செய்திகள் :

Shreyas Iyer: `இன்னும் எதுவும் முடியல...' - ஸ்ரேயஸ் ஐயர் நம்பிக்கை

post image

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் பெங்களூரு அணிக்கும் இடையேயான முதல் தகுதிச்சுற்றுப் போட்டி நடந்து முடிந்திருக்கிறது. இந்தப் போட்டியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வென்று முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றிருந்தது.

RCB vs PBKS
RCB vs PBKS

இந்நிலையில் போட்டிக்குப் பிறகு தோல்வி குறித்து பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் சில முக்கியமான விஷயங்களைப் பேசியிருந்தார்.

அவர் பேசியதாவது, ''இந்த நாளை மறக்க முடியாது. நாங்கள் என்னென்ன தவறுகளைச் செய்தோம் என்பதை அலச வேண்டும். நாங்கள் வேக வேகமாக நிறைய விக்கெட்டுகளை இழந்தோம். நாங்கள் பிட்ச்சை சரியாக கணிக்கவில்லை. நான் வகுத்து வைத்த திட்டங்களின் மீது எனக்கு எப்போதுமே சந்தேகம் கிடையாது. மைதானத்துக்கு வெளியே எல்லாவற்றையும் சரியாகத்தான் திட்டமிட்டு வைத்திருந்தோம்.

Shreyas Iyer
Shreyas Iyer

திட்டங்களை முறையாக செயல்படுத்துவதில்தான் பிரச்னை. பௌலர்களைக்கூட நான் குறை சொல்லமாட்டேன். அவர்கள் போட்டியிடும் அளவுக்கான ரன்களை நாங்கள் எடுக்கவில்லை. சூழலுக்கு ஏற்ப நாங்கள் பேட்டிங் ஆடியிருக்க வேண்டும். நாங்கள் இந்தப் போட்டியில் தோற்றுவிட்டோம். ஆனால், இன்னும் எதுவும் முடியவில்லை. எங்களின் போராட்டக்குணம் அப்படியேத்தான் இருக்கிறது.' என்றார்.

CSK: "அவருடைய வழிகாட்டுதலில் வளர விரும்புகிறேன்" - தோனி குறித்து உர்வில் படேல் உருக்கம்!

அமைதி, தலைமைத்துவம் மற்றும் பணிவைக் கற்றுக்கொடுக்கும் ஒரு மாஸ்டர்கிளாஸ்.சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2025 IPL சீசன் சிறப்பானதாக அமையவில்லை என்றாலும், இளைஞர்கள் - அனுபவமிக்க விரர்களின் பிணைப்பையும் அத... மேலும் பார்க்க

"RCB வென்றால் பொது விடுமுறை அளிக்க வேண்டும்" - கர்நாடக முதல்வருக்குக் கடிதம் எழுதிய ரசிகர்!

ஆர்.சி.பி அணியின் தீவிர ரசிகர் ஒருவர், வருகின்ற ஜூன் 3ம் தேதி ஐபிஎல் இறுதிப்போட்டியில் RCB வெற்றிபெற்றால், அந்த நாளை பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் எனக் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்குக் கடிதம்... மேலும் பார்க்க

ICC: 'இனி ஒரு இன்னிங்ஸிற்கு ஒரு பந்துதான்' - ஒருநாள், டி20, டெஸ்ட் விதிகளில் மாற்றம்; முழு விவரம்

ICC புதிய விளையாட்டு வரையறைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜூன் மாதம் முதல் இந்த வரையறைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. இதில் ஒருநாள் போட்டிகளில் ஒரே பந்தைப் பயன்படுத்தும் முறை கவன... மேலும் பார்க்க

IPL 2025: 'நேற்று குஜராத் அணியும் வெற்றியை நோக்கி சென்றது, ஆனால் நாங்கள்...' - ஹர்திக் சொல்வது என்ன?

நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், மும்பை அணியும் மோதின. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 20 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி. இதன் மூலம் குவா... மேலும் பார்க்க

8 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த சான்ஸ்; இங்கிலாந்தில் சதத்துடன் கரியரை மீண்டும் தொடங்கிய Karun Nair!

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சேவாக்குக்குப் பிறகு ஒரே இந்திய வீரராக முச்சதம் அடித்து, 8 ஆண்டுகளாக மீண்டும் ஒரு வாய்ப்புக்காகப் போராடி, கடந்த ஓராண்டாக உள்ளூர் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டு, இந்திய ... மேலும் பார்க்க

Gill : 'ஒரு மேட்ச்ல 3 கேட்ச் விட்டா இப்படித்தான்...' - குஜராத் கேப்டன் கில் அதிருப்தி

மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இடையேயான எலிமினேட்டர் போட்டி நடந்திருந்தது. இந்தப் போட்டியை மும்பை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டிக்கு சென்றிருக்கிறது... மேலும் பார்க்க