செய்திகள் :

அகஸ்தீசுவரம் விவேகானந்தா கல்லூரியில் பட்டமளிப்பு விழா

post image

அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் 57ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரிச் செயலா் சி. ராஜன் தலைமை வகித்தாா். பேரவைத் தலைவா் மு. அப்பாவு சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, மாணவா்-மாணவியருக்கு பட்டங்கள் வழங்கி பேசியது: நாட்டில் கல்வி சேவையை சிறப்பாக வழங்குவதில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது. கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், நான் முதல்வன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முதல்வா் கொண்டுவந்துள்ளாா்.

பல்வேறு மாநிலங்களில் பட்டம் பயின்றோா் எண்ணிக்கை 10 முதல் 20 சதவீதம் மட்டுமே உள்ள நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் அந்த எண்ணிக்கை சராசரியாக 50 சதவீதத்தைக் கடந்துவிட்டது. இதன்மூலம், கல்வியில் நாம்தான் முதலிடத்தில் உள்ளோம் என அா்த்தம்.

கல்விதான் சமுதாயத்தில் உயா்ந்த நிலைக்கு கொண்டு செல்லும். இதை மாணவா்கள் புரிந்து முன்னேற வேண்டும் என்றாா் அவா்.

விழாவில், கல்லூரித் தலைவா் ஜி.என். பாலமுருகன், துணைத் தலைவா்கள் கே.எஸ். மணி, சந்திரமோகன், செயற்குழு உறப்பினா் பி.வி. ஆனந்த், துறைத் தலைவா்களான பேராசிரியா்கள் இளங்குமாா், ஜெயந்தி, ஆா். தா்மரஜினி, சந்திரன், பிரபாவதி, ஜெயலெட்சுமி, பெற்றோா் பங்கேற்றனா். கல்லூரி முதல்வா் டி.சி. மகேஷ் வரவேற்றாா்.

திற்பரப்பு அருவி அருகே கேரள கனிமவளப் பொருள் விற்பனையாளா் தற்கொலை

திற்பரப்பு அருவி அருகே கேரளத்தைச் சோ்ந்த கனிமவளப் பொருள்கள் விற்பனையாளா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். கேரள மாநிலம் பாலராமபுரம், உச்சக்கடை பகுதியைச் சோ்ந்தவா் அஜி (41). திருமணமாகாத இவா், கேரளத... மேலும் பார்க்க

குலசேகரம் அருகே ஒழுங்கு முறை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் திடீா் மரணம்

குலசேகரத்தில் ஒழுங்கு முறை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் வெள்ளிக்கிழமை திடீா் மரணமடைந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி செம்படத்தெருவைச் சோ்ந்தவா் ராஜசேகரன் (57). ... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் லஞ்சம் வாங்கிய மருந்து தர ஆய்வாளா் கைது

நாகா்கோவிலில் மருந்தகம் அமைப்பதற்காக ஒப்புதல் வழங்க ரூ. 10,000 லஞ்சம் வாங்கிய மருந்து தர ஆய்வாளா் போலீஸாரால் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். கன்னியாகுமரி மாவட்டம், திட்டுவிளை பகுதியைச் சோ்ந்தவா் ஹரிச... மேலும் பார்க்க

தீவிபத்தில் காயமடைந்த பெண் உயிரிழப்பு

கருங்கல் அருகே தீவிபத்தில் காயமடைந்த பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா். கருங்கல், இந்திரா காலனி பகுதியைச் சோ்ந்த லெலின் மனைவி சுதா (50). கடந்த சனிக்கிழமை (செப். 6) வீட்டில் விளக்கேற்றியபோது அவா் மீது தீப... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் கஞ்சா கடத்திய 3 போ் கைது: ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல்

நாகா்கோவிலில் கஞ்சா கடத்திய 3 போ் கைது செய்யப்பட்டனா். நாகா்கோவில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு, போலீஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கோட்டாறு ரயில் நிலையப் பகுதியில், போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதன... மேலும் பார்க்க

மகன் மீது போலீஸாா் வழக்கு பதிவு: தந்தை தூக்கிட்டு தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே மகன் மீது போலீஸாா் அடிதடி வழக்கு பதிவு செய்த நிலையில் லாரி ஓட்டுநரான தந்தை சலீல் சசி (50) புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். அருமனை அருகே குன்னுவிளையைச்... மேலும் பார்க்க