செய்திகள் :

Rohit Sharma : 'ஐ.சி.சி தொடர்களில் ஆஸி பலமான அணிதான்; ஆனால்..!' - சவாலை எதிர்நோக்கும் ரோஹித் சர்மா

post image

சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று நடந்து முடிந்திருந்தது. 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்ற நிலையில், அரையிறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளவுள்ளது. இந்நிலையில், நியூசிலாந்து போட்டிக்குப் பிறகு பேசிய ரோஹித் சர்மா அரையிறுதி பற்றியும் பேசியிருக்கிறார்.

அவர் பேசியதாவது, 'ஒவ்வொரு போட்டியிலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவது மிகவும் முக்கியம். நியூசிலாந்து அணி சிறப்பாக கிரிக்கெட் விளையாடும் ஒரு சிறந்த அணி. நல்ல ரிசல்ட் பெறுவது மிகவும் முக்கியமானது. அதற்காக நாங்கள் சரியான ஆட்டத்தை விளையாடினோம்.

இந்திய அணி 30 ரன்களில் மூன்று விக்கெட்டுகள் இழந்த சமயத்தில் ஒரு மிகச்சிறந்த பார்ட்னர்ஷிப் தேவைப்பட்டது. அந்த நேரத்தில் பார்ட்னர்ஷிப்பை உருவாக்குவது என்பது முக்கியம். அந்தப் பார்ட்னர்ஷிப்பினால் தான் நாங்கள் ஒரு நல்ல ஸ்கோரை எட்டுவோம் என்று நினைத்தேன். அந்த ஸ்கோரை எட்டும் தரம் எங்களிடம் உள்ளது.

வருண் சக்கரவர்த்தியிடம் ஏதோ ஒரு புதிய மாற்றம் உள்ளது. எனவே அவரால் என்ன வழங்க முடியும் என்பதைப் பார்க்க விரும்பினோம். இன்றைய போட்டியில் அவர் சிறப்பாக தன்னுடைய ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நாங்கள் அடுத்தடுத்த ஆட்டத்தைப் பற்றி அதிகம் யோசிப்பதில்லை. ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றி பெறுவதும், குறுகிய நேரத்தில் போட்டித் தன்மையுடன் எல்லாவற்றையும் சரியாகச் செய்வதும் மிகவும் முக்கியம். அணி மேலே செல்கிறதா அல்லது கீழே செல்கிறதா என்பதை விட தவறுகளை விரைவாக சரி செய்வது மிகவும் அவசியம்.

Rohit Sharma

ஆஸ்திரேலியா அணி ஐசிசி போட்டிகளில் சிறப்பாக விளையாடி வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது. ஆனால் அந்த குறிப்பிட்ட நாளில் எங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி சிறந்த ஆட்டத்தை கொடுக்க உள்ளோம். இது ஒரு சிறந்த போட்டியாக இருக்கும் எனவே அதனை எதிர்நோக்குகிறோம்.' என்றார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Champions Trophy: ஒரே மைதானத்தில் போட்டிகள்; இந்தியாவுக்கு மட்டும் கூடுதல் அட்வான்டேஜ் - உண்மை என்ன?

சாம்பியன்ஸ் டிராபிசாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானிலும் துபாயிலும் நடந்து வருகிறது. இந்தத் தொடரில் இந்தியா ஆடும் போட்டிகள் மட்டுமே துபாயில் ஒரே மைதானத்தில் நடந்து வருகிறது. மற்ற அணிகள் பாகிஸ்தானில் ... மேலும் பார்க்க

AusvAfg: 'மீண்டும் அசத்திய ஒமர்சாய்; ஆஸிக்கு நிர்ணயிக்கப்பட்ட டார்கெட்’ - வரலாறு படைக்குமா ஆப்கன்?

சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸ்திரேலியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையேயான முக்கியமான போட்டி நடந்து வருகிறது. லாகூரில் நடந்து வரும் இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து ரன்களை எடுத... மேலும் பார்க்க

Champions Trophy: 'தீவிரவாத அச்சுறுத்தல்; உளவுத்துறை தகவல்' - பாதுகாப்பைப் பலப்படுத்தும் பாகிஸ்தான்

பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு சில தீவிரவாத அமைப்புகளிடமிருந்து அச்சுறுத்தல் இருப்பதாக கூறி போட்டிகளுக்கான பாதுகாப்பை பாகிஸ்தான் ... மேலும் பார்க்க

IndvPak : 'ஸ்பின்னர்களுக்கு எதிராக ரிஸ்க் எடுக்கக்கூடாது' - கேம்ப்ளான் பகிர்ந்த கோலி

சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று நடந்திருந்தது. இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தது. இந்தப் போட்டியில் விராட் கோலி மிகச்சிறப்பாக ஆடி சத... மேலும் பார்க்க

PAK v IND: `சதமடித்த கோலி; மிரட்டிய ஸ்ரேயாஸ் ஐயர்' - பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதி நோக்கி இந்தியா

சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியும் பாகிஸ்தானும் மோதிய போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. கோலியின் சதத்தாலும் ஸ்ரேயாஸ் ஐயரின் மிரட்டலான ஆட்டத்தாலும் இந்திய அணி எளிதில்... மேலும் பார்க்க

PAK v IND: "பாகிஸ்தானை வீழ்த்த 300 ரன்கள் போதும்..." - கில் சொல்லும் வின்னிங் சீக்ரெட் இதுதான்!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. இன்று நடக்கும் போட்டியில் பாகிஸ்தான் அணி தோற்றால் அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பை அந்த அணி இழக்கு... மேலும் பார்க்க