செய்திகள் :

Modi TN Visit: `ராமேஸ்வரம், மதுரை' - பிரதமர் மோடியின் தமிழக விசிட்டும், தகிக்கும் அரசியல் களமும்

post image

டெல்லிக்கு அ.தி.மு.க தலைவர்கள் படையெடுப்பு, பா.ஜ.க மாநிலத் தலைவர் மாற்றம் தொடர்பான பரபரப்பு, ‘மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு விவகாரங்களில்’ பா.ஜ.க-வுக்கு எதிராக தி.மு.க கூட்டணி போர்க்கொடி... எனத் தமிழக அரசியல் தகித்துக்கொண்டிருக்கிறது. இதற்கிடையில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் மாற்றத்தின் சலசலப்பு. இந்தச் சூழலில், நாளை (ஏப்ரல் 6) தமிழகத்துக்கு வருகிறார் பிரதமர் மோடி.

மோடி

ராமேஸ்வரத்தில், பிரதமர் பேசுவதற்கு பிரமாண்ட விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. புதிய பாம்பன் ரயில் பாலத்தைத் திறந்து வைக்கவிருக்கிறார். இதுதவிர ராமேஸ்வரத்தில் செவ்வாய் ஹோரை சமயத்தில் பூஜைகளைச் செய்யவிருக்கிறார். அரசியல் சந்திப்புகள், வழிபாடு என ராமேஸ்வரம் பயணத்தை முடித்துக்கொண்டு, பிரதமர் மதுரைக்கும் செல்லவிருக்கிறார். அரசியல் வி.ஐ.பி-க்கள் பலரும் பிரதமர் சந்திப்புக்கு நேரம் கேட்டுள்ளனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி, "நாளை, ஏப்ரல் 6ஆம் தேதி, புனிதமான ராம நவமி நாளில், தமிழ்நாட்டின் எனது சகோதர சகோதரிகளுடன் சேர்ந்திருப்பதை நான் ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். புதிய பாம்பன் ரயில் பாலம் திறந்து வைக்கப்படவுள்ளது. ஸ்ரீ அருள்மிகு ராமநாதசுவாமி ஆலயத்தில் நான் பிரார்த்தனை நடத்தவுள்ளேன். ரூ 8,300 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளும் தொடங்கி வைக்கப்படும் அல்லது அடிக்கல் நாட்டப்படும்" என்று பதிவிட்டுள்ளார்.

இப்படியான பல அரசியல் வி.ஐ.பி-க்கள் சந்திப்பு, தமிழக பாஜக மாநிலத் தலைவர் சர்ச்சைகள், கூட்டணி விவகாரங்கள், வருத்தங்களைக் கொட்டித்தீர்க்க காத்திருக்கும் அரசியல் புள்ளிகள் என நாளை அரசியல் வெடிகள் ஒவ்வொன்றாக வெடிக்கத் தயாராக இருக்கின்றன. அது பல்வேறு அரசியல் நகர்வுகளுக்கும், யூகங்களுக்கும் அடித்தளமிட்டு தகிக்கும் தமிழக அரசியலில் எண்ணெய்யை ஊற்றவிருக்கிறது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

"சென்னை பத்திரிகையாளர் மன்ற உட்கட்டமைப்பு வசதிக்காக ரூ.2.5 கோடி ஒதுக்கீடு" - உதயநிதி அறிவிப்பு

இந்தியன் ஆயில் நிறுவனமும், சென்னை பத்திரிக்கையாளர் மன்றமும் இணைந்து பத்திரிகையாளர்களுக்கு கிரிக்கெட் போட்டித் தொடரை நடத்தி முடித்திருக்கிறது. முன்னதாக, இத்தொடருக்கான அறிவிப்பில், சாம்பியன் பட்டம் வெல்... மேலும் பார்க்க

Modi: `காங்கிரஸை விட அதிகமான நிதியை தமிழ்நாட்டிற்கு தந்திருக்கிறோம்' - பிரதமர் மோடி உரை

இலங்கை விசிட்டை முடித்துவிட்டு, அங்கிருந்து இன்று மதியம் 12.40 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் வந்தார் பிரதமர் மோடி. தமிழக அரசு சார்பில் மோடியை வரவேற்ற ஆளுநர் ரவி, கம்பராமணம் புத்தகத்தைப் பரிசா... மேலும் பார்க்க

ராஜபாளையம்: இரண்டு நாளில் 80 பேரைக் கடித்த தெருநாய்கள்- பொதுமக்கள் அச்சம்

ராஜபாளையம் நகராட்சியில் தெரு நாய்கள் தொல்லையால் பெண்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். சிகிச்சைக்கு வந்தவர்கள்எனவே, ராஜபாளையம் சுற்றுவட்டாரத்தில் தெரு நாய்களைக் கட்டுப்படுத்... மேலும் பார்க்க

Modi TN Visit: திறந்துவைத்து, பச்சைக்கொடி அசைத்த பிரதமர் மோடி; பாம்பன் பாலத்தைக் கடந்து சென்ற ரயில்!

இலங்கை விசிட்டை முடித்துவிட்டு, அங்கிருந்து இன்று மதியம் 12.40 மணியளவில் ராமேஸ்வரம் வந்தார் பிரதமர் மோடி. தமிழக அரசு சார்பில் மோடியை வரவேற்ற ஆளுநர் ரவி, கம்பராமணம் புத்தகத்தைப் பரிசாக வழங்கினார். சரிய... மேலும் பார்க்க

Waqf: `முஸ்லிம்களை அடுத்து கிருஸ்த்துவர்களை குறிவைக்கிறது பாஜக...' - செல்வப்பெருந்தகை

நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வக்ஃப் திருத்த மசோதா 2025-ஐ பாஜக கூட்டணி அரசு நிறைவேற்றியிருந்தது. இந்த விவகாரத்தில், `சிறுபான்மையினரின் மத சுதந்திரத்தில் பாஜக அரச... மேலும் பார்க்க

Waqf: ஒப்புதல் வழங்கிய முர்மு; நடைமுறைக்கு வந்த வக்ஃப் திருத்த மசோதா; முக்கிய திருத்தங்கள் இவைதான்!

நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வக்ஃப் திருத்த மசோதாவை, 2025-ஐ பாஜக கூட்டணி அரசு நிறைவேற்றியிருந்தது. இந்த விவகாரத்தில், `சிறுபான்மையினரின் மத சுதந்திரத்தில் பாஜக ... மேலும் பார்க்க