செய்திகள் :

PMK: "நீதிக்கும் அறத்திற்கும் கிடைத்த வெற்றி" - ராமதாஸ் தரப்பு மனு தள்ளுபடி ஆனது குறித்து அன்புமணி

post image

பாமக நிறுவனர் ராமதாஸ் சமீபத்தில் ஆகஸ்ட் 17-ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து, பாமக தலைவர் அன்புமணி ஆகஸ்ட் 9-ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்தப்போவதாக அறிவித்தார்.

இதனால், அன்புமணி அறிவித்திருக்கும் பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்குமாறு ராமதாஸ் தரப்பிலிருந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அன்புமணி vs ராமதாஸ்
அன்புமணி vs ராமதாஸ்

இந்த மனுவை இன்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் தனது அறையில் நேரில் ஆஜராகுமாறு கூறினார்.

இதில், உடல்நிலை காரணமாக ராமதாஸ் காணொளி வாயிலாக ஆஜராக, அன்புமணி நேரில் ஆஜரானார். சுமார் ஒரு மணிநேர இந்த விசாரணை நீடித்தது.

அது முடிந்த பின்னர், ராமதாஸ் தரப்பு, அன்புமணி தரப்பு, அரசு தரப்பிடம் விசாரணை நடத்திய நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், ராமதாஸ் மனுவைத் தள்ளுபடி செய்து, அன்புமணி பொதுக்குழு கூட்டத்துக்கு தடையில்லை என உத்தரவிட்டார்.

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் இத்தகைய உத்தரவு குறித்து அன்புமணி, "இது நீதிக்கும் அறத்திற்கும் கிடைத்த வெற்றி" என ட்வீட் செய்திருக்கிறார்.

தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அன்புமணி, "சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை காலை 11:00 மணிக்கு நடைபெறவிருக்கும் பொதுக்குழுக் கூட்டத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.

திட்டமிட்டபடி பா.ம.க பொதுக்குழுவை நடத்திக் கொள்ளலாம் என்றும் தீர்ப்பளித்திருக்கிறது. இது நீதிக்கும் அறத்திற்கும் கிடைத்த வெற்றி.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு மாமல்லபுரம் கான்ஃபுளுயன்ஸ் அரங்கில் நாளை காலை 11:00 மணிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் எனது தலைமையில் நடைபெறும்.

பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து நாளைய கூட்டத்தில் விவாதித்து முடிவெடுப்போம்" என்று பதிவிட்டிருக்கிறார்.

Rahul Gandhi Dinner : INDIA கூட்டணியின் 4 முக்கிய முடிவுகள்? | ECI BJP | Imperfect Show 8.8.2025

* ராகுல் காந்தி இல்லத்தில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் முக்கிய ஆலோசனை!* ராகுல் காந்தி தேசத்திற்கு ஒரு சேவையைச் செய்துள்ளார் - கபில் சிபல்* பிரதமர் மோடிக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி? * ராகுல் காந்... மேலும் பார்க்க

அன்புமணி நடத்தும் பொதுக்குழுவுக்குத் தடையில்லை; ராமதாஸ் தரப்பு மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்!

பாமக-வில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோருக்கிடையில் நடைபெற்று வரும் கட்சி நிர்வாக மோதலுக்கு மத்தியில், ஆகஸ்ட் 17-ம் தேதி பொதுக்குழு கூட்டப்போவதாக ராமதாஸ் அறிவித்திருந்தார்.உடனே அன்புமணி அதற்... மேலும் பார்க்க

"வாக்குச்சாவடி வீடியோக்களை ஏன் அழிக்கிறீர்கள்?" - தேர்தல் ஆணையத்திற்கு ராகுல் காந்தியின் 5 கேள்விகள்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, 2024 மக்களவை தேர்தல் மற்றும் அதற்கடுத்த 4 மாதங்களில் நடைபெற்ற மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாகவும், பா.ஜ.க-வுடன் சேர்ந்து இந்திய அர... மேலும் பார்க்க

திமுக: மீண்டும் எழுந்த `மாவட்ட பிரிப்பு’ பேச்சு - ஆர்வம் காட்டும் உதயநிதி; அறிவாலய அப்டேட்ஸ்!

2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்பது மாதங்களே இருக்கின்றன. ஆளும் திமுக, `ஓரணியில் தமிழ்நாடு’ என்ற உறுப்பினர் சேர்க்கை தொடங்கி `உடன்பிறப்பே வா’ என்ற நிர்வாகிகள் சந்திப்புவரை தேர்தலுக்கு முழு ஆயுதமா... மேலும் பார்க்க

"அலங்காரத்திற்காக மாநில கல்விக் கொள்கை என்று நாடகமாடுகிறது திமுக" - அண்ணாமலை குற்றச்சாட்டு

தமிழக முதல்வர் ஸ்டாலின் தேசிய கல்விக்கொள்கைக்கு எதிராக மாநில கல்விக்கொள்கையை இன்று (ஆகஸ்ட் 8) வெளியிட்டிருக்கிறார். இந்நிலையில் இதனை விமர்சித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளப்பக்க... மேலும் பார்க்க