிவாரி கணக்கெடுப்பு, வன்னியர்க... மேலும் பார்க்க

``இந்திய ராணுவத்தின் தாக்குதலுக்கு பயந்து தீவிரவாதிகள் தப்பி ஓடிவிட்டனர்..'' - ஜெனரல் ராஜீவ் காய்

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவத்தினரால் நடத்தப்பட்டது 'ஆபரேஷன் சிந்தூர்'.அதன் பின்பு, இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதற்ற நிலை மிகவும் அதிகரித்தது. இரு நாடுகளும் மாற்றி மாற்றி மோதிக் க... மேலும் பார்க்க

``இனி போர் வேண்டாம்..'' - உக்ரைன், காஸா, இந்தியா, பாகிஸ்தான் குறித்து புதிய போப் பேசியதென்ன?

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ம் தேதி சுற்றுப்பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக, மே 7-ம் தேதி பாகிஸ்தான் மற்றும் பா... மேலும் பார்க்க

Doctor Vikatan: வாழைப்பழம் சாப்பிட்டால் மட்டுமே சரியாகும் மலச்சிக்கல்; தினம் சாப்பிடுவது சரியா?

Doctor Vikatan: பல வருட காலமாக நான் தினமும் இரவில் சாப்பாட்டுக்குப் பிறகு வாழைப்பழம் எடுத்துக்கொள்கிறேன். என்றாவது ஒன்றிரண்டு நாள்கள்அது மிஸ் ஆனாலும் அடுத்த நாள் காலைக்கடனைக் கழிப்பதில் சிரமம் ஏற்படுக... மேலும் பார்க்க