செய்திகள் :

WTC: "டெஸ்ட் சாம்பியன்ஷிபை விட IPL முக்கியமா?" - ஹேசல்வுட் மீது கேள்வி எழுப்பிய ஆஸி., முன்னாள் வீரர்

post image

வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசல்வுட் தேசிய கிரிக்கெட்டுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளைத் தாண்டி IPL-ல் கவனம் செலுத்தியதாக ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மிட்செல் ஜான்சன் சாடியுள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஹேசல்வுட் ஆகிய மூன்று வீரர்களும் முக்கிய பங்காற்றுவார்கள் எனக் கூறப்பட்டது.

Hazelwood
Hazelwood

இதனால் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தது ஆஸ்திரேலியா ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றமாக அமைந்தது. இந்த நிலையில் ஹேசல்வுட்டின் IPL பங்களிப்பைச் சுட்டிக்காட்டிப் பேசியிருக்கிறார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மிட்செல் ஜான்சன்.

ஐபிஎல் 2025ல் முதன்முதலாகக் கோப்பையைக் கைப்பற்றியது ஆர்.சி.பி அணி. இதற்கு முக்கிய காரணமாக விளங்கினார் ஹேசல்வுட்.

ஐபிஎல் 2025 தொடர் பாதியில் நின்ற பிறகு ஹேசல்வுட்டின் உடல்நிலை குறித்த கவலைகள் இருந்தன. எனினும் தொடரின் கடைசிக் கட்டத்தில் கம்பேக் கொடுத்த ஹேசல்வுட் சிறப்பான பங்களிப்பை ஆற்றி வெற்றிக்கு வழிவகுத்தார்.

Mitchel Jhonson
Mitchel Jhonson

மிச்டெல் ஜான்சன் இதுகுறித்து வெஸ்ட் ஆஸ்திரேலியன் செய்தித் தளத்தில், "சமீப ஆண்டுகளில் ஹேசல்வுட்டின் உடல்நிலை குறித்து எங்களுக்குக் கவலைகள் உள்ளன.

தேசிய அணியின் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபடுவதை விட தாமதமாக நடத்தப்பட்ட ஐபிஎல் தொடரில் கலந்துகொள்ளும் அவரது முடிவு ஆச்சரியத்தைத் தருகிறது" என எழுதியுள்ளார்.

WTC இறுதிப்போட்டியில் 34 ஓவர்கள் வீசிய ஹேசல்வுட் 85 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் மட்டுமே கைப்பற்றினார். போட்டியின் முக்கிய தருணங்களில் விக்கெட் எடுக்கத் தவறினார்.

"எங்களது வெற்றிகரமான 'பிக் ஃபோர்' பவுலிங் அட்டாக்கான பேட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசல்வுட், மிட்செல் ஸ்டார்க், நாதன் லைன் ஆகியோர் இச்சூழலை எளிதாக எடுத்துக்கொள்ளப்படக் கூடாது.

அனுபவமிக்க வீரர்கள் ஆஷஸ் தொடரில் விடைபெறுவதற்காக மட்டுமே அணியில் நீடித்திருந்தால், அது சரியான மனநிலையா என்ற கேள்வி எழுகிறது.

எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு நமது அடுத்த டெஸ்ட் வீரர்களைத் தேர்ந்தெடுப்பதில் நம்பிக்கைக் கொள்வது அவசியம்" என்றும் கூறியிருக்கிறார் மிட்செல் ஜான்சன்.

ஆஸ்திரேலிய அணியினர் அடுத்ததாக ஜூன் 25ம் தேதி வெஸ்ட் இண்டிஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

ENG vs IND: "இந்தியாவின் முன்னணி வீரர் என்னை ஓய்வுபெறச் சொன்னார்; காரணம்..." - பகிரும் கருண் நாயர்

டெஸ்ட் கிரிக்கெட்டில் 2016-ல் அறிமுகமாகி, முதல் தொடரிலேயே முச்சதம் அடித்த கருண் நாயர் அடுத்த 6 மாதங்களிலேயே அணியிலிருந்து கழற்றிவிடப்பட்டார்.அதன்பிறகு அணியில் இடம்பிடிக்க கடுமையாகப் போராடிய கருண் நாயர... மேலும் பார்க்க

"2011 உலகக் கோப்பைக்குப் பிறகு 7 பேரின் கரியரை பிசிசிஐ அழித்துவிட்டது" - யுவராஜின் தந்தை யோகராஜ்

தோனி தலைமையிலான இந்திய அணி 28 வருடங்களுக்குப் பிறகு 2011-ல் ஒருநாள் உலகக் கோப்பையை வென்றதைத்தொடர்ந்து இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியைக் கட்டமைக்கும் வேலைகள் மெல்ல மெல்ல நடந்தன.அதேசமயம், அடுத்த இரண்... மேலும் பார்க்க

"சிறுவயதிலிருந்து அவர் எனக்கு இன்ஸ்பிரேஷன்" - கோலி அல்ல தமிழக வீரரைக் குறிப்பிடும் சாய் சுதர்சன்

இந்த ஆண்டு நடந்து முடிந்த ஐ.பி.எல் சீசனில் கன்சிஸ்டன்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆரஞ்சு கேப் (759 ரன்கள்) வென்றதன் மூலம், இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரில் இடம்பிடித்திருக்கிறார் தமிழக வீர... மேலும் பார்க்க

TNPL: தொடர் தோல்வியில் கோவை அணி... ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த சேப்பாக் அணி!

டிஎன்பிஎல் பத்தாவது லீக் போட்டி சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியை லைக்கா கோவை கிங்ஸ் அணி எதிர்கொண்டது. முதலில் டாஸ் வென்ற சேப்பாக் சூப... மேலும் பார்க்க

South Africa: 'தென்னாப்பிரிக்காவின் சாபத்தை போக்கிய 'கருப்பு நிலா!' - 'கெத்து பவுமா!'

2015-ம் ஆண்டு உலகக்கோப்பை இன்னமும் அப்படியே நினைவில் நிற்கிறது. ஆஸ்திரேலியாவில் நடந்த அந்த உலகக்கோப்பையில் அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக தென்னாப்பிரிக்கா தோற்று நிற்கும். கிராண்ட் எலியாட் தென்... மேலும் பார்க்க

TNPL: சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி ஹாட்ரிக் வெற்றி.. துஷார் ரஹேஜாவின் அதிரடி அரைசதம் வீண்

டிஎன்பிஎல் ஒன்பதாவது லீக் போட்டி சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியை எஸ்கேஎம் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி எதிர்கொண்டது. முதலில் டாஸ் வென்ற... மேலும் பார்க்க