செய்திகள் :

Manipur: `மணிப்பூரில் மீண்டும் அரசமைக்கத் தயார்...' - பாஜக தலைவர் கூறுவதென்ன?!

post image

மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் அரசமைக்க 44 சட்டமன்ற உறுப்பினர்கள் தயாராக இருப்பதாக பாஜக எம்.எல்.ஏ தோக்சோம் ராதேஷ்யாம் சிங் தெரிவித்துள்ளார்.

இன்று 9 சட்டமன்ற உறுப்பினர்களுடன் ராஜ் பவன் சென்ற தோக்சோம் ராதேஷ்யாம் சிங், ஆளுநர் அஜய் குமார் பல்லாவைச் சந்தித்து தாங்கள் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தில் மொத்தம் 60 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மணிப்பூர் மக்கள்!

பாஜக எம்.எல்.ஏ கூறியதென்ன?

அரசமைப்பது பற்றி பேசிய தோக்சோம் ராதேஷ்யாம் சிங், "மக்கள் விருப்பப்படி ஆட்சியமைக்க 44 எம்.எல்.ஏ-க்கள் தயாராக இருக்கிறோம்.

இதனை ஆளுநரிடம் தெரியப்படுத்தியிருக்கிறோம். அத்துடன் இப்போது நிலவிவரும் பிரச்னைகளுக்குச் சாத்தியமான தீர்வுகள் பற்றி விவாதித்திருக்கிறோம்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

தோக்சோம் ராதேஷ்யாம் சிங் மற்றும் மணிப்பூர் பாஜக எம்.எல்.ஏ-க்கள் ஆட்சியமைக்கத் தயாராக இருந்தாலும், உரிமை கோருவது பற்றிய இறுதி முடிவை பாஜக மத்திய தலைமைதான் எடுக்கும் எனக் கூறியுள்ளார்.

பிரேன் சிங்

அத்துடன் சபாநாயகர் சத்யபிரதா 44 சட்டமன்ற உறுப்பினர்களையும் தனித்தனியாகவும் கூட்டாகவும் சந்தித்துள்ளார் என்றும், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை என்றும் வலியுறுத்திப் பேசியுள்ளார்.

Manipur சட்டமன்றத்தின் நிலை என்ன?

மணிப்பூர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் பிரேன் சிங், கடந்த பிப்ரவரி அன்று ராஜினாமா செய்ததையடுத்து, மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருக்கிறது.

மணிப்பூர் சட்டமன்றத்தில் உள்ள 60 இடங்களில் 59 இடங்கள் நிறைந்துள்ளன. ஒரு எம்.எல்.ஏ மறைந்ததால் ஒரு தொகுதியில் வெற்றிடம் உள்ளது.

அரசாங்கம் அமைக்கத் தயாராக இருப்பதாகக் கூறப்படும் 44 எம்.எல்.ஏ-க்களில் 32 மெய்தி எம்.எல்.ஏக்கள், 3 இஸ்லாமிய எம்.எல்.ஏக்கள் மற்றும் 9 நாகா எம்.எல்.ஏ-க்கள் அடங்குவர்.

மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 5 எம்.எல்.ஏ-க்கள் இருக்கின்றனர். அவர்கள் அனைவருமே மெய்தி இனத்தவர்கள்.

60-ல் மீதமுள்ள 10 எம்.எல்.ஏ-க்களும் குக்கி இனத்தவர்கள். அவர்களில் 7 பேர் பாஜக (அரசமைக்க முன்வரவில்லை), 2 பேர் குக்கி மக்கள் கூட்டணி மற்றும் ஒருவர் சுயேட்சையில் வெற்றிபெற்றுள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

ராமதாஸ் Vs அன்புமணி மோதல்: இனி PMK தேறாது - பழ.கருப்பையா பேட்டி | Vikatan

டாக்டர் ராமதாஸ் - அன்புமணி இடையே வெடித்துள்ள மோதல் பா.ம.க மட்டுமல்லாது தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. அன்புமணி மனம் மாறுவாரா.. ராமதாஸ் இறங்கி வருவாரா? பா.ம.கவின் எதிர்காலம் என்ன... இப்... மேலும் பார்க்க

'எல்லா தப்பையும் நான் தான் பண்ணேன்' - கொதித்த ராமதாஸ் உடைந்த PMK? Anbumani|Imperfect Show 29.5.2025

* `எல்லாம் என் தவறு' - அன்புமணியை வறுத்தெடுத்த ராமதாஸ்! * இளைஞரணி பதவியிலிருந்து விலகிய முகுந்தன்! * அன்புமணி பற்றி மிகத் தாமதமாக உணர்ந்துள்ளார் ராமதாஸ்! - பிரேமலதா* மா.செக்கள் கூட்டத்தில் எடப்பாடி ஆல... மேலும் பார்க்க

`தேமுதிக-வுக்கு சீட் கொடுக்க வேண்டியது அதிமுக-வின் கடமை!' - சொல்கிறார் பிரேமலதா

புதுக்கோட்டையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த தே.மு.தி.க-வின் பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"தே.மு.தி.க-விற்கு ராஜ்யசபா சீட் அளிக்க வேண... மேலும் பார்க்க

புதுச்சேரி: பெண்ணை நிர்வாணமாக்கித் தாக்குதல்; பெண் எஸ்.ஐ உட்பட 4 காவலர்கள் இடமாற்றம்; பின்னணி என்ன?

புதுச்சேரி புதுக்குப்பம் மீனவ கிராமத்தில் அமைந்திருக்கிறது `லே பாண்டி’ (Le Pondy) நட்சத்திர விடுதி. சில தினங்களுக்கு முன்பு இங்குத் தங்கிச் சென்ற கேரளாவைச் சேர்ந்த ஒரு தம்பதி, தங்களுடைய அறையில் வைத்தி... மேலும் பார்க்க

சேலம் மாநகர கூட்டத்தில் அடிதடி: ஒருபக்கம் தேசிய கீதம், மறுபக்கம் ஸ்நாக்ஸ் தாக்குதல் - நடந்தது என்ன?

சேலம் மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் எதிர்க்கட்சியை சேர்ந்த யாதவமூர்த்தி என்பவர் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பேசினார். அப்போது மாநகராட்சி டெண... மேலும் பார்க்க