செய்திகள் :

TNPL: தொடர் தோல்வியில் கோவை அணி... ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த சேப்பாக் அணி!

post image

டிஎன்பிஎல் பத்தாவது லீக் போட்டி சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியை லைக்கா கோவை கிங்ஸ் அணி எதிர்கொண்டது. முதலில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

கோவை அணி வீரர்

முதலில் இன்னிங்ஸை தொடங்கிய லைக்கா கோவை கிங்ஸ் தொடக்கம் முதலே சேப்பாக் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. தொடக்க வீரராக களமிறங்கிய லோகேஸ்வர் 9 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து களம் இறங்கிய சச்சின் ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். நிதானமாக ஆடிய மற்றொரு தொடக்க வீரர் ஜித்தேஷ் குமார் 20 பந்துகளில் 42 ரன்களை எடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர் களமிறங்கிய சித்தார்த் 26 ரன்களுக்கும், குரு ராகவேந்திரன் 25 ரன்களுக்கும், கோவை அணியின் கேப்டன் ஷாருக்கான் 20 ரன்களுக்கும், மாதவ பிரசாத் 17 ரன்களுக்கும் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். 19.4 ஓவர் முடிவில் கோவை அணி 144 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சேப்பாக் அணியில் சிறப்பாக பந்து வீசிய அபிஷேக் தன்வர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பிரேம்குமார், விஜய் சங்கர் தலா 2 விக்கெட்டுகளையும், சிலம்பரசன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

சேப்பாக் அணி

145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று எளிய இலக்குடன் களமிறங்கிய சேப்பாக் அணி வீரர்கள் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினர். தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஆசிக் 22 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மற்றொரு தொடக்க வீரர் மோஹித் ஹரிஹரன் 24 பந்துகளில் 21 ரன்களை எடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர் களம் இறங்கிய சேப்பாக் அணியின் கேப்டன் பாபா அபரஜீத் 26 பந்துகளில் 48 ரன்களும், விஜய் சங்கர் 19 பந்துகளில் 34 ரன்களை குவித்து ஆட்டம் இழக்காமல 15.1 ஓவரில் 146 ரன்கள் எடுத்து சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி வெற்றி பெற்றது. கோவை அணியில் சிறப்பாக பந்து வீசிய புவனேஸ்வரன், சுப்பிரமணியன் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

South Africa: 'தென்னாப்பிரிக்காவின் சாபத்தை போக்கிய 'கருப்பு நிலா!' - 'கெத்து பவுமா!'

2015-ம் ஆண்டு உலகக்கோப்பை இன்னமும் அப்படியே நினைவில் நிற்கிறது. ஆஸ்திரேலியாவில் நடந்த அந்த உலகக்கோப்பையில் அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக தென்னாப்பிரிக்கா தோற்று நிற்கும். கிராண்ட் எலியாட் தென்... மேலும் பார்க்க

TNPL: சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி ஹாட்ரிக் வெற்றி.. துஷார் ரஹேஜாவின் அதிரடி அரைசதம் வீண்

டிஎன்பிஎல் ஒன்பதாவது லீக் போட்டி சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியை எஸ்கேஎம் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி எதிர்கொண்டது. முதலில் டாஸ் வென்ற... மேலும் பார்க்க

ENG v IND: "3 அனுபவ வீரர்கள் இல்லை; இது நமக்கு அரிய வாய்ப்பு" - இந்திய வீரர்களுக்கு கம்பீர் உத்வேகம்

புதிய கேப்டன் சுப்மன் கில் தலைமையிலான இந்திய இளம் படை ஜூன் 20-ம் தேதி முதல் இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது.ரோஹித், கோலி, அஸ்வின் ஆகிய சீனியர் வீரர்கள் டெஸ்ட் போட்டிக... மேலும் பார்க்க

Kohli: "நான் அங்கு இருந்திருந்தால் கோலியை கேப்டனாக்கி இருப்பேன்" - யாரைச் சாடுகிறார் ரவி சாஸ்திரி?

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி சமீபத்தில் ஓய்வை அறிவித்திருந்தார். இன்னும் இரண்டு ஆண்டுகள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரின் திடீர் ஓய்வு முடிவு பலருக்கு... மேலும் பார்க்க

TNPL 2025: மதுரை பாந்தர்ஸ் அதிரடி ஆட்டம்... இந்த சீசனில் கோவைக்கு இரண்டாவது தோல்வி | Photo Album

மதுரை பாந்தர்ஸ் அணிகோவை கிங்ஸ் அணிமதுரை பாந்தர்ஸ் அணிகோவை கிங்ஸ் அணிமதுரை பாந்தர்ஸ் அணிகோவை கிங்ஸ் அணிமதுரை பாந்தர்ஸ் அணிகோவை கிங்ஸ் அணிகோவை கிங்ஸ் அணிகோவை கிங்ஸ் அணிகோவை கிங்ஸ் அணிகோவை கிங்ஸ் அணிகோவை... மேலும் பார்க்க

"எல்லா பந்துக்கும் பேட்டை சுழற்றுவதை நிறுத்துங்கள்; உங்களின் பலம்..." - பண்ட்டுக்கு கங்குலி அட்வைஸ்

இந்தியா vs இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20-ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது.புதிய கேப்டன் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியில் துணைக் கேப்டனாக ரிஷப் பண்ட் இடம்பெற்றிருக்கிறார்.ட... மேலும் பார்க்க