செய்திகள் :

Salman Khan: `முதுகில் குத்தப்பட்டு துரோகத்தை உணரும்போது' - மருமகனிடம் நெகிழ்ந்த சல்மான் கான்

post image
பாலிவுட் நடிகர் சல்மான் கானின் சகோதரி மகன் அர்ஹானும், அவரின் நண்பர்கள் அருஷ் மற்றும் தேவ் ஆகியோர் இணைந்து தம் பிரியாணி என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகின்றனர். இச்சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் சல்மான் கான் தனது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது,'' பிரேக்அப் ஏற்பட்டுவிட்டால் அதைப்பற்றியே நினைத்துக்கொண்டிருக்காமல் விரைவில் அதில் இருந்து வெளியில் வந்துவிடவேண்டும். எப்போதும் தவறு செய்தால் அதனை ஒத்துக்கொண்டு மன்னிப்பு கேட்பது அவசியம். 'நன்றி' மற்றும் 'மன்னிக்கவும்' போன்ற வார்த்தைகள் தானாக வர வேண்டும்''என்று தெரிவித்தார். சல்மான் கான் அர்ஹான் கானை தனது இலக்குகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஊக்குவித்தார். "ஏதாவது ஒன்றைச் செய்ய விரும்பினால், என்ன நடந்தாலும் அதில் கவனம் செலுத்துங்கள்.

சல்மான் கான்

நீங்கள் காயமடைந்தாலும், உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும், போதுமான அளவு தூங்கவில்லை என்றாலும், அதைச் செய்யுங்கள். வெவ்வேறு நபர்களைக் கையாளும்போது அவர்களுக்கு மரியாதை கொடுக்கவேண்டியது அவசியம். காரணம் இல்லாமல் யாரையும் அவமரியாதை செய்யக்கூடாது. நீங்கள் மரியாதை கொடுக்கவேண்டியது அவசியம். மரியாதை இல்லாத இடத்தில், நீங்கள் இருக்கக்கூடாது''என்று தெரிவித்தார்.

உறவில் துரோகம் குறித்துப் பேசிய சல்மான் கான், ``துரோகம் செய்திருப்பது தெரியவந்தால் உடனே அதிலிருந்து வெளியில் வந்துவிடவேண்டும். ஒரு உறவில் ஈடுபட்டிருக்கும்போது அந்த நபருடன் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள் என்பது முக்கியமல்ல. நீங்கள் 40 முதல் 50 ஆண்டுகள் அவருடன் கழித்திருக்கலாம். நீங்கள் முதுகில் குத்தப்பட்டு இருப்பதாக உணரும்போது அதில் இருந்து 30 நொடிகளில் வெளியில் வர உங்களுக்கு சக்தி வேண்டும். அதிலிருந்து வெளியில் வந்துவிடுங்கள். நீங்கள் எதையாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பினால் சுவர்கள், மரங்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் குரு சொல்வதையும் கேளுங்கள். நான் வழக்கமாக சில மணி நேரம் உறங்குவதுண்டு. மாதத்தில் ஒரு முறை 7 அல்லது 8 மணி நேரம் உறங்க வாய்ப்பு கிடைக்கும். படப்பிடிப்பின் போது ஓய்வு கிடைத்தால் சிறிது நேரம் உறங்குவதுண்டு. நான் சிறையில் இருந்தபோது நன்றாக உறங்கினேன். விமானத்திலும் நன்றாக உறங்குவதுண்டு''என்று தெரிவித்தார்.

Sanjay Dutt: சஞ்சய் தத்திற்கு ரூ.72 கோடி சொத்தை எழுதி வைத்துவிட்டு இறந்த ரசிகை; பின்னணி என்ன?

மும்பையைச் சேர்ந்த ஒரு ரசிகை நடிகர் சஞ்சய் தத் மீது கொண்ட அன்பால் தனது முழு சொத்தையும் அவருக்கு எழுதி வைத்துவிட்டார். நிஷா பாட்டீல் என்ற அந்த 62 வயது ரசிகை உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தபோது தனது பெயர... மேலும் பார்க்க

The Mehta Boys Review: 'பேசிக்கொள்ளாத மெய்யழகன்கள்' - எப்படியிருக்கிறது இந்த அப்பா - மகன் படம்?

தன்னம்பிக்கை இல்லாமல் தொழிலில் சிரமப்படும் ஆர்க்கிடெக்ட் அமேய் (அவினாஷ் திவாரி). அவரின் தாய் இறந்துவிட்டதாகச் செய்தியறிந்து சொந்த ஊருக்குச் செல்கிறார்.வீட்டில் அப்பாவால் (போமன் இரானி) வெளியாள் போலவே ந... மேலும் பார்க்க

The Secret of Shiledars Review: புதையலைத் தேடும் ஷிலேதார்கள்; மிஸ்டரி ரகசியங்களைச் சொல்லி வெல்கிறதா?

வரலாறு குறித்துத் தெரிந்துகொள்வதில் மிகுந்த ஆர்வமாக இருக்கிறார் ஷிலேதார்களுள் ஒருவரான டாக்டர் ரவி பட் (ராஜீவ் கந்தேல்வால்). பலரும் வாழையடி வாழை ஷிலேதாராக இருந்து சத்ரபதி சிவாஜியின் புதையலைப் பாதுகாத்த... மேலும் பார்க்க

``ஐஸ்வர்யா ராய் அழகு..'' -அழகாய் இருக்க ஆலோசனை கேட்ட பெண்... அமிதாப்பச்சன் சொன்ன `நச்' பதில்!

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் மகன் அபிஷேக் பச்சனை நடிகை ஐஸ்வர்யா ராய் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். அத்தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. ஆனால் சமீபகாலமாக கணவன் மனைவி இடையே உறவு சரியில்... மேலும் பார்க்க

``இந்திய பாஸ்போர்ட்டை பார்த்தும் நம்பவே இல்லை..." - அமெரிக்காவில் கைதானது குறித்து `கத்தி' வில்லன்

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான படம் கத்தி. இந்தப் படத்தில் வில்லனாக நடித்தவர் பிரபல பாலிவுட் நடிகர் நீல் நிதின் முகேஷ். இவர் சமீபத்தில் தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்திருந்தார். அதில், அம... மேலும் பார்க்க

Ajithkumar: "விசில் அடித்துக் கொண்டாட நான் ஓடோடி வருவேன் அண்ணா"- நெகிழ்ந்த விவேக் ஓபராய்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் 'விடாமுயற்சி' மற்றும் 'குட் பேட் அக்லி' என இரண்டு படங்கள் ரிலீஸுக்குக் காத்திருக்கிறது.இதனிடையே சமீபத்தில் துபாயில் நடந்த கார்ரேஸில் கலந்துக... மேலும் பார்க்க