செய்திகள் :

RCB event stampede: "நிகழ்ச்சி ஏற்பாட்டில் குறை; இதுபோன்ற கொண்டாட்டங்களுக்கு புதிய விதிகள்.." - BCCI

post image

ஆர்சிபி அணி நேற்று தனது முதல் கோப்பையை வென்ற நிலையில், அவசரமாக அவசரமாக இன்றே ஆர்.சி.பி வீரர்களை சிறப்பிக்க சட்டமன்ற வளாகத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தது.

மேலும், மாநில கிரிக்கெட் சங்கமும் சின்னசாமி ஸ்டேடியத்தில் ஆர்.சி.பி அணி வீரர்களுக்கு சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்தது.

பெங்களூரு
பெங்களூரு

இதனால், சின்னசாமி ஸ்டேடியதுக்கு வெளியே ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் குவிய பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்தக் கூட்ட நெரிசலில் குறைந்தது 10 பேர் உயிரிழந்தனர். 25-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

முறையான திட்டமிடல் இன்றி நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்ததே இந்த சோக சம்பவத்துக்கு காரணம் என்று மாநில அரசின் மீதும், அணி நிர்வாகத்தின் மீதும் விமர்சனங்கள் வைக்கப்பட்டிருக்கிறது.

பிசிசிஐ
பிசிசிஐ

இந்த நிலையில், இச்சம்பவம் குறித்து இந்தியா டுடே ஊடகத்திடம் பேசிய பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா, "இந்த சம்பம் மிகவும் துரதிர்ஷ்டமானது.

நிகழ்ச்சி ஏற்பாட்டில் சில குறைகள் இருப்பதாக நினைக்கிறேன். அதேசமயம் இந்த விவகாரத்தில் பிசிசிஐ-க்கு எந்த பங்கும் இல்லை.

ஆனால், இது நமக்கு ஒரு பாடம். இதுபோன்ற வெற்றி கொண்டாட்டங்களுக்கு புதிய விதிகளை உருவாக்குவது குறித்து நாங்கள் ஆராய்வோம். நிகழ்ச்சி சிறப்பாகத் திட்டமிடப்பட்டிருக்க வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.

Piyush Chawla: `17 வயதில் இந்திய அணி; 2 உலகக் கோப்பை..!' - ஓய்வை அறிவித்த IPL லெஜெண்ட்

இந்திய டெஸ்ட் அணியில் சச்சினுக்கு அடுத்தபடியாக குறைந்த வயதில் (17) அறிமுகமாகி, கடந்த தசாப்தங்களில் 2 உலகக் கோப்பை, ஐ.பி.எல்லில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய 3-வது வீரர் போன்ற சாதனைகளைப் படைத்த சுழற்பந... மேலும் பார்க்க

Rohit: "ODI-ல் 264 அடித்தபோது என் தந்தை உற்சாகப்படவில்லை; ஆனால் டெஸ்ட்டில்..." - நெகிழும் ரோஹித்

இந்திய அணிக்கு உலகக் கோப்பை வென்று கொடுத்த மூன்று முக்கிய கேப்டன்களில் ஒருவர் ரோஹித் சர்மா.தனது தலைமையில் இந்திய அணியை 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், 2023 ஒருநாள் உலகக் கோப்பை, 2024 டி20 உலகக் கோப்பை,... மேலும் பார்க்க

IND vs ENG: "ரோஹித், கோலி இடத்தை நிரப்புவது கடினம்; பேட்டிங் ஆர்டர்..." - கேப்டன் கில்

ஐ.பி.எல் முடிந்ததும் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 4 வரை இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடத் திட்டமிடப்பட்டிருந்தது.அதன்படி, இந்திய அணியில் இடம்பிடித்திர... மேலும் பார்க்க

Bengaluru : "ரோடு ஷோவை கையாள முடியாதென்றால் நாம் அதைச் செய்யவே கூடாது" - கம்பீர் திட்டவட்டம்

ஐ.பி.எல் முடிந்ததும் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 4 வரை இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடத் திட்டமிடப்பட்டிருந்தது.அதன்படி, இந்திய அணியில் இடம்பிடித்திர... மேலும் பார்க்க

Bumrah: "எந்த 3 போட்டிகளில் பும்ரா விளையாடுவர் என்று இன்னும் முடிவாகவில்லை" - கம்பீர் ஓப்பன் டாக்

ஐ.பி.எல் முடிந்ததும் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 4 வரை இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடத் திட்டமிடப்பட்டிருந்தது.அதன்படி, இந்திய அணியில் இடம்பிடித்திர... மேலும் பார்க்க

RCB: "கொண்டாட்டத்தை விடவும் வாழ்க்கை முக்கியம்; இனிமேல் அணி வெற்றிபெற்றால்..." - கபில்தேவ் அறிவுரை

ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி அணி முதல்முறையாக ஜூன் 3-ம் தேதி நடைபெற்ற இறுதிப்போட்டியில் கோப்பையை வென்றது.இந்த வெற்றிக் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக அவசர அவசரமாக அடுத்தநாளே (ஜூன் 4), சட்டமன்ற வளாகத்தில் அர... மேலும் பார்க்க