செய்திகள் :

Vice President: "தமிழரை நிறுத்திவிட்டால் மட்டும் போதுமா?" - சி.பி.ராதாகிருஷ்ணன் குறித்து கனிமொழி

post image

வருகின்ற செப்டம்பர் 9ம் தேதி நடைபெறக் கூடிய துணைக்குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பாகக் களமிறங்கும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எதிராக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டியை நிறுத்தியிருக்கிறது இந்தியா கூட்டணி.

கருத்தியல்களுக்கு இடையிலான போர்

சுதர்சன் ரெட்டி தேர்வு குறித்துப் பேசிய திமுக எம்.பி கனிமொழி, "துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி அவர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம்.

Sudharsan Reddy
Sudharsan Reddy

முதலமைச்சர் தெரிவித்ததுபோல இந்தத் தேர்தல் இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையிலான போராக இருக்கும். பிளவுவாத அரசியலை, இந்துத்துவ அரசியலை எதிர்க்கக்கூடிய தேர்தலாக இந்தத் தேர்தல் அமையும்.

அத்தனை எதிர்க்கட்சிகளிடமும் கருத்துக் கேட்கப்பட்டு ஆலோசனைகள் கேட்கப்பட்டுப் பல கருத்துரையாடல்களுக்குப் பிறகு, நேற்று காங்கிரஸ் தலைவர் கார்கே அவர்கள் தமிழக முதலமைச்சரிடமும் இந்த வேட்பாளரைப் பற்றிப் பேசி அவருடைய ஏற்பையும் பெற்று இந்த வேட்பாளரை இன்று அனைவரும் இணைந்து அறிவித்திருக்கிறோம்" என்றார்.

தமிழர் - ஆர்.எஸ்.எஸ் காரர்!

தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழரை நிறுத்தியிருப்பது குறித்த கேள்விக்கு, "இதைத் தமிழர் தமிழரல்லாதவர் தேர்தலாக இல்லாமல், இரண்டு துருவத்தில் இருக்கக் கூடிய கருத்தியல்கள் மோதிக்கொள்ளும் தேர்தலாகப் பார்க்கவேண்டும்.

சி.பி.ராதாகிருஷ்ணன் - CP Radhakrishnan
சி.பி.ராதாகிருஷ்ணன் - CP Radhakrishnan

ஒரு ஆர்.எஸ்.எஸ் பின்புலத்திலிருந்து, பாஜகவின் பிளவுவாத அரசியலை ஆதரிக்கக் கூடிய ஒருவரை எதிர்த்து அத்தனை எதிர்க்கட்சித் தலைவர்களும் ஒருமித்தமாக நிறுத்தியிருக்கக் கூடிய வேட்பாளர் சுதர்சன் ரெட்டி.

தமிழ்நாட்டிலிருந்து பாஜக ஒருவரை நிறுத்தியிருப்பதாகக் கூறுகின்றனர். அவர்கள் தமிழ்நாட்டுக்கு, தமிழ் மக்களுக்கு என்ன செய்திருக்கிறார்கள்? வேட்பாளரை மட்டும் நிறுத்திவிட்டால் தமிழ்நாட்டுக்கு எல்லாம் செய்துவிட்டதாக ஆகிவிடுமா?" எனக் கேள்வி எழுப்பினார் கனிமொழி.

ஏன் சுதர்சன் ரெட்டி?

"அவர் நீதிபதியாக இருக்கும்போதே மக்களுக்கான, அரசியலமைப்பைத் தூக்கிப் பிடிக்கக் கூடிய தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார். ஓய்வுக்குப் பிறகும் பாஜகவின் பிளவுவாத, இந்துத்துவ அரசியலை எதிர்த்துப் பேசக் கூடிய ஒருவராகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்" எனப் பதிலளித்தார் கனிமொழி.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

குஜராத் அவலம்: "எங்களுக்கு இப்போதுதான் சுதந்திரம்" - பட்டியலின மக்கள் சலூன் கடையில் முடிவெட்ட அனுமதி

குஜராத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பட்டியலின மக்கள் கிராமத்தில் உள்ள கடைகளில் முடிவெட்டிக்கொள்ள ஆதிக்கச் சாதியினர் தடை விதித்து இருந்தனர்.குஜராத்தில் உள்ள பனஸ்காந்தா மாவட்டத்தில் உள்ள ஆல்வடா என்ற கிராமத... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: ``ரூ.56 கோடி வீணானது; இந்த முறையாவது குடிக்க தண்ணீர் கிடைக்குமா?'' - தவிக்கும் மக்கள்

கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே நரிப்பையூர் ஊராட்சியில் 1998 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம், ... மேலும் பார்க்க

``டி.ஆர்.பாலு பொதுவாழ்வில் பயணித்திட அன்பை வழங்கியவர்!'' - TRB-ன் மனைவி இறப்புக்கு ஸ்டாலின் இரங்கல்

நாடாளுமன்றத்தின் திமுக தலைவர் டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி பாலு இன்று காலை காலமானார். டி.ஆர்.பாலு மற்றும் தமிழ்நாடு அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவிற்கு நேரில் சென்று இரங்கலைத் தெரிவித்துள்ளார் தமிழ்நாட... மேலும் பார்க்க

புதின், ஜெலன்ஸ்கியை 2 வாரங்களுக்குள் சந்தித்த ட்ரம்ப்; பேச்சு வார்த்தையில் நடந்த மாற்றங்கள் என்ன?

நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்திப்பு நடந்து முடிந்துள்ளது. 2022-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் தொடங்கிய ரஷ்யா - உக்ரைன் போர், மூன்றரை ஆண்டுகள் தாண்டியும் தொடர்ந்துகொண்டிருக்கி... மேலும் பார்க்க

அன்புமணி மீதான 16 குற்றச்சாட்டுகள்: `விளக்கம், ஆவணங்கள் இருந்தால்.!’ - தேதி குறித்த ராமதாஸ்

கடந்த டிசம்பர் மாதம் முதல், பா.ம.க-வில் அன்புமணி, ராமதாஸ் இடையில் முட்டல், மோதல்போக்கு தொடர்ந்து வருகிறது. கடந்த மே 30-ம் தேதியோடு, பா.ம.க தலைவர், பொதுசெயலாளர் உள்ளிட்ட பதவிக்காலம் முடிந்துவிட்டது. இப... மேலும் பார்க்க

`தலைமை கொடுத்திருக்கும் டாஸ்க்!’ - டெல்லியில் முகாமிட்டுள்ள தமிழக பாஜக தலைவர்கள்

தேசிய ஜனநாயக கூட்டணியில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி ராதாகிருஷ்ணன் சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டு இருந்தார். 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், திமுக மற்று... மேலும் பார்க்க