செய்திகள் :

Royal Enfield: `பஞ்சாப் டு இங்கிலாந்து' பைக் லவ்வரின் செயலால் வைரலாகும் வீடியோ!

post image

உலகில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றின் மீது காதல் இருக்கும். சிலருக்கு ஒரு நபர்மீது, சிலருக்கு புத்தகங்கள் மீது, சிலருக்கு திரைப்படம் மீது, சிலருக்கு அவர்களுக்குரிய பொருள்கள் மீது என எல்லோருக்கும் எதோ ஒன்றின் மீது காதல் இருக்கும். ஆனால், பொதுவாக பெரும்பாலானவர்களுக்கு அவர்களின் வாகனத்தின் மீது காதல் இருக்கும்.

குறிப்பாக இளைஞர்களுக்கு அவர்களின் பைக் மீது... பைக் என்பது வெறும் வாகனம் மட்டுமல்ல. அது ஒரு சுதந்திரத்தின், 'நானே என் பாதையை தேர்வு செய்கிறேன்' என்ற உணர்வின் வெளிப்பாடு.

ராயல் என்ஃபீல்டு
ராயல் என்ஃபீல்டு

முதல் முறையாக விரும்பிய ஒரு பைக்கை இயக்கிய அந்த தருணங்கள், வாழ்வின் மறக்கமுடியாத காதல் காட்சியாகவே பலருக்கும் விரியும். குறிப்பாக அந்த பைக் ராயல் என்ஃபீல்டு என்றால், அதன் ஆர்ப்பாட்டமும், துள்ளலும் வேறுவிதமாதத்தான் இருக்கும். அப்படி ஒருவர் ராயல் என்ஃபீல்டு பைக் மீது காதல் கொண்ட காட்சி ஒன்று சமூக ஊடகத்தில் வைரலாகியிருக்கிறது.

அந்த வீடியோவில் ஒரு பஞ்சாபி குடும்பம் இங்கிலாந்தில் குடியேற முடிவு செய்து, இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு தன் வீட்டுப் பொருள்களை பேக் செய்திருக்கிறது. அந்தப் பொருள்கள் இங்கிலாந்தின் அவர்கள் வீட்டில் இறக்கப்படும் காட்சிதான் அந்த வீடியோ. ஒரு கண்டெய்னர் லாரியிலிருந்து பல பொருள்களுடன் ராயல் என் ஃபீல்டு பைக்கும் இருக்கிறது.

அந்த பைக்கை இறக்கிய அந்த பைக்குரியவர், பைக்கில் அமர்ந்து அதை அனுபவிக்கும் காட்சி பலருக்கும் அவர்களின் பைக் மீது இருக்கும் காதலை பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பாக மாறியிருக்கிறது.

இது தொடர்பாக பைக்கின் உரிமையாளர் ராஜ்குரு, ``சுமார் £4,000 (₹4.6 லட்சம்) என் பைக்கை இங்கு கொண்டுவர செலவிட்டேன். 40 நாள் பயணத்திற்குப் பிறகு அனைத்தும் பாதுகாப்பாக வந்து சேர்ந்திருக்கிறது. எங்கள் வீட்டின் தளபாடங்கள் அனைத்தும் பஞ்சாபின் கர்தார்பூரில் இருந்து ஆர்டர் செய்யப்பட்டது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் லைக் செய்திருக்கும் அந்த வீடியோ பைக் லவ்வர்களின் காதல் சாட்சியாக வலம் வருகிறது.

Border: நெதர்லாந்தில் தூங்கி, பெல்ஜியத்தில் விழிக்கும் மக்கள்; வீடுகளில் இருக்கும் எல்லை கோடுகள்!

இரு நாட்டின் எல்லைகள் என்றாலே, அங்கு பலத்த பாதுகாப்பும் பதற்றமும் இருக்கும். ஆனால் இங்கு உள்ள இரு நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள எல்லை கூலாக உள்ளது. கடைகள், வீடுகள், தெருக்களுக்கு இடையே எல்லைகள் பிரிகின... மேலும் பார்க்க

Air India Crash: ``விபத்துக்கு முன் இப்படி விளம்பர காட்சி வைத்தது ஏன்?'' - நெட்டிசன்கள் விமர்சனம்

விமான விபத்து நடந்த அன்று காலையிலேயே MidDay என்ற பத்திரிகையின் முன்பக்கத்தில் KidZania எனும் விளம்பரத்தில் Air India விமானம் ஒரு கட்டிடத்திற்குள் புகுந்து வெளியே வருவது போன்ற புகைப்படம் இடம் பெற்று இர... மேலும் பார்க்க

Air India: `கடைசி உரையாடல்' - விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து 230 பயணிகள் மற்றும் 12 விமான பணியாளர்களுடன் சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.இந்த விமான விபத்து உலக... மேலும் பார்க்க

`மரத்தில் வந்த தண்ணீர்' - மஞ்சள் பூசி வணங்கிய மக்கள்; குடிநீர் குழாய் உடைப்பால் ஏமாற்றம்!

புனேவில் உள்ள பிரேம்லோக் பூங்கா பகுதியில் குல்மோகர் மரம் ஒன்றின் தண்டில் இருந்து தண்ணீர் வந்த வினோத சம்பவம் நடந்தது. இதைக் கண்ட மக்கள் பயபக்தியுடன் அங்கு கூடி மரத்தில் இருந்து தீர்த்தம் வருவதாக எண்ணிய... மேலும் பார்க்க

``லக்கேஜ் குறைக்க முடியாது..'' - விமான நிலையத்தில் தரையில் புரண்டு அழுத சீன பெண்.. என்ன நடந்தது?

இத்தாலி விமான நிலையத்தில் சீன பெண் ஒருவர் தரையில் புரண்டு அழுத வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. நியூயார்க் போஸ்ட் இணையதளத்தில் வெளியான தகவலின் படி, சீனாவைச் சேர்ந்த சுற்றுலா பயணியான அந்த பெண், ... மேலும் பார்க்க

போலோ விளையாடியபோது மாரடைப்பு; நடிகை கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவர் சஞ்சய் கபூர் மரணம்

பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூர் தொழிலதிபர் சஞ்சய் கபூரை திருமணம் செய்து கொண்டு பின்னர் 2016-ம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டார். சஞ்சய் கபூர் தன்னை கடுமையாக துன்புறுத்தியதாக கரிஷ்மா கபூர் குற்றம் சாட்டி இ... மேலும் பார்க்க