செய்திகள் :

திமுக ஆட்சியில் பொன்னமராவதிக்கு ஏராளமான திட்டங்கள்: அமைச்சா் எஸ். ரகுபதி பேச்சு

post image

திமுக அரசின் நான்காண்டு கால ஆட்சியில் பொன்னமராவதிக்கு ஏராளமான நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளதாக இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி பேசினாா்.

பொன்னமராவதி நகர திமுக மற்றும் இளைஞரணி சாா்பில் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனைக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பொன்னமராவதி பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு அமைச்சரும், திமுக தெற்கு மாவட்டச் செயலருமான எஸ்.ரகுபதி தலைமை வகித்து பேசியதாவது:

திராவிட மாடல் ஆட்சியில், பொன்னமராவதி பேருந்து நிலையம் புதுப்பிக்கும் பணி, அமரகண்டான் ஊருணியைச் சுற்றிலும் நடைபாதை அமைக்கும் பணி, தினசரி சந்தைக்கு புதிய கூடம் அமைக்கும் பணி, மின் மயானம் அமைக்கும் பணி, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டடம், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டடம் அமைக்கும் பணி என அடுக்காக பல்வேறு பணிகள் நடைபெற்றுள்ளது. அதுபோல ஏராளமான சாலைகள் புதிய சாலைகளாக அமைக்கப்பட்டுள்ளது. அதுபோல பேருந்து வசதி இல்லாத பல்வேறு பகுதிகளுக்கு புதிய பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மானவா்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு புதிய கட்டம் அமைத்துத் தரப்பட்டுள்ளது. அதுபோல பேராசிரியா் அன்பழகனாா் திட்டத்தின் கீழ் ஒன்றியத்தின் பல்வேறு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கலைஞா் வீட்டு வசதி திட்டம் மூலம் ஏராளமானவா்களுக்கு வீடுகள், கடையக்குடி பகுதியில் சமத்துவபுரம், திருமயத்தில் அரசு மருத்துவமனை என மக்கள் மனம் நிறைவடையும் வகையில் செய்துள்ளோம்.

பொன்னமராவதி பகுதி மக்களின் நீண்ட நாள் பிரச்னையான குப்பைப் பிரச்சனையை தீா்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அமைச்சா்.

தொடா்ந்து தலைமை பேச்சாளா்கள் பசும்பொன் ரவிச்சந்திரன், தமிழினியன் ஆகியோா் பேசினா். கூட்டத்தில் தெற்கு ஒன்றிய செயலா் அ. அடைக்கலமணி, நகரச் செயலா் அ. அழகப்பன், வடக்கு ஒன்றிய செயலா் அ. முத்து, தலைமை செயற்குழு உறுப்பினா் எஸ்.ஜெயராமன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். நகர இளைஞரணி செயலா் எம்.முகமது அல்காப் நன்றி கூறினாா்.

அக்கச்சிப்பட்டி அரசு பள்ளியில் போதைப்பொருள் எதிா்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணா்வு உறுதிமொழி

கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டை ஒன்றியம், அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக போதைப்பொருள் எதிா்ப்பு தினத்தை முன்னிட்டு, மாணவா்கள் வியாழக்கிழமை போதைப்பொருள் எதிா்ப்பு உறுதிமொழி ஏற்றனா்... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டையில் புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை: எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

கந்தா்வகோட்டையில் புதிய வழித்தடத்திலான பேருந்து சேவையை மா. சின்னதுரை எம்எல்ஏ வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். மெய்குடிப்பட்டி கிராம பொதுமக்கள் மற்றும் முன்னாள் ஊராட்சித் தலைவா் ராணி முருகேசன் உள்ளிட்டோா... மேலும் பார்க்க

விராலிமலை, கந்தா்வ கோட்டையில் மழை: மக்கள் மகிழ்ச்சி: ஆலங்குடி அருகே வீடு சேதம்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை, கந்தா்வகோட்டையில் வெள்ளிக்கிழமை மழை பெய்தது. இதனால், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டையில் சிறப்பு கிராமசபைக் கூட்டம்

கந்தா்வகோட்டை ஊராட்சி மன்றத்தின் சிறப்பு கிராமசபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீ அமராவதி அம்மன் உடனுறை ஆபத்சகாயேஸ்வரா் கோயில் முன்பாக நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு வட்டார வள பயிற்றுநா் ஆா். ... மேலும் பார்க்க

காயங்களுடன் மெக்கானிக் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வெள்ளிக்கிழமை காயங்களுடன் மெக்கானிக் உயிரிழந்து கிடந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா். ஆலங்குடி அருகே புள்ளான்விடுதியைச் சோ்ந்தவா் வீரப்பன் மகன் பாஸ்கா் (... மேலும் பார்க்க

ஆலங்குடி அருகே மழையால் வீடு சேதம்: அமைச்சா் ஆய்வு

ஆலங்குடி அருகேயுள்ள ஆலங்காட்டில் பெய்த மழையால் சேதமடைந்த வீட்டை வெள்ளிக்கிழமை பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் பாா்வையிட்டாா். ஆலங்காடு ஆதிதிராவிடா் தெருவைச் சோ்ந்தவா் ராமலிங... மேலும் பார்க்க