செய்திகள் :

TVK Vijay: "மத்திய பட்ஜெட்டில் மீண்டும் புறக்கணிக்கப்படும் தமிழகம்; ஏழை மக்களுக்கு அநீதி" - விஜய்

post image
2025-26 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப் 1) தாக்கல் செய்திருக்கிறார்.

இளைஞர்கள் முன்னேற்றம், வறுமை ஒழிப்பு, உணவு உத்தரவாதம் உள்ளிட்ட 10 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், பட்ஜெட்டின் முக்கிய நோக்கங்களாக பொருளாதார மேம்பாடு, ஒருங்கிணைந்த வளர்ச்சி, தனியார் முதலீடு அதிகரிப்பு, மக்கள் மேம்பாடு, நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் உயர்வு உள்ளிட்ட  5 அம்சங்களில் கவனம் செலுத்தி பட்ஜெட் தயார் செய்யப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் கூறியிருந்தார்.

இந்த பட்ஜெட்டில் 'ரூ.12 லட்சம் வரை வருமானத்துக்கு வரி கிடையாது. கூடுதலாக ரூ.75,000 கழிவு கிடைக்கும். ஆக மொத்தம் ரூ.12.75 லட்சத்துக்கு வருமான வரி கிடையாது' என சில அறிவிப்புகள் வரவேற்கப்பட்டிருந்தாலும், 'பெரும்பான்மையாக இருக்கும் ஏழை எளிய மக்களுக்காக அறிவிப்புகள் ஏதும் இடம்பெறவில்லை, தமிழ்நாடு மீண்டும் மீண்டும் புறக்கணிக்கப்படுகிறது' என பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் 'த.வெ.க' தலைவர் விஜய், 'மீண்டும் புறக்கணிக்கப்படும் தமிழகம்' என்ற தலைப்பில் இந்த 2025-26 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் குறித்துக் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் விஜய், "2025-26ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை ஒன்றிய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள், இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த நிதிநிலை அறிக்கையில் வரவேற்கத்தக்க அம்சங்கள் ஒரு சில மட்டுமே இடம்பெற்றுள்ளன. ஆண்டிற்கு 12 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு வருமான வரி விலக்கு அளித்திருப்பதை நான் உளமார வரவேற்கிறேன். இதன் மூலம் நடுத்தர மக்களுக்குக் குறிப்பிடும்படியான நிவாரணம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

விஜய்

அதே சமயம் நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு நிவாரணம் அளிக்கக்கூடிய பெட்ரோல் / டீசல் வரிக் குறைப்பு மற்றும் GST வரிக் குறைப்பு / எளிமைப்படுத்துதல் பற்றி எந்த ஓர் அறிவிப்பும் இல்லாதது மிகப் பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது. முதல்முறையாகத் தொழில்முனைவோராக உருவாகும் பெண்கள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் உள்ளடங்கிய முதல் 5 லட்சம் பேர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு ரூ.2 கோடி வரை கடன் வழங்கப் புதிய திட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்திருப்பதைத் தமிழக வெற்றிக் கழகம் உளமார வரவேற்கிறது. அதே சமயம் விலைவாசியைக் கட்டுப்படுத்தவும், வேலை வாய்ப்பை அதிகரிக்கவும் போதிய அறிவிப்புகள் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

விஜய்

குறிப்பாக, சிறு குறு தொழில் நிறுவனங்கள் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வாயிலாக இளைஞர்களுக்குப் புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையிலான திட்டங்கள் ஏதும் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை. புதிய ரயில் தடங்கள், சாலைகள், கோயம்புத்தூர், மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் போன்ற தமிழ்நாட்டுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுக்கு எந்த ஓர் அறிவிப்பும் இடம்பெறவில்லை. தமிழகத்தில் மிகத் தொன்மையான இரும்பு நாகரிகம் இருந்தது அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இது தமிழகத்திற்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கின்ற கண்டுபிடிப்பாகும்.

இதற்கு உரிய அங்கீகாரமும் சுற்றியுள்ள பகுதிகளில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள நிதியும் வழங்காதது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. அணுஉலை மின் உற்பத்தி PPP (Public Private Partnership) மூலம் தனியார் மயமாக்கப்படுதலுக்கு இந்த நிதிநிலை அறிக்கை முக்கியத்துவம் வழங்கி இருப்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. காற்றாலை மற்றும் சூரிய ஒளி மூலம் மின் உற்பத்திக்கான தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இந்தக் காலக்கட்டத்தில் மீண்டும் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து விளைவிக்கும் அணுமின் உற்பத்தி தொடர்பான அறிவிப்பை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். Asset Monetization வாயிலாகப் பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துகள், ஒரு சில பெரும் தனியார் நிறுவனங்களின் கைகளுக்குச் சென்று விடுமோ என்ற ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

ஒவ்வோர் ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும்போதும், சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ள மாநிலங்களைக் கருத்தில் கொண்டு, அந்த மாநிலத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து அதிக நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருவது மற்ற மாநிலங்களையும் அந்த மாநில மக்களையும் அவமதிப்பதாக உள்ளது. இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானதாகும். வழக்கம் போல் இந்த ஆண்டும் ஒன்றிய அரசானது தமிழகத்திற்குப் புதிய திட்டங்களை அறிவிக்காமலும் போதிய அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமலும் புறக்கணித்துள்ளது. அனைத்து மாநிலங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியைக் கருத்தில் கொண்டே ஒன்றிய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும். மாறாக, பாரபட்சத்தோடு நடந்துகொள்வது சரியான அணுகுமுறை இல்லை." எனக் குறிப்பிட்டுள்ளார்.

Union Budget 2025 : பட்ஜெட்டில் இடம்பெறாத `தங்கம்' குறித்த அறிவிப்பு.. இன்று சந்தையில் விளைவு என்ன?

உலக அளவில் பொருளாதார மந்த நிலை, போர் பதற்றம், உலக நாடுகள் தங்கம் வாங்கிக் குவிப்பது போன்ற காரணங்களால்... தங்கம் விலை ஏற்கெனவே தாறுமாறாக உயர்ந்துகொண்டிருந்தது. இன்று வெளியாகும் மத்திய பட்ஜெட்டில் தங்கம... மேலும் பார்க்க

Union Budget 2025 : `உங்கள் வருமானத்திற்கு வரி உண்டா?' - இங்கே செக் செய்து கொள்ளுங்கள்!

மத்திய பட்ஜெட்டில் வருமான வரி சலுகைக்கான உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டிருப்பது, நிச்சயம் 'ஹேப்பி' நியூஸ். கடந்த ஆண்டு வருமான வரி சலுகை உச்ச வரம்பு ரூ.7 லட்சமாக இருந்த நிலையில், இப்போது ரூ.12... மேலும் பார்க்க

Budget 2025: 'கிரெடிட் கார்டுகள், கடன்கள்'- சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு என்னென்ன அறிவிப்புகள்?

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த மத்திய பட்ஜெட் தாக்கல் ஆகி முடிந்துள்ளது. பட்ஜெட்டில் இடம்பெற்ற சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான முக்கிய அறிவிப்புகள்...* இந்த கிரெடிட் கார்டை உதயம் வலைத... மேலும் பார்க்க

Budget 2025: ஆந்திராவுக்கு கவிதை... பீகாருக்கு `5' திட்டங்கள் - பட்ஜெட்டில் இடம்பெற்ற விஷயங்கள்!

மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்திருக்கும் பாஜக அரசின் முக்கிய தூண்கள் ஆந்திர பிரதேசம் மற்றும் பீகார் என்றே சொல்லலாம். ஆந்திர பிரதேசத்தில் இருந்து சந்திரபாபு நாயுடு கொடுத்த ஆதரவும், பீகாரில் இருந்து நிதி... மேலும் பார்க்க

Union Budget 2025: அடையாள அட்டை, மருத்துவ உதவி... டெலிவரி பாய் போன்ற Gig தொழிலாளர்களுக்கு அறிவிப்பு

குறைந்த வேலைவாய்ப்புகள், நிலையற்ற வேலைவாய்ப்புகள் போன்ற காரணங்களால், டெலிவரி பாய் போன்ற கிக் வேலைகளை நோக்கி இளைஞர்கள் அதிகம் நகர்ந்து வருகின்றனர்.நிச்சயமான வேலை, நிரந்தர வருமானம், உரிய அங்கீகாரம், நிர... மேலும் பார்க்க

Union Budget 2025: '1 மணி நேரம் 15 நிமிடங்கள்' - நிர்மலா சீதாராமனின் மிக குறைந்த நேர பட்ஜெட் தாக்கல்

2025-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் வெற்றிகரமாக தாக்கல் ஆகி முடிந்துள்ளது. இந்தப் பட்ஜெட் மூலம் தொடர்ந்து எட்டாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் என்ற பெருமையை பெற்றுள்ளார் நிர்மலா சீதாராமன்... மேலும் பார்க்க