செய்திகள் :

MUDA வழக்கில் அடுத்த திருப்பம்; சித்தராமையாவின் சொத்துக்கள் முடக்கம்; ED சொல்லும் கணக்கு என்ன?

post image

காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவரும் கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (MUDA) இழப்பீடாக 14 வீட்டு மனைகள் ஒதுக்கியதில் முறைகேடு நடந்திருப்பதாகக் கடந்த ஆண்டு புகார் எழுந்தது.

இதில், சித்தராமையா, அவரது மனைவி உள்ளிட்டோர் மீது லோக் ஆயுக்தா போலீஸார் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்து விசாரிக்க, மறுமுனையில் அமலாக்கத்துறையும் விசாரணையை மேற்கொண்டது.

சித்தராமையா
சித்தராமையா

இந்த வழக்கில், இதுவரையில் சுமார் ரூ. 300 கோடி சந்தை மதிப்புள்ள 160 அசையா சொத்துக்கள் (MUDA நிலங்கள்) அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தற்போது சித்தராமையாவுக்குத் தொடர்புடைய சுமார் ரூ. 100 கோடி மதிப்புடைய சொத்துக்கள் முடக்கப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது.

இது குறித்து அமலாக்கத்துறை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில், "சித்தராமையா மற்றும் பிறர் தொடர்புடைய முடா ஊழல் வழக்கில், பணமோசடி தடுப்புச் சட்டம் 2002-ன் கீழ் 09-06-2025 அன்று சுமார் ரூ.100 கோடி சந்தை மதிப்புள்ள 92 அசையா சொத்துக்கள் (MUDA நிலங்கள்) தற்காலிகமாக முடக்கப்பட்டிருக்கின்றன.

இந்த வழக்கில், இதுவரையில் மொத்தமாக ரூ. 400 கோடி மதிப்புடைய சொத்துக்கள் முடக்கப்பட்டிருக்கின்றன" என்று பதிவிட்டிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

'ஒரே பாடலில் முதலமைச்சர் ஆக முடியாது விஜய்!' - எச்சரிக்கும் மருது அழகுராஜ் | பேட்டி

நமது எம்.ஜி.ஆர், நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ். விஜய்க்கும் தவெகவுக்கும் ஆதரவாக கருத்துகளை தெரிவித்துக் கொண்டிருந்தார். விஜய்யின் கட்சியில் விரைவில் இணையப்போகிறார் என்றெல்லாம் ... மேலும் பார்க்க

Vijay: "இளைய காமராஜர்னு சொல்லாதீங்க; தேர்தல் பற்றி பேச வேண்டாம்" - மாணவர்கள் மத்தியில் விஜய் பேச்சு

தவெக சார்பில் கல்வி விருது வழங்கும் விழாவை, அதன் தலைவர் விஜய் நடத்தி வருகிறார். 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவர்களைத் தொகுதிவாரியாக அழைத்துப் பாராட்டி வருகிறார்.Vijayஇரண்டுக... மேலும் பார்க்க

Ahmedabad Plane Crash : 'அடுத்த நொடி நிச்சயமில்லாத வாழ்க்கை...' - விஜய் வருத்தம்!

'தவெக கல்வி விழா!'தவெக தலைவர் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவர்களை பாராட்டும் வகையில் கல்வி விருது வழங்கும் விழாவை நடத்தி வருகிறார். மாமல்லபுரத்தில் நடந்த இந்த நிகழ்வில் அகமத... மேலும் பார்க்க

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்; 'இன்னும் ஒரு போரா?' - கைவிரித்த அமெரிக்கா; என்ன நடக்கிறது?

இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் மீண்டும் சண்டை தொடங்கியுள்ளது.நேற்று இரவு, ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தத் தொடங்கியிருக்கிறது. ஈரான் அணு ஆயுதத்தைத் தயாரித்துவிடுமோ என்கிற இஸ்ரேலின் அச்சம்தான் இந்தத் த... மேலும் பார்க்க

Ahmedabad Plane Crash : பறவை மோதியதா இல்லை மனித தவறா? | Detailed Technical Explanation

அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் 200 க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்திருக்கின்றனர். இந்த விபத்து எப்படி நடந்தது? அவசரகாலங்களில் பயணிகளைக் காப்பாற்ற விமானிகள் என்ன மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபடுவா... மேலும் பார்க்க