செய்திகள் :

Kerala: சபரிமலை, கேரள கோயில்களில் புத்தரிசி பூஜை; ராஜபாளையத்தில் இருந்து செல்லும் நெற்கதிர்கள்

post image

கேரள மாநிலத்தில் ஆவணி மாதம் நடைபெறும் மலையாள புத்தாண்டு விழாவுக்கு முன்னதாக ஆடி மாதத்தில் முக்கிய கோயில்களில் நிறை புத்தரிசி பூஜை நடைபெறும். கேரளாவில் நடைபெறும் விழாக்களில் இந்த நிறை புத்தரிசி பூஜை பிரசித்தி பெற்றது. விவசாயம் செழிப்பதற்காக நெற்கதிர்கள் கோயிலில் வைத்து பூஜை செய்யப்பட்டு விவசாயிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படும்.

நெற்கதிர்

முன்னதாக திருவாங்கூர் தேவசம்போர்டு தலைவராக இருந்த பிரையார் கோபாலகிருஷ்ணன் அனுமதி வழங்கியதன் பேரில் நிறைப்புத்தரிசி பூஜைக்கான நெற்கதிர்கள் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

கேரளாவில் உள்ள கோயில்களான அச்சன்கோயில், ஆரியங்காவு, குளத்துப்புழா, புனலூர் கிருஷ்ணன் கோயில், ஆரண்முழா பார்த்தசாரதி கோயில், பந்தளம் ஐயப்பன் கோயில், சபரிமலை உள்ளிட்ட முக்கிய கோயில்களில் நிறைப்புத்தரிசி பூஜை நடைபெற உள்ளது.

இதற்காக ராஜபாளையம் ஐயப்ப‌பக்தர்கள் குழு மற்றும் நாகராஜ் குழுவினர் சார்பில் 120 கட்டுகள் நெற்கதிர் கட்டப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. கட்டி வைக்கப்பட்ட கட்டுகள் அனைத்தும் 3 வாகனங்களில் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நெற்கதிர்

மேலும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டு தோறும் நிறை புத்தரிசி பூஜை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு நிறை புத்தரிசி பூஜை வருகிற 30-ந் தேதி நடக்கிறது.

இதையொட்டி நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. இதற்காக பாரம்பரிய முறைப்படி பாலக்காடு மற்றும் கொல்லத்தில் இருந்தும் ஐயப்பன் சேவா சங்கத்தினர் நெற்கதிர்களை ஊர்வலமாக எடுத்துச் செல்வார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர திருவிழா: ஆண்டாளுக்கு சீர்வரிசை வழங்கிய ஸ்ரீரங்கநாதர்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நடைபெறும் ஆடிப்பூர திருவிழாவிற்கு ஸ்ரீரங்கத்திலிருந்து சீர்வரிசை கொண்டுவரப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழா கடந்த 20-... மேலும் பார்க்க

ஆடி அமாவாசை: ராமேஸ்வரம், திருநெல்வேலி, திருவையாறு.. புனித நீராடி தர்ப்பணம் கொடுத்த மக்கள்

முன்னோர்களுக்கு தர்ப்பணம்முன்னோர்களுக்கு தர்ப்பணம்முன்னோர்களுக்கு தர்ப்பணம்முன்னோர்களுக்கு தர்ப்பணம்முன்னோர்களுக்கு தர்ப்பணம்முன்னோர்களுக்கு தர்ப்பணம்முன்னோர்களுக்கு தர்ப்பணம்முன்னோர்களுக்கு தர்ப்பணம்... மேலும் பார்க்க

Aadi Amavasai 2025 | மாமனார் மாமியாருக்கு தர்ப்பணம் கொடுக்கலாமா? | சண்முக சிவாசார்யர் | ஆடி அமாவாசை

ஆடி மாத அமாவாசை முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் முக்கியமான தினம். இந்த நாளில் பித்ருவழிபாடு செய்வதன் முக்கியத்துவம் என்ன என்பது குறித்து விளக்குகிறார் சிவஶ்ரீ சண்முகசிவாசார்யர். Aadi Amavasya | Importa... மேலும் பார்க்க

ஆடிப்பூரம்: நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கோயில் வளைகாப்பு வைபவம் திருவிழா! | Album

ஆடிப்பூரம்: திருநெல்வேலி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கோயில் வளைகாப்பு வைபவம் திருவிழா.! மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. 108 வைணவத் தலங்களில் மிக முக்கியமானதாக கருதப்படுவது ஸ்ரீவில்லிபுத்தூராகும். லட்ச... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூரத் தேரோட்டம்; தயாராகும் பெரிய தேர்; மாவட்ட ஆட்சியர் ஆய்வு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் தேரோட்டம் நடைபெறுவதையொட்டி மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில் அதிகாரிகள் நான்கு ரத வீதிகளில் ஆய்வு செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் 108 ... மேலும் பார்க்க