செய்திகள் :

Sai Kishore: 'ஹர்திக் என் நண்பர்தான் ஆனாலும்...' - களத்தில் முறைத்துக் கொண்டது பற்றி சாய் கிஷோர்

post image

'முறைத்துக் கொண்ட ஹர்திக் - சாய் கிஷோர்!'

அஹமதாபாத் மைதானத்தில் குஜராத்துக்கு எதிரான போட்டியில் 51 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி தோற்றிருக்கிறது. இலக்கை விரட்டிய மும்பை அணி மிக மோசமாக பேட்டிங் ஆடி வீழ்ந்திருக்கிறது. இந்தப் போட்டியின் 15 வது ஓவரை சாய் கிஷோர் வீசிய போது, அவரும் ஹர்திக் பாண்ட்யாவும் ஒருவரையொருவர் முறைத்துக்கொண்டனர்.

சாய் கிஷோர்
சாய் கிஷோர்

அந்த சமயத்தில் ஹர்திக் சாய் கிஷோரை நோக்கி எதையோ பேசவும் செய்தார். இந்தத் தருணம் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் போட்டிக்குப் பிறகு இந்த சம்பவத்தைப் பற்றி சாய் கிஷோர் பேசியிருக்கிறார்.

'சாய் கிஷோர் விளக்கம்!'

அவர் பேசுகையில், ``ஹர்திக் பாண்ட்யா என்னுடைய நல்ல நண்பர். ஆனால், களத்தில் நாங்கள் இருவரும் இப்படித்தான் இருப்போம். எதிரணியைச் சேர்ந்த யாராக இருந்தாலும் இப்படித்தான் போட்டி போட்டுக்கொள்வேன். ஆனால், நாங்கள் இதை தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ளவில்லை. பிட்ச் என்னுடைய பந்துவீச்சுக்கு அவ்வளவு சாதகமாக இருந்ததாக நினைக்கவில்லை. அதனாலயே கொஞ்சம் தற்காப்பாக வீசினேன்.

ஹர்திக் பாண்ட்யா
ஹர்திக் பாண்ட்யா

சூர்யகுமார் யாதவ் சிறப்பாக ஆடினார். உங்களின் பௌலிங்குக்கு எதிராக ஒரு பேட்டர் நல்ல ஷாட்டை ஆடும்போது பாராட்டியேதான் ஆக வேண்டும். நான் உள்ளுணர்வின் அடிப்படையில் சில முடிவுகளை எடுத்தேன். சூர்யகுமாருடன் ஆடிய அனுபவம் இருப்பதால் கில் சில யோசனைகளை கூறினார். இந்த சீசனுக்காக ஆர்வமாகக் காத்திருந்தேன். கடுமையாக உழைத்திருக்கிறேன். நிறைய கற்றுக்கொண்டு வருகிறேன்." என்றார்

போட்டி முடிந்ததற்கு பிறகு இருவரும் ஆரத்தழுவி கைக்குலுக்கிச் சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

MI vs KKR: "அஸ்வனி குமாரின் அந்த விக்கெட் மிக முக்கியமானது" - வெற்றிக்குப் பின்னர் ஹர்திக் பாண்டியா

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று (மார்ச் 31) நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தி தனது வெற்றிக் கணக்கைத் தொடங்கியது மும்பை. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா, முதல... மேலும் பார்க்க

MI vs KKR: `எங்கள் தோல்விக்கு இதுதான் காரணம்' - விளக்கும் கொல்கத்தா கேப்டன் ரஹானே

கொல்கத்தா அணிக்கும் மும்பை அணிக்கும் நேற்று (மார்ச் 31) நடைபெற்ற போட்டியில், மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. முதலில் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்த மும்பை அணி, 16.2 ஓவர்களில் ... மேலும் பார்க்க

Ashwani Kumar: பஞ்சாப் தவறவிட்ட மாணிக்கம்; பட்டை தீட்டிய பல்தான்ஸ்; யார் இந்த அஸ்வனி குமார்?

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று (மார்ச் 31) நடைபெற்ற போட்டியில், கொல்கத்தாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த சீசனில் தனது வெற்றிக் கணக்கைத் தொடங்கியது மும்பை. இந்தப் போட்டியின் மூலம் ஐபிஎ... மேலும் பார்க்க

Ashwani Kumar: "கடின உழைப்பால் இங்கு நிற்கிறேன்" - MI vs KKR போட்டி ஆட்டநாயகன் அஸ்வனி குமார்

மும்பை vs கொல்கத்தா ஐபிஎல் போட்டி வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று (மார்ச் 31) நடைபெற்றது. இதில், டாஸ் வெனறு பவுலிங்கைத் தேர்வு செய்த ஹர்திக் பாண்டியா & கோ, கொல்கத்தாவை 16.2 ஓவர்களில் 116 ரன்களுக்குச்... மேலும் பார்க்க

MI vs KKR: கொல்கத்தாவை வாரிச் சுருட்டிய 23 வயது அறிமுக பவுலர்; வெற்றிக் கணக்கைத் தொடங்கிய மும்பை

ஐபிஎல் 18-வது சீசனில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்பில் மும்பை (MI) அணியும், கடந்த போட்டியின் வெற்றியை இந்தப் போட்டியிலும் தொடர வேண்டும் என்ற நோக்கில் கொல்கத்தாவும் (KKR) வான்கடே மைதானத்... மேலும் பார்க்க

RCB: `இனிமேல் இதுல நாங்கள்தான் நம்பர் 1' - சிஎஸ்கே-வை ஓரங்கட்டி ஆர்சிபி சாதனை

ஐபிஎல் 18-வது சீசன் கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. இதில், 17 சீசன்களாக சாம்பியன் பட்டம் வெல்லாத ஆர்.சி.பி அணி இந்த முறை நிச்சயம் கோப்பையை வெல்ல வேண்டும் என புதிய கேப்டனுடன் களமிறங்கியிருக்கிறது.பிலிப் ச... மேலும் பார்க்க