செய்திகள் :

Sanskrit: `இது பாரதம்... சமஸ்கிருதம்தான் முதன்மை மொழி’ - மக்களவையில் சபாநாயகர் vs தயாநிதி மாறன்

post image
நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில், நடைபெற்ற கூட்டத்தில் கேள்வி பதில் நேரத்தின்போது தி.மு.க எம்.பி தயாநிதி மாறனுக்கும், சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கும் மக்களவையில் இன்று காரசார விவாதம் அரங்கேறியிருக்கிறது.

பொதுவாக, அவையில் எம்.பி-க்கள் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் உரையாற்றும்போது, மற்ற எம்.பி-க்கள் தங்களுக்கு புரியும் மொழியில் ஹெட்போன் வாயிலாக கேட்டுக்கொள்ளலாம். அதற்கான, மொழிமாற்றம் வசதி அந்த ஹெட்போனில் செய்யப்பட்டிருக்கும்.

தயாநிதி மாறன்

இந்த நிலையில், அந்த மொழிமாற்றம் வசதி சமஸ்கிருதம் உட்பட 22 மொழிகளில் கிடைக்கும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இன்று தெரிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து, சமஸ்கிருதத்தையும் இதில் சேர்த்திருப்பது குறித்து அவையில் கேள்வியெழுப்பிய தயாநிதி மாறன், ``மாநில மொழிகளுக்கு இந்த மொழிமாற்றம் வசதி வரவேற்கிறோம். அதேவேளையில், சமஸ்கிருதம் எந்த மாநிலத்தின் அலுவல் மொழியாக இருக்கிறது என்பதைக் கூற முடியுமா...

தொடர்பு மொழியாகக் கூட இல்லாத சமஸ்கிருதத்துக்கு எதற்காக வரி செலுத்துவோரின் பணத்தை வீணடிக்கிறீர்கள். எந்த மாநிலத்திலும் இந்த மொழி பேசப்படுவதில்லை. யாரும் இந்த மொழியை தொடர்புமொழியாகப் பயன்படுத்தவில்லை. 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, 73,000 பேர் மட்டுமே சமஸ்கிருதம் பேசுகிறார்கள். உங்களின் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்துக்காக வரி செலுத்துவோரின் பணம் வீணடிக்கப்படுகிறது." என்று கூறி அமர்ந்தார்.

அதற்கு, தாமாக முன்வந்து இந்தியில் பதிலளித்த சபாநாயகர் ஓம் பிர்லா, ``எந்த நாட்டில் இருக்கிறீர்கள்... இது பாரதம். பாரதத்தின் முதன்மை மொழி எப்போதும் சமஸ்கிருதம்தான். அதனால்தான், சமஸ்கிருதம் மட்டுமல்லாது 22 மொழிகளைக் குறிப்பிட்டிருக்கிறோம். ஆனால், எதற்காக சமஸ்கிருதத்துக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள். நாடாளுமன்றத்தில் 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன. சமஸ்கிருதம், இந்தி உட்பட அந்த 22 மொழிகளில் ஏதேனும் ஒன்றில் விவாதங்கள் நடக்கும்." என்று கூறினார். இந்தக் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.

Vikatan Play

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: "கலவர வழக்கில் மாணவியின் தாயாரையே குற்றவாளியாக்குவதா?" - CPI(M) கண்டனம்

கள்ளக்குறிச்சியில் 2022, ஜூலை 13-ம் தேதியன்று, கனியாமூர் தனியார் பள்ளியில் +2 படித்து வந்த மாணவி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதில், மாணவி தற்கொலை செய்துகொண்... மேலும் பார்க்க

வேலூர்: விஐடி அருகில் குண்டும் குழியுமான சாலை... மக்களின் கோபமும் மாநகராட்சியின் விளக்கமும் என்ன?

வேலூர் மாவட்டத்தில் காட்பாடி பகுதியில் விஐடி பல்கலைக்கழகத்தின் மெயின் பிளாக் கட்டடங்கள் அமைந்துள்ளன. இந்த மெயின் பிளாக் கட்டடத்தின் அருகிலேயே இருக்கும் அரசு உள் விளையாட்டு மைதானத்திற்குச் செல்லும் சால... மேலும் பார்க்க

டெல்லி: பெண் அல்லது பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து முதல்வர் - ரேஸில் யார் யார்?

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் கடந்த 5-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில், ஆம் ஆத்மி, பா.ஜ.க, காங்கிரஸ் எனத் தேர்தல் களம் பரபரத்தது. 27 ஆண்டுகளுக்குப் பிறகு 70 சட்டமன்றத் தொகுதியில் 48 இடங்க... மேலும் பார்க்க

`அந்த 2 சர்வேக்கள்; திராவிட கட்சிகளின் வாக்குவங்கி’ - பி.கே, விஜய் சந்திப்பும், வியூக பின்னணியும்

விஜய் - பிரசாந்த் கிஷோர்தமிழக அரசியலின் ஒட்டுமொத்த பார்வையும் பனையூரில் குவிந்திருக்கும் அளவுக்கு மாறிப்போயிருக்கிறது, தவெக தலைவர் விஜய் - ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் இடையேயான சந்திப்... மேலும் பார்க்க