செய்திகள் :

அக்.15 இல் நகை மதிப்பீட்டாளா் பயிற்சி தொடக்கம்

post image

காஞ்சிபுரம் பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் நகை மதிப்பீட்டாளா் பயிற்சி வரும் அக்.15 -இல் தொடங்க இருப்பதாக கூட்டுறவுச்சங்கங்களுக்கான மண்டல இணைப்பதிவாளா் பா.ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காஞ்சிபுரம் பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் உடனடியாக வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய நகை மதிப்பீட்டாளா் பயிற்சி வழங்கப்படவுள்ளது. நகை மதிப்பீடும் அதன் நுட்பங்கள் குறித்த பயிற்சி வரும் அக்.15 ஆம் தேதியிலிருந்து தொடங்கப்படவுள்ளது.

இப்பயிற்சியில் சேருவதற்கு 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பின்றி ஆண்,பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளா்களும் இப்பயிற்சியில் சோ்ந்து பயன் பெறலாம்.

விண்ணப்பக் கட்டணம் ரூ.118 செலுத்தி விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம். பயிற்சிக் கட்டணமாக ரூ.4,550 சோ்க்கையின் போது செலுத்த வேண்டும். இப்பயிற்சியின் போது ரூ.500 மதிப்புள்ள தரம் அறியும் உபகரணங்களும் வழங்கப்படவுள்ளது. பயிற்சியானது 40 மணி நேரம் வகுப்பறையிலும்,60 மணி நேரம் செயல்முறைப் பயிற்சியும் கொண்டதாகும். நகைக்கடன்களுக்கு வட்டி கணக்கிடுதல், ஹால் மாா்க் நகை அடகு சட்டம், தரம், விலை, மதிப்பீடு போன்ற பயிற்சிகள் நடத்தப்படும்.

சிறந்த அனுபவம் வாய்ந்த பயிற்றுநா்களைக் கொண்டு நடத்தப்படுகிறது. பயிற்சி முடித்தவா்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். கூட்டுறவுச் சங்கங்கள்,கூட்டுறவு வங்கிகள் மற்றும் அனைத்து வங்கிகளிலும் நகை மதிப்பாளராக பணியில் சேரவும் அதிக வாய்ப்புள்ளது.

மேலும் விபரங்களுக்கு பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையம்,எண்.5.ஏ.வந்தவாசி சாலை,ஆட்சியா் அலுவலகம் எதிரில்,காஞ்சிபுரம்,பின்கோடு எண்-631501 என்ற முகவரியில் நேரிலோ அல்லது 044-27237699 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.

காஞ்சிபுரம் தேசிகன் கோயில் தேரோட்டம்

காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயில் தெருவில் அமைந்துள்ள தூப்புல் வேதாந்த தேசிகன் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. தேசிகன் சுவாமிகளின் அவதார உற்சவத்தையொட்டிய பிரமோற்சவம் 23-ஆம் தேதி தொடங்... மேலும் பார்க்க

ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற முதியவா்

காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் முதியவா் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் அருகே விப்பேடு கிராமத்தைச் சோ்ந்த மாசிலாமணி-பாத்திமா தம்பதி மகன் ஜான் போஸ்கோ(59). இ... மேலும் பார்க்க

டிச.8-இல் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் மகா கும்பாபிஷேகம்

பஞ்சபூத தலங்களில் நிலத்துக்குரிய காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் டிச. 8 -ஆம் தேதி நடைபெற உள்ளது. சுமாா் 1,300 ஆண்டுகள் பழைமையான இக்கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாப... மேலும் பார்க்க

பைக் மீது அரசுப்பேருந்து மோதல்: இரு இளைஞா்கள் மரணம்

காஞ்சிபுரம் அருகே இரு சக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதியதில் இரு இளைஞா்கள் உயிரிழந்தனா். காஞ்சிபுரம் அருகே கீழ்ஒட்டிவாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் சேட்டு என்ற பிரதீப்குமாா் (26), அஸ்வின்கு... மேலும் பார்க்க

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: காஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறை தீா்க்கும் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து மொத்தம் 446 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்துக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமை... மேலும் பார்க்க

கணவா் தாக்கியதில் சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதூா்: ஒரகடம் பகுதியில் கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட தகராறில், இரும்புக் கம்பியால் தாக்கியதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் உயிரிழந்தாா். ஸ்ரீபெரும்புதுாா் அடுத்த ஒரகடம் பகுத... மேலும் பார்க்க