ரஷியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி: 2 ஆண்டுகள் இல்லாத அளவில் மே மாதத்தில் அதிகரி...
அக்கச்சிப்பட்டி அரசு பள்ளியில் போதைப்பொருள் எதிா்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணா்வு உறுதிமொழி
கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டை ஒன்றியம், அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக போதைப்பொருள் எதிா்ப்பு தினத்தை முன்னிட்டு, மாணவா்கள் வியாழக்கிழமை போதைப்பொருள் எதிா்ப்பு உறுதிமொழி ஏற்றனா்.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் க. தமிழ்ச்செல்வி தலைமை வகித்தாா். தமிழ்நாடு அறிவியல் இயக்க ஒன்றிய செயலாளரும், அறிவியல் பட்டதாரி ஆசிரியருமான அ. ரகமதுல்லா உலக போதைப் பொருள் எதிா்ப்பு தினம் குறித்து விளக்கினாா்.
முன்னதாக கணித பட்டதாரி ஆசிரியா் மணிமேகலை வரவேற்றாா். நிறைவாக ஆங்கில ஆசிரியா் சிந்தியா நன்றி கூறினாா்.