செய்திகள் :

அன்புமணி மீதான 16 குற்றச்சாட்டுகள்: `விளக்கம், ஆவணங்கள் இருந்தால்.!’ - தேதி குறித்த ராமதாஸ்

post image

கடந்த டிசம்பர் மாதம் முதல், பா.ம.க-வில் அன்புமணி, ராமதாஸ் இடையில் முட்டல், மோதல்போக்கு தொடர்ந்து வருகிறது. கடந்த மே 30-ம் தேதியோடு, பா.ம.க தலைவர், பொதுசெயலாளர் உள்ளிட்ட பதவிக்காலம் முடிந்துவிட்டது. இப்போது தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், பா.ம.கவின் உட்கட்சித் தேர்தல் தள்ளிப்போடப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், சில தினஙகளுக்கு முன்பு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தலைமையில் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நடந்தது. அதில் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளை பா.ம.க முன்வைத்து வரிசைப் படுத்தியது.

பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸ்
பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸ்

இந்த நிலையில், அன்புமணி மீதான குற்றச்சாட்டுகளுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்றக் கேள்வி ராமதாஸ் ஆதரவு பா.ம.க தொண்டகளிடம் எழுந்தது. அதற்கு விளக்கமளிக்கும் வகையில் தைலாபுரத்தில் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, ``அன்புமணி மீது முன்வைக்கப்பட்ட 16 குற்றச்சாட்டுகளை விசாரித்து அறிக்கை சமர்பிக்க, கட்சியின் அமைப்பு விதி எண் 23 படி ஒழுங்கு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டது. அதன் அடிப்படையில், இந்தக் குழுவின் விசாரணை அறிக்கை கடிதம், செயல் தலைவர் அன்புமணிக்கு இன்று அனுப்பி வைப்பதென முடிவு செய்யப்பட்டது.

அந்த விசாரணை அறிக்கைக்கான விளக்கம் மற்றும் ஆவணங்கள் இருந்தால் அவைகளை 31.8.2025 தேதிக்குள் நேரிலோ அல்லது மேற்கண்ட முகவரிக்கு கடிதத்தின் வாயிலாகவோ சமர்ப்பிக்கப்பட வேண்டும்" எனத் தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

``டி.ஆர்.பாலு பொதுவாழ்வில் பயணித்திட அன்பை வழங்கியவர்!'' - TRB-ன் மனைவி இறப்புக்கு ஸ்டாலின் இரங்கல்

நாடாளுமன்றத்தின் திமுக தலைவர் டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி பாலு இன்று காலை காலமானார். டி.ஆர்.பாலு மற்றும் தமிழ்நாடு அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவிற்கு நேரில் சென்று இரங்கலைத் தெரிவித்துள்ளார் தமிழ்நாட... மேலும் பார்க்க

புதின், ஜெலன்ஸ்கியை 2 வாரங்களுக்குள் சந்தித்த ட்ரம்ப்; பேச்சு வார்த்தையில் நடந்த மாற்றங்கள் என்ன?

நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்திப்பு நடந்து முடிந்துள்ளது. 2022-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் தொடங்கிய ரஷ்யா - உக்ரைன் போர், மூன்றரை ஆண்டுகள் தாண்டியும் தொடர்ந்துகொண்டிருக்கி... மேலும் பார்க்க

`தலைமை கொடுத்திருக்கும் டாஸ்க்!’ - டெல்லியில் முகாமிட்டுள்ள தமிழக பாஜக தலைவர்கள்

தேசிய ஜனநாயக கூட்டணியில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி ராதாகிருஷ்ணன் சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டு இருந்தார். 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், திமுக மற்று... மேலும் பார்க்க

Vice President: இந்தியக் கூட்டணி வேட்பாளராகக் களமிறங்கும் நீதிபதி சுதர்சன் ரெட்டி; யார் இவர்?

துணை குடியரசுத் தலைவர் பதவிக்கு இந்தியக் கூட்டணி வேட்பாளராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார். யார் இவர்? பி. சுதர்ஷன் ரெட்டி, ஜூலை 8, 1946 இல் பிறந்தார். டிசம்பர் 2... மேலும் பார்க்க

``நோயாளி இல்லாத ஆம்புலன்ஸ்; ஓட்டுநர் பேஷண்ட் ஆகிவிடுவார்'' - பகிரங்கமாக எச்சரித்த எடப்பாடி பழனிசாமி

பிரசார கூட்டத்துக்கு மத்தியில் ஆம்புலன்ஸ் அ.தி.மு.க பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி `மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்கிற தலைப்பில் சட்டமன்ற தொகுதி வாரியாக பிரசார ச... மேலும் பார்க்க

Vote Chori: `ராகுல்காந்தி கூறுவது சரியானது; தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும்' -திவ்யா ஸ்பந்தனா

வாக்காளர் பட்டியலில் மோசடி நடந்திருப்பதாகத் தேர்தல் ஆணையம் மற்றும் ஆளும் பாஜக மீது, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டுகளை முன்வைத்தது அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. பிகார் மாநிலத்தில்... மேலும் பார்க்க