செய்திகள் :

Parliament: பதாகைகளை ஏந்தி எதிக்கட்சிகள் கடும் அமளி; மக்களவை ஒத்திவைப்பு!

post image

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் வார விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் தொடங்கியது. மக்களவையிலும் - மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. மக்களவையில், தொகுதி மறு சீரமைப்பு, வக்காளர் அடையாள அட்டை குளறுபடி உள்ளிட்ட விவகாரங்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பதாகைகளை ஏந்தி அமளியில் ஈடுபட்டனர்.

அவர்களை அமைதியாகும்படி சபாநாயகர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால், அமளி கட்டுக்குள்வரவில்லை என்பதால் மக்களவை 12 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

மாநிலங்களவையில் மத்திய சட்டப்பாதுகாப்புத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு, `` காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவர், முக்கியப் பொறுப்பில் இருப்பவர் மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது தொடர்பாக பேசுகிறார். இது எப்படி சரியாகும். அண்ணல் அம்பேத்கர் மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு அறவே கூடாது என வலியுறுத்தியிருக்கும் நிலையில், சட்டத்தை திருத்துவோம் எனப் பேசியிருக்கிறார். இது எப்படி சரியான நடைமுறையாகும்" எனப் பேசினார்.

மத்திய அமைச்சர் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியைத்தான் குறிப்பிட்டு பேசுவதாக காங்கிரஸ் உள்ளிட்டக் கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுக்கு எதிராக பா.ஜ.க எம்.பி-களும் கோஷம் எழுப்பினர். இதனால் நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டிருக்கிறது.

த.வெ.க பொதுக்குழு அறுசுவை மெனு: வெஜ் மட்டன் பிரியாணி, இறால் 65... தொண்டர்களுக்கு தடபுடல் விருந்து

இன்று த.வெ.க-வின் முதல் பொதுக்குழு கூட்டம் நடக்க உள்ளது. இந்தப் பொதுக்குழு கூட்டம் நடக்கும் இடத்திற்கு அந்தக் கட்சியின் தலைவர் விஜய் வந்துவிட்டார். தற்போது இந்தப் பொதுக்குழு கூட்டத்தின் மெனு வெளியாகி ... மேலும் பார்க்க

Doctor Vikatan: காலையில் எழுந்ததும் குதிகால் வலி; முதல் அடி வைக்கும்போது கடும் வலி... தீர்வு என்ன?

Doctor Vikatan: எனக்கு கடந்த சில மாதங்களாக குதிகால் பகுதியில் கடுமையான வலி இருக்கிறது. குறிப்பாக, காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்திருந்து, தரையில் பாதங்களை வைத்ததும்வலி உயிரே போகிறது. பிறகு மெள்ளமெ... மேலும் பார்க்க

``எந்த பேரிடராலும் கேரளாவை தோற்கடிக்க முடியாது'' - வயநாடு டவுன்ஷிப் அடிக்கல் விழாவில் பினராயி விஜயன்

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மல பகுதியில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 30-ம் தேதி உருள்பொட்டல் எனப்படும் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் 200-க்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்தனர். நூற்றுக்கணக்கான வ... மேலும் பார்க்க

`அண்ணாமலைக்கு முன்னரே' அமித் ஷாவை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன் - சைலண்ட் மூவ்!

இந்த வாரம் தமிழ்நாட்டிற்கும், அமித் ஷாவிற்கும் மிகுந்த தொடர்பு உடையது போலும்.தமிழ்நாட்டில் இருந்து ஒவ்வொரு அரசியல் தலைவர்களாக அமித் ஷா வீட்டிற்கு விசிட் அடித்து வருகின்றனர்.கடந்த செவ்வாய்க்கிழமை (25.0... மேலும் பார்க்க

`கறுப்போ, வெள்ளையோ யாராக இருந்தாலும்..' -நிறம் குறித்த அவதூறுக்கு கேரள தலைமைச் செயலாளர் சாரதா பதிலடி

கேரள தலைமைச் செயலாளர் சாரதா முரளிதரன் ஐ.ஏ.எஸ்கேரள தலைமைச் செயலாளராக இருக்கும் சாரதா முரளிதரன் ஐ.ஏ.எஸ் அதிகாரியை சிலர் கறுப்பு என விமர்சித்ததாக முகநூலில் கருத்து பதிவிட்டிருந்தார். நிறம் குறித்த பாகுபா... மேலும் பார்க்க

`ஒப்பந்த பணிகளுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரம்' - அண்ணன் மகன் கைது சிக்கலில் ஆர்.காமராஜ்!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜின் அண்ணன் மகன் இளமுருகன். அரசு முதல் நிலை ஒப்பந்ததாரரான இவர் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சாலை, கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் டெண்டர் எடுத்து செய்து வருவதாக... மேலும் பார்க்க