செய்திகள் :

Kim Sae-ron: சடலமாக மீட்கப்பட்ட பிரபல கொரிய நடிகை; கொலையா, தற்கொலையா..? -விசாரணையில் காவல்துறை!

post image

தென் கொரியாவின் பிரபல நடிகை கிம் சே-ரோன். 24 வயதான இவர், 2010-ம் ஆண்டு 'தி மேன் ஃப்ரம் நோவேர்' திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அந்தப்படத்தில் கடத்தப்பட்ட குழந்தையாக நடித்து மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றார். தென் கொரியாவின் சிறந்த புதிய நடிகைக்கான விருதையும் வென்றார். அதைத் தொடர்ந்து பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர், பல்வேறு விருதுகளையும் குவித்தார். இந்த நிலையில், 2022-ம் ஆண்டு மது அருந்தி வாகனம் ஓட்டியதால் ஒரு விபத்தை சந்தித்தார். அதற்காக அவருக்கு 20 மில்லியன் வோன் ($13,800) அபராதம் விதிக்கப்பட்டது. அப்போது முதல் அவரின் நடிப்பு வாழ்க்கை சிக்கலை சந்திக்கத் தொடங்கியது.

கிம் சே-ரோன் - Kim Sae-ron

மக்கள் அவரைப் பார்த்து வந்தப் பார்வை மாறியதாகக் கூறப்படுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக வாய்ப்புகளை இழந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் அவரின் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார். அவரைக் காணச் சென்ற அவரின் நண்பர் அளித்த தகவலின் அடிப்படையில், காவல்துறை சம்பவ இடத்துக்கு விரைந்து, அவரின் உடலைக் கைப்பற்றியிருக்கிறது. முதற்கட்ட விசாரணையில் கொலை நடந்ததுக்கான எந்த அறிகுறியும் இல்லை எனக் காவல்துறை விளக்கமளித்திருக்கிறது. இது தொடர்பாக விசாரணை தொடரும் எனவும் காவல்துறை தெரிவித்திருக்கிறது.

மகாராஷ்டிரா: ஏழை எனக்கூறி அரசிடம் வீடு வாங்கிய அமைச்சருக்கு 2 ஆண்டு சிறை; பதவிக்கு ஆபத்து..

மகாராஷ்டிராவில் வேளாண்துறை அமைச்சராக இருக்கும் மாணிக்ராவ் கோகடேவுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிரா அரசு வீடுகளை கட்டி, ஏழைகள் மற்றும் பொருளாதார ரீதியில் ப... மேலும் பார்க்க

சென்னை: தொழிலதிபர் வீட்டில் வைர, தங்க நகைகள் திருட்டு... நேபாள டிரைவர் கைது - அதிர்ச்சி பின்னணி!

சென்னை நுங்கம்பாக்கம், லேக் ஏரியா, 5-வது குறுக்குத் தெருவில் வசித்து வருபவர் சுலைமான் (67). இவர் கடந்த 21.12.2024-ம் தேதி வீட்டை பூட்டி விட்டு சொந்த ஊருக்குச் சென்றிருந்தார். பின்னர் 3.1.2025-ம் தேதி ... மேலும் பார்க்க

கடலூர்: `சங்கத்தை மதிக்கவில்லை..!’ – திருநங்கை அடித்துக் கொலை; சக திருநங்கையர் உள்ளிட்ட 6 பேர் கைது!

கடலூர் மாவட்டம், கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் இருக்கும் காப்புக் காட்டில், உடல் முழுவதும் ரத்தக் காயங்களுடன் திருநங்கை ஒருவரின் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து அந்த உடலை கைப... மேலும் பார்க்க

`வாழ்க்கை சிறப்பாக அமைய பூஜைகள்' - போலி ஜோதிடரிடம் ரூ.6 லட்சம் இழந்த 24 வயது பெண் - நடந்தது என்ன?

பெங்களூரைச் சேர்ந்த 24 வயது பெண் இன்ஸ்டாகிராம் மூலம் அறிந்துகொண்ட போலி ஜோசியக்காரரிடம் 6 லட்சம் வரை ஏமாந்திருக்கிறார். தனது திருமணம் குறித்து அறிந்துகொள்ள ஜோசியக்காரரை நாடிய பெண், மூளைச்சலவை செய்யப்பட... மேலும் பார்க்க

புதுச்சேரி: `அவனுங்க 3 பேரையும் முடிச்சிடு' - உத்தரவு போட்ட காதலி; கொலைசெய்து வீடியோ அனுப்பிய ரௌடி!

புதுச்சேரியின் மையப்பகுதியில் இருக்கும் ரெயின்போ நகர், அடர்த்தியான குடியிருப்புப் பகுதி. அதில் 7-வது குறுக்குத் தெருவில் இருக்கும் பாழடைந்த ஒரு வீட்டில், மூன்று இளைஞர்கள் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக க... மேலும் பார்க்க

குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து தாயிக்குப் பாலியல் வன்கொடுமை; திருப்பூரில் அரங்கேறிய கொடூரம்

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 27 வயது பெண்ணும், அவருடைய கணவரும் தங்களுடைய மூன்று வயது குழந்தையுடன் திருப்பூருக்குக் கடந்த 17-ஆம் தேதி வேலை தேடி வந்துள்ளனர். திருப்பூரில் பல இடங்களில் வேலை தேடி அலைந்துள்ளன... மேலும் பார்க்க