செய்திகள் :

Trump tariffs: ``சீன அதிபர் புத்திசாலி; தன் நாட்டை அவர் நேசிக்கிறார்" - வரி விவகாரத்தில் ட்ரம்ப்

post image

அமெரிக்க அதிபரக மீண்டும் பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க பொருள்களின் மீது அதிக இறக்குமதி வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருள்களுக்கு அமெரிக்காவிலும் அதே அளவுக்கு பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

அதன்படி, சீனாவுக்கு 34% வரி விதிப்பு அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் இந்த வரி விதிப்புக்கு பல்வேறு நாடுகள் கடும் அதிருப்தி தெரிவித்தன. இதனையடுத்து ஏப்ரல் 9-ம் தேதி முதல் அனைத்து அமெரிக்க பொருள்களுக்கும் 34% இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று சீனா அறிவித்தது (மொத்தம் 84% வரி).

ட்ரம்ப்
ட்ரம்ப்

இதற்கு பதிலடியாக சீனா மீது கூடுதலாக 50% வரி விதிப்பதாக அமெரிக்க ட்ரம்ப் அறிவித்தார். மேலும், சீனாவின் 34% வரியை திரும்பப் பெறவில்லையென்றால், சீனா மீது 125% கூடுதல் வரிகளை அமெரிக்கா விதிக்கும் என எச்சரிக்கை கொடுத்திருந்தார்.

ஆனால், அமெரிக்கா மீதான 34% வரிவிதிப்பை 24 மணி நேர கெடு முடிந்தும் சீனா திரும்பப் பெறவில்லை. இந்த நிலையில், அமெரிக்கா எச்சரிக்கை விட்டதன்படி சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 104% வரி விதிக்கப்படுவதாக அமெரிக்கா நேற்று (09-04-25) காலை அறிவித்துள்ளது.

இதற்கிடையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ``சீன அதிபர் ஜி ஜின்பிங் புத்திசாலி மனிதர். என்ன செய்ய வேண்டும் என்பதை சரியாக அறிந்த ஒரு மனிதர், அவர் தனது நாட்டை நேசிக்கிறார். அதனால், இரு நாடுகளும் ஒரு நல்ல ஒப்பந்தத்தை மேற்கொள்வோம். அமெரிக்காவில் முதலீடு செய்வது மிகப்பெரிய முதலீடாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

ஜி ஜின்பிங் மற்றும் ட்ரம்ப்
ஜி ஜின்பிங் மற்றும் ட்ரம்ப்

எங்களிடம் யாருக்கும் தெரியாத ஆயுதங்கள் உள்ளன. ஆனாலும் நான் ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவதையே விரும்புகிறேன். அது அனைவருக்கும் நியாயமாக இருக்கும். இது ஒரு பேச்சுவார்த்தைக்கான அழைப்புதான். ஆனால், நீங்கள் நெகிழ்வுத்தன்மையைக் கொண்டிருக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

'காங்கிரஸின் உறுதி பாஜகவிற்கு வயிற்றில் புளியைக் கரைக்கிறது' - டி.ஆர் பாலு

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதற்கு திமுக பொருளாளர் டி.ஆர் பாலு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "ஒன்றிய பா.ஜ.க. அரச... மேலும் பார்க்க

'அதிமுக போராட்டத்திற்கு கண்ணீர் அஞ்சலி' - சீமான் பதில்

அதிமுகவின் நீட் போராட்டம் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சீமான் அளித்த பதில்..."அதிமுகவின் போராட்டத்திற்கு நான் வேண்டுமானால் ஒரு கண்ணீர் அஞ்சலி ... மேலும் பார்க்க

'கத்தி படிக்க வேண்டிய பள்ளிக்கூடத்திற்கு மாணவர்கள் கத்தி கொண்டு வருகிறார்கள்' - தமிழிசை

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பற்றி முன்னாள் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தப்போது பேசியதாவது..."தமிழ்நாட்டில் மக்கள் விரோத ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. இன்று திருச... மேலும் பார்க்க

"பாஜகவிற்கு விசிக தான் துருப்புச் சீட்டு; பாஜகவின் ஒரே நிலைபாடு இதுதான்!" - திருமா சொல்வது என்ன?

அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இப்போது கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள், தேர்தல் வேலைகள் என தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் பரபரப்பாகி உள்ளன. இந்த நிலையில், கூட்டணி குறித்து... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் பரபரக்கும் நீட் விவகாரம்; 'தைரியமிருந்தால்...' அதிமுகவிற்கு துரைமுருகன் சவால்

அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. சமீபத்தில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகி உள்ளது. பாஜகவின் மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் தமிழ்நாட்டில் நீட... மேலும் பார்க்க