செய்திகள் :

Sergio Gor: "என் நண்பர், நம்பிக்கையானவர்" - இந்தியாவிற்கான அமெரிக்க தூதரைப் பரிந்துரைத்த ட்ரம்ப்

post image

இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் விரைவில் நியமிக்கப்பட உள்ளார். இவர் இந்தியாவிற்கு மட்டுமல்ல... இவர் தான் பாகிஸ்தான் உள்ளிட்ட தென் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்குச் சிறப்புத் தூதராகவும் இருப்பார்.

இந்தப் பதவிக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் செர்ஜியோ கோர் என்பவரைப் பரிந்துரைத்துள்ளார்.

இவரின் நியமனத்திற்கு காங்கிரஸ் ஒப்புதல் வழங்க வேண்டும்.

மோடி, ட்ரம்ப்
மோடி, ட்ரம்ப்

செர்ஜியோ கோர்

செர்ஜியோ கோர் ட்ரம்பிற்கு மிகவும் நெருக்கமானவர். அவரின் நம்பிக்கை பெற்றவர் ஆவார். தற்போது அவர் வெள்ளை மாளிகையின் அதிபர் பணியாளர் அலுவலகத்தின் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.

ட்ரம்பின் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்து சென்றதில் இவருக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.

ஒருவேளை, இவர் நியமிக்கப்பட்டால், இவர்தான் ஆசியாவின் இளம் அமெரிக்க தூதராக இருப்பார். இவருக்கு வயது 39 ஆகும்.

ட்ரம்ப் என்ன சொல்கிறார்?

இவரை இந்தியாவின் அமெரிக்க தூதராகப் பரிந்துரைத்தது குறித்து ட்ரம்ப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிக்கு, நான் மிகவும் நம்பக்கூடியவர், எங்களது கொள்கைகளைப் பரப்புபவர், எங்களுக்கு உதவி செய்பவரை நியமிப்பது முக்கியமானது.

அப்படி பார்க்கையில் செர்ஜியோ சிறந்த தூதராக இருப்பார். அவர் எனக்கு சிறந்த நண்பர். பல ஆண்டுகளாக என்னுடன் இருக்கிறார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

TVK மதுரை மாநாடு: ``மகத்தான வெற்றி; செயல்மொழிதான் தாய் மொழி" - தொண்டர்களுக்கு தவெக விஜய் நன்றி

மதுரை பாரபத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு 21-ம் தேதி நடந்தது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் கலந்துகொண்டவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில்... மேலும் பார்க்க

சென்னை: மின்சாரம் பாய்ந்து தூய்மைப் பணியாளர் பலி; "மெல்லிய மழைக்கே உயிர்கள் பலி" - தமிழிசை கண்டனம்

சென்னையில் நேற்று இரவு பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இன்று காலை கண்ணகி நகரில் பணியில் ஈடுபட்டிருந்த வரலட்சுமி என்ற பெண் தேங்கிய நீரில் மின்சாரம் பாய்ந்ததால் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தால் அதிர்ச்... மேலும் பார்க்க

``உணவகங்களில் ரூ.20 தண்ணீர் பாட்டில்களுக்கு ரூ.100 வசூலிப்பது ஏன்?'' - டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி

பெரிய ஹோட்டல்களுக்கு சாப்பிட சென்றால், ரூ.20 தண்ணீர் பாட்டிலை அதிக விலைக்கு விற்பார்கள். ஆனால், 'தண்ணீர் பாட்டில் வேண்டாம். டம்ளரில் தண்ணீர் தாங்க' என்று கேட்க கூச்சப்பட்டு, அந்தத் தண்ணீர் பாட்டிலிலேய... மேலும் பார்க்க

Vijay: `விஜய்யின் எம்ஜிஆர் புகழாரம்' - அதிமுக வாக்குகளை கைபற்றுவாரா?

எம்ஜிஆர் புகழ் பாடிய விஜய்விஜய் தவெகவைத் தொடங்கிய பிறகு, முதல் மாநாடு விக்கிரவாண்டியில் 27.10.2024 அன்று நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, மதுரையில் நடந்த இரண்டாவது மாநாடு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏ... மேலும் பார்க்க

‘Vote Chori’ Row : `வாக்கு திருட்டும் மோடியின் சூழ்ச்சியும்’ - வன்னி அரசு | களம் 02

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)துணை பொதுச் செயலாளர் - விடுதலைச் சிறுத்தைகள் ... மேலும் பார்க்க